ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர்

- முனைவர் பா.சத்யா தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -முன்னுரை
சங்க காலச் சமூக மக்கள் தொடக்கத்தில் இனக்குழுச் சமூகமாக வாழ்ந்தனர். தங்களுக்கான ஐந்திணைப் பகுப்பில் அவரவர்களுக்கான வாழ்வுச் சூழலை மேற்கொண்டனர். ஆனால் வேளாண்மையின் செழிப்பும், வாணிபத்தின் வளர்ச்சியும் மேம்பட மெல்ல நிலவுடைமைச் சமூகம் தோற்றம் பெற்றது. இதன் விளைவாக அரசர்களும் நிலக்கிழார்களும் உருவாயினர். பெண்களையும் நிலத்தையும் உடைமைப் பொருள்களாகக் கருதினர். அதில் பெண் பண்பாட்டையும் குடும்ப அமைப்பையும் கட்டிக்காக்கும் பொறுப்புடையவளாக நியமிக்கப்பட்டாள்.

தமிழ்ச் சமூகம் அரசர்களும் நிலக்கிழார்களும் தலைமை ஏற்று வழி நடத்திய போதும் அடிமை முறையோ தீண்டாமை முறையோ வழக்கத்தில் இருந்ததாகத் தென்படவில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற நிலையிலேயே சமூக வாழ்வு சூழல் நிகழ்ந்ததை அறிய முடிகிறது. பேரரசர்களின் தோற்றத்திற்குப் பின்னரே போர்ச்சூழலில் பிறநாட்டின் வீரர்களை சிறைப்பிடித்தலும் பெண்ணைப் பொருளாக எண்ணி கொள்ளையிட்டு கொணர்தலும் நடந்தேறியது. இவ்வாறு கொள்ளையிட்டு கொணர்ந்தப் பெண்களே “கொண்டி மகளிர்” எனப்பட்டனர்.

ஆரியர்களின் நுழைவுக்கு பின்னர் இச்சூழல் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழக வரலாற்றில் இவர்களின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகச்சூழலில் பெண்கள் இரண்டாம் தரப்படுத்தப்பட்டதும் ஒதுக்கப்பட்டதும் இதன் பின் தான் அதிகரித்தது எனலாம்.

“கி.பி.3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் சாசனம் ஒன்றின்படி நிலத்தோடு அதனைச் சேர்ந்த ஆட்களும் தானமாக அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது”என்று ‘இந்தியாவில் வரலாறு’ எனும் நூல் (மாஸ்கோ 1979-பக்:194) கூறும் குறிப்பும் கவனிக்கத் தக்கது.

இன்னும் குறிப்பாக அடுத்த நாட்டுக் கூட்டத்தினருடன் சண்டையிட்டு, வெற்றி கொண்ட பிறகு அவர்தம் ஆடு, மாடு செல்வங்களைக் கொள்ளையடித்து வந்ததோடு அவர்தம் வீட்டு – நாட்டுப் பெண்களையும் அடிமைப் பெண்களாகப் பிடித்து வந்த செய்திகளும் வெகு சில (வென்றவர் பெருமை கூறும்) இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.

Continue Reading →

சிறுகதை: எட்டாப் புத்தகம்!

சிறுகதை: எட்டாப் புத்தகம்!பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்.”நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!”என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை..

.மனோவும் ,சதிஸும் …கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன.

.மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய‌ அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக்கிறவ‌ன். மனோவிற்கு நண்பன். எனவே இவனுக்கும் பழக்கம் . பிறகு, வேற வேற பள்ளிக்கூடங்களிற்கு படிக்கப் போய் ….இப்ப காலமும் நிறைய மாறி… விட்டிருக்கிறது சதீஸ் பட்டப்படிப்புக்கு தெரிவாகி பல்கலைக்கழகத்தில் . படிக்கிறவன்.

முதல் நாள் அமைப்புத் தோழர்களான பொன்னம்பியும், ரகுவும் வ‌ந்திருந்தவர்களின் புனை பெயரின் கீழ் (விபரங்களை) சிறு குறிப்புக்களை திரட்டிக் கொண்டிருந்தார்கள். பொன்னம்பிக்கு இவனை ஏனோ பிடித்திருந்தது. நண்பனாகி …இந்த கேள்வியை எழுப்புகிறான்.

இவனுக்கு எப்படி ஒரு விடுதலை அமைப்பு இயங்கிறது என்பதே தெரியாதவன். ‘போராளிகள்’ ஆயுதம் தூக்கியவர்கள் எண்ணமே அவன் மனதில் இருக்கிறது. எனவே, விடுதலையைப்பற்றி தெரிவதற்காகவும் இங்கே வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறான். இப்ப‌, விடுதலை விசயங்கள் தெரியாத மாதிரி….,அப்ப, படிக்கிற காலத்திலே விளையாட்டின் அவசியமும் அவனுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. கிராமப் பள்ளிக்கூடம் என்பதால் மாற்றாந் தாயின் பிள்ளைகள் போன்ற புறக்கணிப்புக்கள் அதிகம், ஆசிரியர்கள் பற்றாக்குறைகள், சுகாதாரம்,கணிதம், விஞ்ஞானம்… என எடுக்கிறவரான லிங்கம் மாஸ்ரர் தமிழ்ப்பாடம் எடுக்கிறார் (இவர் பத்திரிகையில் எழுதுறவர் என்பதால்,அதிபர், ஒருமாதிரி அவரை பப்பாவில் ஏற்றி, மடக்கிப் பேசி… சாதித்து விட்டார்). உடற் பயிற்சிக்கென ஒரு ஆசிரியர் இல்லை. எனவே, அங்கே மற்றைய கிராமப் பள்ளிக்கூடங்களைப் போல கால்பந்து,கிரிகெட்(கொக் போலில் வேறு விளையாட வேண்டும்,நினைத்துப் பார்க்கவே வேண்டாம்),எல்லே.. என …விளையாட்டுக் குழுக்கள் (டீம்கள்)ஒன்றிரண்டு கூட‌ எழவில்லை. இருந்திருந்தால் மாணவர்கள் அதில் பங்கு பற்றியிருப்பார்கள். இவற்றை விட சாரணர்,பொலிஸ், ஆமிக் கடேஸ் என அமைப்புகளும் இருக்கின்றன. கிராமங்கள் அவற்றைக் கனவில் தான் பார்க்க‌ வேண்டும். இவற்றை விட இலக்கியக்குழுக்கள் என கலை விழாக்களை நடத்துறவையும் இருக்கின்றன. நகரத்தினரை விட கிராமத்தவர்களில் கதைப்புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் குறையுறதுக்கும் இதுவும் காரணம்.

Continue Reading →

2004 சுனாமி நினைவலைகள்: அனாமிகா – கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!

அநாமிகாபாலசிங்கம் சுகுமார்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடமொன்றின் தலைவராக இருந்தவரும், கூத்துக்கலைகளில் ஆர்வம் மிகுந்தவருமான திரு. பாலசிங்கம் சுகுமார் அவர்கள் தன் மகளைப்பற்றி அவ்வப்போது முகநூலில் பதிவுகளிடுவார். இப்பதிவுகளுக்குப் பின்னாலுள்ள வலி, சோகம், துயரம் வாசிப்பவர் நெஞ்சங்களைப் பாதிப்பவை. ஆனால் அவற்றையும் மீறி அவர் தன் மகளுக்குச் சொற்களாலான கவிமாலை புனைந்து இலக்கியத்தில் நிலையாத இடத்தை ஏற்படுத்தி விட்டார். 2004இல் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாப்பிரதேசங்களைப் பாதித்த ஆழிப்பேரலைக்குப் பலியான அவரது மகள் பற்றிய அவரது உணர்வுகளில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.

அவர் தன் மகளைப் பற்றி அண்மையில் எழுதிய பதிவொன்று கீழே:

கூத்தில் நிமிர்ந்து ஈழ நாட்டிய கனவை விதைத்த மகள்!
200ம் ஆம் ஆன்டு பேராசிரியர் மெளனகுரு இராவணேசன் தயாரிப்புக்காக கிட்டத்தட்ட ஒரு வருட பயிற்சியயை ஆரம்பித்தார்.அந்த பயிற்சியில் நான் உட்பட பல விரிவுரையாளர்களும் இணைந்து கொண்டனர் மகள் அனாமிகாவும் இணைந்து கொண்டாள் பெரும்பாலும் மாலை நேரங்களிலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயிற்சிகள் நடை பெறும் மிகக் கடுமையான பயிற்சிகள் நான் வேலைகள் காரணமாக பயிற்சிகளை தவற விட்டாலும் அவள் நாட் தப்பாமல் நேரம் தவறாமல் கலந்து கொள்வாள் .

பயிற்சியில் அவளது திறன் அசாத்தியமானதாக இருந்தது.அதனால் பல வேளைகளில் அவளை முன்னுக்கு விட்டு மற்றவர்களுக்கு பயிற்சியயை வழி நடத்துவார்.அவள் பரதமும் படித்தாள் என்பதால் அவள் ஆட்டத்தில் அடவுகள் அற்புதமான காட்சிகளாக விரிந்து வியப்பை தரும். வீட்டில் அவளை ஆடச் சொல்லி பார்த்து பார்த்து மகிழ்வேன். அவழின் ஆடல் திறனை நானும் பேராசிரியர் மெளனகுரு அவர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம் அப்போது உருவானதுதான் என் ஈழ நாட்டியக் கனவு. 2002ஆம் ஆண்டு நடை பெற்ற கூத்து பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் மெளனகுருவின் கூத்து விளக்க செயல் முறை விளக்கத்துக்கு அனாமிகா ஆடிக் காட்டி விளக்கி நின்றாள். எப்படி பரத நாட்டியத்துக்கு தனியொருவரைக் கொண்டு அரங்கேற்றம் செய்யப் படுகிறதோ அதே போல மட்டக் களப்பு வடமோடிக் கூத்துக்கு அனாமிகாவை வைத்து ஒரு அரங்கேற்றம் செய்வது அதனை 2005 ஆம் ஆண்டு செய்வது எனவும் தீர்மானித்தோம். ஆனால் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 சுனாமி எல்லாக் கனவுகளையும் கழுவிக் கொண்டு நிர் மூலமாக்கிக் கொண்டு சென்றது

மகளைப்பற்றி அவர் முகநூலில் பதிவிட்டிருந்த கவித்துளிகள் சில கீழே:

1.
எனக்கு
எல்லாமாய் இருந்தவள்
நீ….
சொல்லாமல் வந்த
சுனாமியில்
கரைந்த
அந்த நாளோடு
நான்
இல்லாமல் போனேன்

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் சார்பெழுத்துகள் குறித்த உரைமறுப்புகள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் தொடங்கி பல்வேறு உரைகள் எழுதப்பட்டுள்ளன. தொல்காப்பியச் சூத்திரங்களுக்குப் பொருள் விளக்கம் தரும் அவ்வுரைகளுக்கு இடையே வேறுபாடுகளும் மறுப்புகளும் விவாதங்களும் ஏராளமாக உள்ளன. உரையாசிரியர் ஒருவரின் உரையில் குறிப்பிட்ட உரைப்பகுதிகள் பிழை என்று இனங்காணப்படுகின்றன. இப்பிழையுரைப் பகுதிகள் பொருந்தா உரைகள் எனப்படுகின்றன. இப்பொருந்தா உரைகளை மறுத்தும், மறுப்பிற்கான காரணங்கள் சுட்டியும் விளக்கும் உரைகள் மறுப்புரைகள் எனப்படுகின்றன. பொருந்தா உரையை மறுப்பதோடு அவ்வுரைக்கு மாறான வேறொரு பொருந்தும் உரை தருதல் மாற்றுரை எனப்படும். இவ்வாறான பொருந்தா உரைகளையும், மறுப்புரைகளையும், மாற்றுரைகளையும் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், வேங்கடராசலு ரெட்டியார், சிவஞான முனிவர், பாலசுந்தரம் ஆகியோர் உரைவிளக்கத்திலும் ஆய்வுரைகளிலும் காணமுடிகின்றன. இக்கட்டுரை தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் காணலாகும் மொழிமரபில் சார்பெழுத்துகள் குறித்த மறுப்புகளை மட்டும் ஆய்ந்து விளக்குவதாக அமைகிறது.

தனிச்சொல் குற்றியலிகரம்
ஒரு சொல்லில் ஒலிச்சூழல் காரணமாக இகரம் குறுகி தன் ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும். அப்படிக் குன்றி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும். இது தனிச்சொல்லில் ‘மியா’ என்ற அசையில் தோன்றும். கூட்டுச் சொல்லில் குற்றியலுகரச் சொல் யகர முதற்சொல்லோடு புணரும்பொழுது அக்குற்றியலுகரம் இகரமாக மாறும். அந்த இகரம் அரைமாத்திரை குறைந்து ஒலிக்கும்.

தனிச்சொல் குற்றியலிகரத்தை,

“குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகர மூர்ந்தே.”(சூத் – 34)என்ற சூத்திரம் குறிப்பிடும்.

‘கேள்’ என்பது உரையசைச் சொல் அல்ல.
ஒருவரிடம் தான் கூறும் பொருளை, அவர் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சொல் உரையசைச் சொல் எனப்படும். மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கு உரைகண்ட இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கேண்மியா, சென்மியா என்பனவற்றை உதாரணங்களாகத் தந்துள்ளனர். நச்சினார்க்கினியர் ‘கேண்மியா’ என்ற சொல்லைப் பகுத்து,‘கேள்’ என்பதை உரையசைச் சொல்லாகவும், ‘மியா’ என்பதை இடைச்சொல்லாகவும் குறிப்பிடுகிறார்.1

இக்கூற்றை வேங்கடராசலுவும் சுப்பிரமணியரும் மறுத்துள்ளனர். ‘மியா’ என்பதே முன்னிலை அசைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்குச் சான்றாக தொல்காப்பிய சொல்லதிகார இடையியலில் உள்ள

“மியாயிக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல்.” தொல் – சொல் -சூத் – 269.

என்ற சூத்திரத்தை சுப்பிரமணியர் காட்டுகிறார்.

Continue Reading →

இயற்கை விவசாய வாரம் 08/01/2018 to 14/01/2018 : இலங்கையின் வடகிழக்கில் ஜனவரி 20188இல் நடைபெறவுள்ள கல்வி, விவசாயம் பற்றிய பட்டறைகள்!

-  முனைவர் ஆர். தாரணி -ஜனவரியில் இலங்கையின் வடகிழக்கில் கல்வி, விவசாயம் சம்பந்தமாக நடைபெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் விவசாயிக்களுக்காக நடைபெறவுள்ள பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் பங்குபற்றவுள்ள தகவலை முனைவர் தாரணி அவர்கள் அறியத்தந்திருந்தார். அவை பற்றிய அவர் அனுப்பிய விபரங்களைக் கீழே அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன். இவர்களது திட்டம் பூரண வெற்றியடைய வாழ்த்துகள்!

இப்பட்டறைகளில் கல்வி மற்றும் விவசாயம் பற்றிய பட்டறைகளில் பங்குபற்றவுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:

Education:
1) Prof.Dr Jayanthasri Balakrishnan
2) Prof.Dr Balakrishnan ADIYODI
3) Dr.R.Dharini, Assistant Professor of English, Government Arts College
4) Dr. E.Bennet, Associate Professor of English, National College, Trichy
5) Mrs.S.Sharon Shakkila Swarnavathy
6) K Venkatesan , Entrepreneur Development  ( 3days)

Agriculture:
7)  Murugaiah Balasubramanian (Pamayan) – Soil and Water
8).  S.Ramasamy sundararaman (S.R. Sundararaman) – Crop Management
9).  Varanavasi gounder Eswaramurthy (Ravi) (vermicompost)
10)  P. Sathurakiri (Integrated farming)
11) (Professor) Nadarajah Sriskandarajah PhD, Professor Emeritus, Swedish University of Agricultural Sciences, Uppsala, Sweden
12) (Dr) Sridevy Sriskandarajah PhD, Research Scientist

Continue Reading →

ஆய்வு: நன்னெறி காட்டும் சமுதாய நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
இடைக்கால நீதி இலக்கியங்களில் ஒன்று நன்னெறி.இந்நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.எளிய இனிய நன்மை தரும் 40 வெண்பாக்களால் நன்னெறிகளைக் கொண்ட நூலை இயற்றியவர்.இவரின் காலம் 17 ஆம் நூற்றாண்டு ஆகும்.இவர் காஞ்சி புரத்தில் வாழ்ந்து வந்த லிங்காயதர் வகுப்பைச் சார்ந்தவர்.தம் தந்தையின் ஆசிரியரான குருதேவரிடம் திருவண்ணாமலையில் அவர் இளமைக் கல்வியைப் பயின்றார்.தக்கோர் பலரிடம் இலக்கணம் கற்றவர்.இறுதியில் நல்லாற்றூர் எனும் பதியில் வாழ்ந்திருந்த போது அவர் தம் 32 ஆம் வயதில் சிவனடி சேர்ந்தார்.அந்த நல்லாற்றுரே பின்னர் துறைமங்கலம் என்று பெயர் பெற்று விளங்கிய காரணத்தால் அவர் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என வழங்கப்படுகிறார்.இவர் பலப்பல நூல்களை இயற்றியுள்ளார்.அவற்றுள் புகழ்மிக்கவை பிரபுலிங்கலீலை,சித்தாந்த சிகாமணி, நால்வர் நான்மணிமாலை,சீகாளத்திப்புராணத்தின்ஒருபகுதி,சோணசைலமாலை,திருச்செந்திலந்தாதி,திருவெங்கைக் கலம்பகம்,வேதாந்த சூடாமணி,திருக் கூவப்புராணம் முதலியனவாகும.; இவர் பல நூல்கள் இயற்றியிருப்பினும் நன்னெறியில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

அன்புடைமை
வள்ளுவர் அன்புடைமை என்ற அதிகாரத்தை தனி அதிகாரமாக வகுத்துள்ளார்.கிறித்துவ மதமும் உன்னை நீ அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய் என்கிறது.இவ்வுலகில் அன்பு இல்லாதவனுக்கு இடம்,பொருள்,ஏவல் முதலான வசதிகள் இருந்தும் அவனுக்கு என்ன பயன் உண்டாக்கும் என்கிறது இந்நூல்.இதனை,

இல்லானுக்கு அன்புஇங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் – நல்லாய்   
மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு (நன்.15)

என்ற பாடலானது அன்புடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் புலப்படுகிறது.

இன்சொல்கூறல்
உலகத்தில் வாழும் எல்லா மக்களும் இனிய சொற்களையே பேச வேண்டும்.இன் சொல் பேசுவதே சிறந்தது .இனியவை கூறல் என்ற அதிகாரத்தை 10 ஆவது அதிகாரமாக வள்ளுவர் வகுத்திருப்பதற்கு காரணம் சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இனிமையில்லாத சொற்களைப் பேசாமல் இருப்பதற்காகவே.இனிமையான சொல்லை கனிக்கும், இனிமையில்லாத சொல்லை காய்க்கும,; ஒப்பிட்டுக் கூறியிருப்பதை,

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (100)

என்ற குறளின் வழி தெளிவுத்துள்ளார்.இக்கருத்துக்களுக்கு ஏற்ப நன்னெறியும் இனியசொற்களையே பேச வேண்டும் என்று கூறுகிறது.இதனை,

இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொல் என்றும் மகிழாதே –பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல்

Continue Reading →

கவிதை: தொப்புள் கொடியும் முக்கணாம் கயிறும்.

- தம்பா (நோர்வே) -

“வா மகனே வா
உன் வருகையே
எமக்கு சுக்கிர திசையாகும்.~

“வேண்டாம் பெற்றவரே வேண்டாம்,
ஒன்றுவிட்ட அகவையை
மூலதனமாக்கி மூச்சிரைக்க வைக்காதீர்.”

“கந்து வட்டியும் காணா வட்டியும்
குலைந்து போகுது.
போட்டதை எடுத்ததுமில்லை.
பல்மடங்காகி பெருகியதுமில்லை.
வா மகனே வா”

” உயிர் ஒன்றும் பணமல்ல
முதலீடு செய்வதற்கு,
உணர்வுகள் ஒன்றும் பொருளல்ல
விற்பனைக்கு வைப்பதற்கு,
மகிழ்ச்சி ஒன்றும் கணக்கல்ல
லாப நாட்டம் பார்ப்பதற்கு.”

“ஊருக்கும்  உலகுக்கும்
தனயனின் வளச்சியை
பறைச்சாற்றும் மகிழ்வறிவாயோ?”

“உதயத்தில் உதிர்ந்த
லச்சோபலட்ச கணங்களில்
என்வாழ்வும் என்மகிழ்வும்
அறிந்த கணமேதுமுண்டோ?

Continue Reading →

” இனிவரும் சனிமாலை சந்திக்கும் வரை இங்கித வந்தனங்கள் தந்து விடைபெறுவது சண்முகநாதன் வாசுதேவன்”! புத்தாண்டு மலரும் வேளையில் சொல்லாமல் விடைபெற்ற எனதருமை “மச்சான் ” வானொலிக்கலைஞன்!

சண்முகநாதன் வாசுதேவன்“சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது
தாகமெனைத்தழுவுவதால் நாடுகிறேன் போதையினை
பாவங்கள் சுமையாகிப் பலவீனம் சேரும்போது
பாவி நான் தேடுகின்றேன் மரணத்தின் தேவனை
கடந்தவைகள் மறந்தபோது காலங்கள் சென்றபோது
காசுபணம் சேரும்போது – மீண்டும்
கல்லறையால் எழும்புகிறேன்
சில்லறையாய் மாறுகிறேன்”

இப்படி ஒரு கவிதையை 03-07 – 1975 ஆம் திகதி எழுதிய கவிஞன் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டான். ஈழத்து கவிஞி சிவரமணி, தமிழகக்கவிஞர் ஆத்மநாம் வரிசையில் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு மறைந்த எனது இனிய நண்பன் சண்முகநாதன் வாசுதேவன் எங்களைவிட்டுப்பிரிந்து 24 வருடங்களாகின்றன.

காலமும் கணங்களும் தொடரில் நான் இதுவரையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி எழுதியிருக்கின்றேன். அவர்களில் சிலர் அற்பாயுளிலும் சிலர் முதுமைக்காலத்திலும் மறைந்தவர்கள். எனினும் நான் எழுதியவர்களின் வரிசையில் தற்கொலை செய்துகொண்டு அற்பாயுளில் மறைந்தவர் பற்றியும் எழுதநேர்ந்திருக்கிறது. தூக்குக்கயிற்றை முத்தமிடுகின்ற அந்தக்கணம் அவன் ஒரு செக்கண்ட் யோசித்திருப்பானேயானால் அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கிய, வானொலி ஊடகப்பணிகளில் மேலும் பல புதிய உச்சங்களைத் தொட்டிருப்பான்.

மெல்பன் கலைவட்டம் மொனாஷ் பல்கலைக்கழகத்தில், “பெற்றோர் பிள்ளைகள் உறவு” என்ற தொனிப்பொருளில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி அரைநாள் பகல்பொழுது கருத்தரங்கினை நடத்தியது. அதில் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த காலைவேளையில் எனதும் வாசுதேவனதும் நண்பரான இலங்கையில் முன்னர் ஆசிரியப்பணியிலிருந்த சம்பந்தன் தகவல் தந்தார். 1993 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் மலரவிருந்த 1994 புத்தாண்டிற்காக வாசுதேவனின் நண்பர்கள் ஒன்றுகூடல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். வாசுவும் டிசம்பர் 31 ஆம் திகதியன்று மதியம் அந்த மண்டபத்திற்குச்சென்று ஏற்பாடுகளை கவனித்தான். அலங்கார வேலைகளிலும் ஈடுபட்டான். ஆனால், புத்தாண்டு மலர்ந்த வேளையில் அவன் தனது உயிரைத் துறந்தான்.

Continue Reading →

ஆய்வு: சங்ககால மன்னர்களும் வர்க்க முரண்களும்

முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் பரிணாமக் கொள்கையைத் தழுவி ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer 1820 – 1903) சில சமூக பரிணாமத்தினை பற்றி சமூகவியல் விதிகள் (Principles of Sociology ) என்னும் நூலில் பல கருத்துக்களை முன் வைத்தார்.

“உயிரினங்களின் பரிணாம முறையில் வளர்ச்சி அடைந்ததைப் போலவே சமூகமும் படிப்படியாக பரிணமித்து வளர்கிறது.  சமூக பரிணாமம் இயங்கு முறையில் அதன் தொடக்கத்தில் ஒரு சிறிய குழுவாக இருந்து பின்னர் பல கூட்டு நிலைகளை அடைந்து அதற்குபின் சமூகமாக மாறுதல் அடைகிறது.  பல குடும்பங்கள் ஒன்றிணைந்து குலங்கள் உருவாயின.  குலங்கள் இனக் குழுவாக ஒன்றுபட்டன.  இனக்குழுக்கள் ஒன்றிணைந்து தனி அரசு நாடாக அமைந்தன.  இவ்வாறு சமூகம் சிக்கல் நிறைந்த பரிணாம வளர்ச்சியில் விரிவடைந்தது.

ஸ்பென்சர் சமூகங்களை போரிடும் சமூகம் என்றும,; தொழில் சமூகம் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கிறார்.  போரிடும் சமூகத்தின் அதிகாரம் ஒரு மையத்தில் அமைந்திருக்கும்.  தொழில் சமூகத்தில் அதிகாரம் எல்லோரிடமும் பரவி இருக்கும்.  போரிடும் சமூகத்தில் கட்டுப்பாடு மிகுதியாக இருக்கும்.  கட்டுப்பாடு மைய அரசிலிருந்து பரவும்.  ஆனால் தொழில் சமூகத்தில் கட்டுப்பாடு அதிகமாக இருக்காது.  மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின்படி கடந்து கொள்வர்.  போரிடும் சமூகத்தில் மைய அரசிலிருந்து கட்டளைகள் அவ்வபோது வந்து கொண்டு இருக்கும்.  மக்களின் வாழ்க்கை சுதந்திரமாக இருக்காது.  ஆனால் தொழில் சமூகத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும்.  போரிடும் சமூகத்தில் மக்களின் உரிமைகள், கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர்களால் தங்களுடைய உரிமைகளை அனுபவிக்க முடியாது.  இத்தகைய சமூகங்கள் வெவ்வேறு பரிணாம நிலைகளில் இருக்கக் கூடும் என்று ஸ்பென்சர் கருதுகிறார்.”  (பக். 28-29 சமூகவியல், எஸ். சாவித்ரி)

இத்தகைய இருவேறுபட்ட சமூக அமைப்பு முறையையும் சங்க காலம் என்று கூறப்படும் காலத்திய சூழல் என்பதை உணர முடிகிறது. நில அடிப்படையிலான மக்கள் வாழ்வில் தொழிலுக்கு ஏற்றவாறே மக்கள் வாழ்வு ஒருபுறம் அமைந்திருந்தது.  மற்றொரு புறம் போர் அடிப்படையிலான சமூகச் சூழலை அறிய முடிகிறது. இருவேறு சமூக நிலையையும் காண முடிகிறது.  அடிப்படையில் இனக்குழு சிதைந்து, அடிமையுடைமை சமுதாயச் சூழலிருந்து மன்னர் உடைமை சமூகச் சூழல் மாற்றம் பெற்ற காலப்பகுதியென கருத இடமுண்டு.

Continue Reading →

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்!

– ‘ஓவியா பதிப்பக’ உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் ‘மகாகவி’ சஞ்சிகையின் ‘திசம்பர்’ இதழ் பன்னாட்டிதழாக மலர்ந்திருக்கின்றது. இச்சிறப்பிதழில் எனது கவிதையான ‘காலவெளிப்பயணியின்  நெடும் பயணம்’ கவிதை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். –

Continue Reading →