எழுத்தாளர் லெ.முருகபூபதியுடனான நேர்காணலொன்று!

அண்மையில் இலண்டனுக்குச் சென்றிருந்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களை     IBC தமிழ் தொலைக்காட்சியில் எழுத்தாளர் எம்.என்.என் அனஸ் அவர்கள் நேர்காணல் செய்தார்ர். அந்நேர்காணலுக்கான  காணொளி இது. எழுத்தாளர்…

Continue Reading →

கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. இயேசுவின் முகத்தில்  பயத்தின் சாயல்

மூக்கைத் துளைத்து
நினைவில் வடுவான
ரத்த வாசனை!

எப்பொழுது  தோட்டாக்களின்
உறக்கம் களையுமோவென்று
உறங்காமல் இருந்த
பொழுதுகள் அதிகம்!

மனித ஓலங்களின் ஓசை
அடங்க மறுத்து தூங்கி
சிவந்த கண்களோடு பகல்!

Continue Reading →

கவிதை: வாழ்க்கைன்னா இதுதான்

தாயாரின் வலியிலே தாரணியில் வீழ்வதும்தவழ்வதும் வளர்வதும் தானாகி நிமிர்ந்திடஓயாது கற்பதும் உழைப்பதும் உயர்வதும்ஒருத்தியை மணப்பதும் உறவினில் கலப்பதும்தீயாக இருப்பதும் தேனாகி சுவைப்பதும்தீராத மோகத்தில் திரிவதும் திடீர்நோயாகி வீழ்வதும்…

Continue Reading →

கவிதை: குரல் வராத வீட்டில் பெய்த மழை!

- முல்லைஅமுதன்

சிறு தூறலாய்
காட்சி தந்த பெருமழையாயிற்று.
அம்மா
பெரிய கிடாரமாய்
கொண்டுவந்து
கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள்.
மரங்கள் முறிந்ததாயும்,
காற்று பேயாய் அடிப்பதாகவும்
கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய்
சன்னலோரம்
குந்தியிருந்தவளுக்கும்
கேட்டது.
அப்பா மூலையில் குடங்கிப்போய்
பிணம்போலக்கிடந்தார்..
மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்..
இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்..
கடைசிக்குரலும்
‘அம்மா பசிக்குது’
சொல்லி அடங்கிப்போனது.
அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா?
அழும் குழந்தைக்குப்பால்தர…??

Continue Reading →

கவிதை: நல்லிணக்கம் சமாதானம் நாட்டிலோங்கச் செய்திடுவோம் !

வெறி   கொண்டு    அலைகின்ற 
நெறி  பிறழ்ந்த  கூட்டமதால்
கறை   படியும்  காரியங்கள்
கண்  முன்னே  நடக்கிறது
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் என்னாளும்
கதி  கலங்கிப்   போகின்றார்   !

மதம்  என்னும்  பெயராலே
மதம் ஏற்றி  நிற்கின்றார்
சினம்  என்னும் பேயதனை
சிந்தை கொள  வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி  உற்று  திரிகின்றார்  !

Continue Reading →

‘சமாதானம்;, அகிம்சை மற்றும் சமத்துவத்திற்கான பெண்கள்’ அமைப்பின் அறிக்கை!

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை – மே 2019  எமது கூற்று

'சமாதானம்;, அகிம்சை மற்றும் சமத்துவத்திற்கான பெண்கள்' அமைப்பின் அறிக்கை!இலங்கையில் நீதி, சமத்துவம், அர்த்தமுள்ள சமாதானம் ஆகியவற்றை நிலைநாட்ட செயற்படுபவர்கள் நாங்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை எமது தீவின் பல இடங்களிலும் வெடித்துள்ள நிலையில ;இதனை எழுதுகிறோம். 13.05.2019 அன்று பள்ளிவாசல்கள், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வடமேல் மாகாணத்தின் சிலாபத்தில் வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகின. நேற்றும் (14.05.2019) வட மேல் மாகாணத்தில் உள்ள கினியாம, கொட்டம்பிட்டிய போன்ற பல இடங்களில் வன்முறை நிகழந்ததை அறிகின்றோம். இவை இன்னும் தொடர்கின்றன.

தமிழருக்கு எதிரான வன்முறை நிகழ்ந்த பலநுறு உயிர்களைப் பலிகொண்ட 1983 கறுப்பு ஜூலை மாதத்தை எம்மில் பலர் முகம் கொடுத்து வாழ்ந்த அனுபவம் உடையவர்களாக உள்ளோம்;. பல ஆயிரம் உயிர்களைக் காவு கொண்ட உள்நாட்டுப் போhக்.கால கட்டத்திற்கு ஊடாக வாழ்ந்த கசப்பான அனுபவத்தை உடையவர்கள் நாங்கள், 2014 இல் அழுத்கமவிலும் கடந்த வருடம் திகணவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தபோது நாங்கள் பயத்துடன் இருந்தோம். ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த வன்முறையால் இறந்தவர்களையும், காயம் அடைந்தவர்களையும் சிதைந்த குடும்பங்களையும் பற்றி ஆறாத துயரம் கொண்டவர்களாக உள்ளோம்.  சகல மனிதாபிமானத்துக்குமான விண்ணப்பமாக இந்த விண்ணப்பத்தை நாங்கள் எழுதுகிறோம்.

சகல இலங்கைப் பிரஜைகளையும் தத்தமது பெறுமதி, நம்பிக்கை சமயம், மனிதாபிமானம் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள் என வேண்டுகி;றோம். என்ன விலை கொடுத்தாவது வன்முறைக்கு எதிராகச் செயற்படுமாறு சகல இலங்கை பிரஜைகளையும் வற்புறுத்தி வேண்டுகின்றோம். ஒருமித்த அரசியல் தலைமைத்துவத்துடன் வன்முறையை உடனடியாக ஒழித்து, பொறுப்புடமை நியாயம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என எமது பிரதிநிதிகளை வற்புறுத்துகின்றோம். நிறுத்த முடியாத ஒரு யுத்தத்தை நோக்கிய பாதையில் மீண்டும்; அடி எடுத்து வைக்க மாட்டோம் என உறுதிபூணுமாறு சகலரையும் கேட்கி;றோம்

மேலும் மேலும் நிகழும் மரணங்களுக்காகத் துக்கம் அனுஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இவை நிகழ்ந்தபின் கூறுபவை வெற்றுரைகள் ஆகும். பாவத்திற்கு மன்னிப்பு கேட்கவோ உடந்தையாக இருந்தமைக்கு விளக்கம் அளிக்கவோ எம்மால் முடியாமற் போய்விடும்;. ஒரு தேசம் என்ற வகையில் இவ்வளவு கஸ்டங்களையும் அனுபவித்தும்  இன்னுமொரு கறுப்பு ஜூலை நிகழ்வதைத்த தடுக்க முடியாவிட்டால் நாம் எதனைச் சாதித்தோம்? எங்கள் கூட்டுப் பிராத்தனையில் எல்லா மக்களையும் குறிப்பாக இத் தருணத்தில் வலுவற்றவர்களாக  உணரும் அனைவரையும் உள்ளடக்குகிறோம். நாங்கள் வன்முறையை எதிர்த்துச் செயற்படுவோம். வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்!.

Continue Reading →