ஆய்வு: முனைவா் மலையமானின் நீா்மாங்கனி நாடகக் கட்டமைப்புத்திறன்

ஆய்வுக் கட்டுரைகள் படிப்போம்.பேராசிரியா் மலையமான்தமிழ்மொழி  உலகின் முதல் மொழி, மூத்தமொழி, மூவா வனப்புடைய மொழி. “இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”1 என்று பாரதியும் தமிழின் பழமையை வெளிக்காட்டி நிற்கின்றார்.  உலகின் ஒப்பற்ற செம்மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழி  இயல், இசை, நாடகமென மூன்று பிரிவுகளையுடையதாய் இலங்குகிறது.

முத்தமிழில் மூன்றாந்தமிழான  நாடகத்தமிழ், கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியதாக விளங்குவது திண்ணம்.படித்தறியா பாமரா்களும் விரும்பி ரசிக்கும் இக்கலை பாமரா்களின் பல்கலைக்கழகமாக விளங்குகிறது. நாடு +அகம்= நாடகம். அகத்தை நாடி வரும் கலை நாடகம்.  உயிர்ப்பான இக்கலையை இயலும் இசையும் கூடி, எண்வகை மெய்ப்பாடுகளும் சுவையுந் தோன்ற மேடையில் தோன்றி பாடி ஆடி நடித்து வெளிப்படுத்துவா். இத்தகு சிறப்புடைய நாடகமானது மேடை நாடகம், செய்யுள் நாடகம் என இருவகைகளில் இயற்றப்படுகிறது. பேராசிரியா் மலையமான் இயற்றியுள்ள நீா்மாங்கனி, செய்யுள் நாடக வகையைச் சார்ந்தது. இந்நாடகக் கட்டமைப்புத்திறனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பேராசிரியா் முனைவா் மலையமான்:
மலையமான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 15.07.1932 இல் நாராயணணன் –பாலகுசாம்பாள் இணையரின் மகனாகப் பிறந்தவா். இயற்பெயா் இராசகோபாலன். போளுரில் தொடக்கக் கல்வி கற்றவா். புலவா்,  முதுகலை முதல் தனது இடைவிடாத முயற்சியின் மூலம் முனைவா் பட்டம்வரை பெற்றுள்ளவா். பதிவுத்துறையில் எழுத்தா், வரைவாளா், பள்ளி ஆசிரியா், பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியா், நூலகா், பதிப்பாசிரியா் என பல்வேறு துறைகளில் தனது அயராத உழைப்பையும் சேவைகளையும் புரிந்துள்ளார். தான் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் எழுத்துறையில் தொடா்ந்து தன் பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.

“சில ஆய்வாளா்கள் கவிதைகளின் சுவை இன்பத்திலே திளைத்து அவற்றை மாந்தி குடிப்பதும் மாந்தா்களுக்கு கொடுப்பதும் வழக்கமாகக் கொள்வா். மலையமானோ மூலத்தையே கண்டறிந்து தமிழ் ஞாலத்திற்குக் கொடுக்கிறார்”2 என்கிறார் இலக்கிய செல்வா் முனைவா் குமரி அனந்தன்.

மலையமான் கவிதைகள்(கவிதை), தமிழ் ஆட்சி மொழி சிக்கல்கள் (ஆராய்ச்சி), நோபில் பரிசு பெற்ற கவிஞா்கள்(வாழ்க்கை வரலாறு), திருக்குறள் துளிகள்(கட்டுரை)  ஆகியவை பெரியவா்களுக்கான இலக்கிய கொடையாக அளித்துள்ளார். சிறுவா் இலக்கியத்துறையில் மிக்க ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு பனித்துளிக் கதைகள், பண்புநெறிக் கதைகள், மூன்று அரும்புகள் முதலிய கதை இலக்கிய நூல்களையும் அறிவியல் சிறுகதைகள் உள்ளிட்ட அறிவியல் கதைகள் அறிவியல் வெளிச்சங்கள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரை நூல்களையும் பல்வேறு தொகுதிகளாக எழுதி குவித்துள்ளார்.

நாடகத் துறை:

நாடகத்துறையில் மிக்க ஆா்வமும் ஈடுபாடும் கொண்டு நோயே டாக்டரானால், உதவித் திருமணம், புதுமைப்பரிசு( வரலாற்று கவிதை நாடகம்), இருதலைப் பறவை, திருஞானசம்பந்தர் வரலாற்று நாடகம்,  இரண்டாம் கண்ணகி (சமுதாய நாடகம்) ஆகியவற்றை இயற்றி தமிழ்க்கொடை செய்துள்ளார். இவரது நாடகங்கள் சென்னை வானொலியில் தொடா்ந்து 20 வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளமை, இவரது நாடகத்திறனுக்கான சான்று. இராணிமேரிக் கல்லூரி மாணவியா் இவரது நாடகங்களை அரங்கேற்றி சிறப்படைந்தனா்.

Continue Reading →

இளைஞர்களுக்கு வழிகாட்டும் இலக்கியம்

- சுப்ரபாரதிமணியன் -” உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள்  ஒன்றுகூட சந்தர்ப்பங்கள்  இருந்தன. சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது தொலைக்காட்சி, . ஊடகங்கள் மக்களைப் பிரிக்கின்றன. முன்பு தீவிரமான  தொழிற்சங்கங்கள் இருந்தன.  எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல் காலத்தில் சமூகத்தில்  தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள் வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம் குறித்த இலக்கியங்கள் வருகின்றன.. . கலைஞர்கள் கதை எழுதலாம், கற்பனை செய்யலாம். ஆனால் சமுதாயத்திலிருந்துதானே தரவுகள் வர வேண்டும்.சமுதாயத்திலிருந்தே இலக்கியம் வருகிறது. அது எந்தக்காலத்திலும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் “ என்றார் எழுத்தாளர் இரா.முருகவேள் ஞாயிறு அன்று திருப்பூரில்   நடைபெற்ற  ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை & அன்னையர் தின விழாவில் கலந்து கொண்டு பேசும் போது குறிப்பிட்டார்.

கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம் 12/5/19 ஞாயிறு ,. எம்கேஎம் ரிச் ஹோட்டல், ராயபுரம் பிரதான சாலை, ஸ்டேட் பாங்க் காலனி அருகில், திருப்பூரில் நடைபெற்றது. எம்கேஎம் ரிச் ஹோட்டல்  உரிமையாளர் எம்கேஎம் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். .தலைமை : தோழர்  பி ஆர். நடராஜன்  ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) வரவேற்புரை :தோழர்  சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ). பயிலரங்கங்கள் நடைபெற்றன .சிறுகதை பயிலரங்கம் ( இரா.முருகவேள், சுப்ரபாரதிமணியன் நடத்தினர் .)., கவிதை பயிலரங்கம் ( நறுமுகை தேவி,சுபசெல்வி நடத்தினர்) பாடல்கள் பயிலரங்கம் ( துருவன் பாலா, துசோபிரபாகர் நடத்தினர் ) கனல்   “ அரசியல் கவிதைகள் “ என்றத் தலைப்பிலும்., சிவதாசன் மரபுக்கவிதையும் ஓசையும் என்றத் தலைப்பிலும்  உரையாற்றினர் 

அன்னையர் தினththaiththaithத்தை முன்னிட்டு சுப்ரபாரதிமணியன்   ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த “ பெண்களும் தொழிற்சங்கங்களும் :என்ற நூலினை  munnittu எழுத்தாளர் இரா.முருகவேள்  வெளியிட பேராசிரியை சுபசெல்வி munniபெற்றுக்கொண்டார்.( இதை திருப்பூர் சேவ் அமைப்பு வெளியிட்டுள்ளது .) கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை, கதை எழுதுவது பற்றிக் கற்றுக் கொண்டனர்.மகிழ்ச்சியடைந்தனர்.

Continue Reading →

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் – லெனின்

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்– “மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் படைப்புகள்” என்னும் வலைப்பதிவொன்றினை எழுத்தாளர் A.K..ஈஸ்வரன் நடாத்தி வருகின்றார். “மார்க்சிய அடிப்படைகளை நூல்களாக எழுதுதல்” என்பதைத் தாரகமந்திரமாகக்கொண்டு இயங்கிவரும் தளமிது. அத்தளத்திலிருந்து இக்கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம் மிகவும்  பயனுள்ள மீள்பிரசுரம் என்பதால். –

(மார்க்சியத்தின் மூன்று பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்பதின் தோற்றத்தையும், அதன் உட்கூறுகளையும் லெனின் மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரித்துள்ளார். மார்க்சியம் எந்தவித குறுங்குழுவாதத்தின் அடிப்படையில் தோன்றியவை கிடையாது, உலக நாகரிக வளர்ச்சியின் தொடர்க்சியே மார்க்சியம். மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்சியம் விடைகளிக்கிறது. மார்க்சியத்தை சுயமாக அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் இந்த சிறிய கட்டுரையை பலமுறை படிக்க வேண்டும். மார்க்சியத்தின் இந்த மூன்று உட்பிரிவுகளையும் தனித்தனியாக என்ன பேசிகிறது என்பதை மனதில் நிறுத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து மார்க்சிய ஆசிரியர்களின் நூல்களைப் படிக்கும் போது, அது எந்தப் பிரிவின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை அறிந்து படித்தால் தெளிவுகிடைக்கும்.)

மார்க்சின் போதனை, நாகரிக உலெகங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான “நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்” என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் “ஒருசார்பற்ற” சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவெதாரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்ப்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.

இது மட்டுமல்ல, தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் “குறுங்குழுவாதம்” போன்றெததுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல, உலக நாகரிக வளர்ச்கியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என் பதில் தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது.

மார்க்சின் போதைன மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலும் அமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.

இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூனறு உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.

Continue Reading →