பதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜெயமோகனின் மின்னஞ்சல்கள்!

ஜெயமோகன்From: “Jeya J Mohan” < jeyamohanb@rediffmail.com>
Sent: Thursday, May 16, 2002 10:14 PM

Subject: Re: Re:


அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு , பதிவுகளில் தேவகாந்தனின் எதிர்வினை படித்தேன். எனக்கு அவரது கருத்துக்களுடன் மாறுபாடு உள்ளது .அவர் எழுதிமுடித்தபிறகு எழுதுகிறேன். அவரது கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருக்கலாம் . பதிவுகள் அடிக்கடி renew செயயப்படுவதில்லை . ஆகவே அடுத்த பகுதிக்காக காத்திருந்து எத்தனைபேர் படிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் .இதை கவனிக்கவும்

ஜெயமோகன்

[உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு நன்றி. தேவகாந்தனின் கட்டுரையினை முழுமையாக வெளியிடாதது எங்கள் தவறு தான். பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்பும் போது நாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு tscu_inaimathi அல்லது inaimathitsc போன்றவற்றிலேதாவது எழுதி அனுப்பினால் எமக்கு முழுமையாகப் பிரசுரிப்பதில் சிரமமிருக்காது. திரும்பவும் தட்டச்சு செய்ய வேண்டிய சிரமமிருக்காது. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைக் குறைக்க

முயற்சி செய்கின்றோம்.-ஆசிரியர்]


From: jeya mohan nagercoil

To: editor@pathivukal.com

Sent: Thursday, September 02, 2004 11:31 PM


டி செ தமிழன் எம் ஜி சுரேஷ் என்னை ‘அம்பலப்படுத்தி விட்டது ‘குறித்து புளகாங்கிதம் அடைவது ஆச்சரியம் அளிக்கவில்லை. இப்படி அடைபவர்களை முன்னால் கண்டுதான் சுரேஷ் அந்த அப்பட்டமான அவதூறை எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த தயக்கமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அந்த தரத்திலான அவதூறுகளை அவர் கவிதா சரண் காலச்சுவடு இதழ்களின் எல்லா இதழ்களிலும் கண்டு மேலும் மேலும் [மாதாமாதம் ] புளாகாங்கிதம் அடையலாம். – ஜெயமோகன் –

Continue Reading →

கவிதை: மூழ்கி நீந்துங்கள்!

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

ஆலகம் (நெல்லி) போன்றது கவிதை.
கீலகம் (ஆணி) போன்ற பூவிதை.
கேலகன் (கழைக்கூத்தாடி) போன்று கோலங்காணும்.
தாலப்புல்லான (பனை)  திறன் உடைத்து.
தூலகம் (பருத்தி), தூலிகை (அன்னத்தின் இறகு) போன்றது.

Continue Reading →

கவிதை: எனக்குப் பேசத்தெரியும்

கவிதை:  எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
காக்காய் பிடிப்பது போலவும்
சோப்பு போடுவது போலவும்
ஜால்ரா தட்டுவது போலவும்
பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
என் நலன்
என் வீட்டு நலன்
என் நோட்டு நலன்
பற்றி மட்டுமே பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

Continue Reading →

கவிதை : உன் மனம் கல்லோ?

ஶ்ரீராம் விக்னேஷ்

பெண்  கண்ணை  மீன்  என்று,
பெருங்  கவியில்  எழுதிவைத்  தேன் !
உன்  கண்ணோ  தூண்டி  லதாய்,
உடன்  என்னைக்  கவ்விய  தேன் ?

சிலைபோல்  நீ  அழகு  என்று,
சிறப்பாய்  நான்  உவமையிட்  டேன் !
சிலைபோல்  நீ  கல்லு  என்று,
சிரத்தினை  ஏன்  முட்டவைத்  தாய் ?

Continue Reading →

காலத்தால் அழியாத கானங்கள்: “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்”

ஶ்ரீவித்யாகவிஞர் கண்ணதாசனின் கவித்துவத்தையும், மொழியாற்றலையும் வெளிப்படுத்தும் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று.  மானுட வாழ்க்கையைப்பற்றிய சிந்தனையைத்தூண்டிவிடும் கருத்துகளின் பெட்டகம் இப்பாடல். கே.பாலச்சந்தர் படப்பாடல்களில் முதலிடத்திலுள்ள பாடல்களிலொன்று. வாணி ஜெயராம் பாடிய சிறந்த பாடல்களிலொன்று.  அவரது பாடல்களைப்பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மல்லிகை என் மயங்கும் பாடல். கூடவே நினைவுக்கு வரும் பாடலிப்பாடல். எம்,எஸ்.வி இசையமைத்த சிறந்த பாடல்களிலொன்று.

நடிகை  ஶ்ரீவித்யாவை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் அபூர்வராகங்கள். கூடவே நினைவுக்கு வரும் பாடல் இப்பாடல். நடிகை ஶ்ரீவித்யா தாய் எம்.எல்.வசந்தகுமாரி சிறந்த கர்நாடகப்பாடகி. ஶ்ரீவித்யாவும் சிறந்த பாடகி. சிறந்த நர்த்தகியும் கூட. ஆனால் அவர் சுடர்விட்டது திரையுலகில்தான். தமிழ்த்திரையுலகைப்பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ,, நினைவுக்கு வருவது பின்னாளில் அவர் நடித்த நடுத்தர அம்மா வேடங்கள் மூலமே. ஆனால் மலையாளத்திரைப்படங்களைப்பொறுத்தவரையில் நிலை வேறு. மிகச்சிறந்த நடிகையாக, பின்னணிப்பாடகியாக அவரை மலையாளத்திரையுலகம் கொண்டாடுகின்றது.

ஜார்ஜ் தாமஸ் என்ற மலையாள துணை இயக்குனரோடு தொடங்கிய அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. துயர் மிகுந்தது. ஆரம்பத்தில் நடிகர் கமலகாசனுக்கும், அவருக்குமிடையில் நிலவிய காதல்பற்றிச் செய்திகள் வெளியாகின. அதுவும் தோல்வியில் முடிந்தது. அது ஶ்ரீவித்யாவை உளரீதியாக மிகவும் பாதித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் தனது கடைசிக்காலத்தில் புற்றுநோயால் மரணப்படுக்கையில் கிடந்தபோது அவர் தன்னைப்பார்க்க அனுமதித்த மிகச்சிலரில் கமலகாசனும் ஒருவர். அவர் நிலைகண்டு மிகவும் மனம் வருந்திய கமல் அவரை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று சிகிச்சை செய்ய முன்வந்ததாகவும் , அதை ஶ்ரீவித்யா மறுத்துவிட்டதாகவும் இணையத்திலெங்கோ வாசித்துள்ளேன்.

Continue Reading →

கணன் ஸ்வாமியின் ‘பரதேசியின் வலித்தொகை’

கணன் ஸ்வாமிநண்பர் கணன் ஸ்வாமியுடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் இன்று நடைபெற்ற தேடகம் அமைப்பினரின் முப்பதாண்டு விழாவின்போது கிடைத்தது. அப்பொழுது அவர் தமிழகத்துப் புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத்தமிழ் அகதி முகாமில் சுமார் பதினைந்து வருடங்கள் தான் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் அவர் நண்பர்களுடன் இணைந்து ‘பரதேசியின் வலித்தொகை’ என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையும் நடத்தியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் 2008 வரை ‘மனுதர்’ எனுமொரு வலைப்பதிவினையும் நடாத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார். அவ்வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தேன். ஒரு பதிவு மட்டுமேயிருந்தது. ஏனையவை நீக்கப்பட்டு விட்டன போலும்.

கணன் ஸ்வாமி தன் புதுக்கோட்டை அகதிகள் முகாம் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்வது மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நல்லதோர் ஆவணமாகவிருக்கும். கணன் ஸ்வாமி செய்வாரா? செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

அவரது ‘மனுதர்‘ வலைப்பதிவிலுள்ள ‘பரதேசியின் வலித்தொகை‘ 11 கவிதைகளின் தொகுப்பிது. அப்பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். பரதேசியின் வலித்தொகை தொகுப்புக்கு நல்லதொரு பெயர். அகதிகளாகப் பரதேசம் அலைந்து திரிபவர்களின் வலியினை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகை (தொகுப்பு).

Continue Reading →

தேடகம் அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் 2019

இடமிருந்து வலமாக: தேவகாந்தன், கற்சுறா, போல் ராசாத்தி, நான், குமரன் & ஆதவன்
தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலைய அமைப்பினர்) அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் இன்று குயீன் பலஸ் விருந்து மண்டபத்தில் நடைபெற்றது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தன், எழுத்தாளர் கடல்புத்திரனுடன் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். முப்பதாவது ஆண்டில் நடக்கும் நிகழ்வு என்பதால் தேடகம் மலர் ஏதாவது வெளியிடலாம் என்றெண்ணியிருந்தேன். ஆனால் அவர்கள் வெளியிடவில்லை. இவ்விதம் வருடாவருடம் நடக்கும் நிகவுகளில் தேடகம் ‘தேடல்’ சஞ்சிகையை ஆண்டு மலர் வடிவில் வெளியிடலாம். அது மிகவும் பயன் மிக்கதாகவுமிருக்கும். அதே சமயம் கனடாத் தமிழ்இலக்கியத்துக்குப் பங்களிப்பினை வழங்கிய தேடகம் சஞ்சிகையின் தொடர்ச்சியாகவுமிருக்கும். தேடக நண்பர்கள் சிந்திப்பார்களாக. நிகழ்வில் தேடக நண்பர்கள், ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். பலர் குடும்பங்களுடன் வருகை தந்திருந்தனர். இளைய தலைமுறையினர் பலரையும் நிகழ்வில் காண முடிந்தது. அவர்கள் நிகழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை ஆர்வமுடன் நடத்திய பாங்கு வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.

Continue Reading →