பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள்!

பதிவுகளின் வாசகர்கள் விபரங்கள்..

‘பதிவுகள்’ இணைய இதழில் இப்போது நீங்கள் நியாயமான கட்டணங்களில் விளம்பரம் செய்யலாம். பதிவுகளில் தற்போது கூகுள் நிறுவன விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் ‘அட் சென்ஸ்’ (Ad Sense) விளம்பரங்கள் தற்போது தமிழ் இணையத்தளங்களையும் புரிந்துகொள்கின்றன. அதனால் பதிவுகள் போன்ற தமிழ் இணையத்தளங்கள் பயனடைகின்றன.

‘பதிவுகள்’ இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  ‘பதிவுகள்’ இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ”பதிவுகள்’ இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். ‘பதிவுகள்’ இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் ‘பதிவுகள்’ விளம்பரம்‘ என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரமாகும்.


பதிவுகள் இணைய இதழுக்கு ஏப்ரில்  வரை  தந்தவர்கள், வாசித்த பக்கங்கள் மற்றும் மொத்த ஹிட்ஸ் பற்றிய விபரங்கள்.

இவ்விபரங்கள் பதிவுகள் தளத்தைப் பராமரிக்கும் ‘ஹொஸ்டிங்’ நிறுனத்தில் பதிவுகள் இயங்கும் ‘சேர்வ’ரில் நிறுவப்பட்டுள்ள Webalizer  மென்பொருள் மூலம் கிடைக்கப்பெற்றவை.

Continue Reading →

சிறுகதை: மச்சுப்படி வைக்கிறார்கள்

கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -பல்கணியில் நின்ற சதாசிவம்,சுருட்டின் புகையை ஆசை தீர இழுத்து அனுபவித்தார்.தொண்டை கமறியது.வட்டம்,வட்டமாக புகையை விடுறதில் எல்லாம் இறங்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் வயதான சீனர்.அவருடைய மகன் ,மகள்…என கூட்டுக் குடும்பத்துடன் இருக்கிறார். அவர் வீட்டை விட்டுப் போறது தெரிந்தது.பார்க்கிற்குத் தான் போறார் .இவர், போகிற பிரகலாதன் பார்க்கிற்கு காலையிலே மற்ற சீனர்களும் வந்து … காற்றைக் கையால் வெட்டி,வெட்டி பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்

அவருடைய மனைவி ,எப்பவோ இறந்திருக்க வேண்டும்.வயசை சொல்ல முடியாது. எழுபத்தஞ்சு … . இருக்கலாம். பாரியாருடன் திரிகிற இவர்களைப் பார்த்து நட்பாக சிரிக்கிறவர். இவர்களுக்கு தான் என்னவோ அவர்களுடன் ..  சேர்ந்து சரியா ய் பழகத் தெரியவில்லை .

சிறைக்குள் இருக்கிறது போன்றது தானே வெளிநாட்டு.  வாழ்க்கை. ஆனால் திறந்த வெளிச்…. சாலை போன்ற வசதி இருக்கிறது. எதிர்படுற போது புன்னகைக்கிறது. இவருடைய சுருட்டுப் புகை சமயத்தில் அவர்களுடைய வீட்டுப் பக்கம் போய் விடும். அதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. சுருட்டுக்கிழம், அனுபவிக்கிறது அற்ப சந்தோசம், அதைப் போய் குழப்புவானேன்…? என பிள்ளைகளும் விட்டு விட்டார்கள்.

பெரியவர் இவர்க்கு யாலுயாய் இருப்பது தான் முக்கியக் காரணம்.பிள்ளைகளும் விளங்கிக் கொள்ள‌ மாட்டார்களா, என்ன !

இவரும், அன்னமும் மகளோட தான் இருக்கிறார்கள்.ஒரே பேத்தி,சித்திரா ..கொஞ்சம் வளர்ந்து விட்டாள். சிலவேளை இவர்களோட பார்க்கிற்கு வருவாள். ரேவதியும், கமலும் சரியான‌ உழைக்கிற மெசின்கள். வேற என்ன சொல்றது?, அவர்களும் கிழவர்களாகினால் தான் பார்க்கின் அருமை தெரியும். இப்ப‌ நண்பிகள், நண்பர் வீட்ட ..என விசிட் பண்ணுகிறார்கள் .பார்க்கிற்கெல்லாம் வருவதில்லை.

சீனரின் பிள்ளைகளும் கூடத் தான் அந்த அழகான பார்க்கிற்கு வருவதில்லை. இந்த நாட்டுக் கலாசாரப்படி நைட் கிளப்புகளிற்குப் போகிறார்களோ?

Continue Reading →