இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

மதவாச்சியில் பதவியா என்னும் இடத்தை பின்னணியாகக்கொண்டு நடேசன் எழுதிய நாவல் வண்ணாத்திக்குளம். இதனையும் சென்னை மித்ர பதிப்பகமே வெளியிட்டது.மனிதநேயம், மனித உரிமை, இனநல்லிணக்கம் முதலான சிந்தனைகளின் அடிப்படையில் முருகபூபதி ஏற்கனவே பல சிறுகதைகளை படைத்துள்ளார். அவற்றுள் தேர்ந்தெடுத்த பத்துச்சிறுகதைகள் சிங்கள வாசகர்களுக்கு மதகசெவனெலி என்னும் பெயரில் அறிமுகமாகின்றது.  உனையே மயல்கொண்டு நாவலும் பைபோலர் நோய் தொடர்பாக அந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்பாத்திரம் பற்றி எழுதப்பட்ட தமிழ் இலக்கிய நாவல் வரிசையில் சற்று வித்தியாசமான படைப்பு. இந்நாவல் குறித்து தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் எழுதியிருக்கிறார். Lost In You ஆங்கில வாசகர்களுக்கும் ஆங்கிலத்தில் படிக்கும் தமிழ், சிங்கள் வாசகர்களுக்கும் புதிய அனுபவத்தை வழங்கும்.அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன. இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு நூலும் வெளியிடப்படவிருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வதியும் இலங்கையர்களான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் லெ.முருகபூபதி ஆகியோரின் புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படைப்புகளே இந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகின்றன. ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பில் பணடாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 5 மணிக்கு செயற்குழுக்கூட்ட அறை F இல் வெளியிடப்படும் குறிப்பிட்ட மூன்று நூல்களின் விபரம் வருமாறு:

Continue Reading →

சிறுகதை: புத்தாக்கம்!

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா “கண்ணா….! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!”

“எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல கோபி. !”

“உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப் பாத்தியா…….!”

“கெட்டவன் என்றைக்கும் கெட்டவனாதான் இருக்கனுமா என்ன?”

“மனிதனா இருந்தா நீ சொல்ற மாதிரி திருந்த வாய்ப்பு இருக்கு. ஆனா, நரி குணம் கொண்ட நீ திருந்தி மனிதனா வாழ்வதற்குச் சான்சே இல்ல!”

Continue Reading →