அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகளைச் சேகரிப்பதற்கு உதவுங்கள்!

அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் சிதறுண்டு கிடக்கின்றன. இவரது படைப்புகளை இலங்கையில் வாழும் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், பல்கலைக்கழக நூல் நிலையங்கள் மற்றும் சுவடிகள் திணைக்களத்திலிருந்து…

Continue Reading →

மீள்பிரசுரம்: கௌதம புத்தரின் பூமிக்கு இங்கு என்ன தவறு நடந்துள்ளது

மீள்பிரசுரம்: கௌதம புத்தரின் பூமிக்கு இங்கு என்ன தவறு நடந்துள்ளதுகுசல் பெரேரா இரண்டு மாதங்களுக்கு மேலாக நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது வசைமாரி பொழிந்து வரும் விவகாரம், பிரதம நீதியரசராக இருக்கும் ஷிராணி பண்டாரநாயக்காவின் வெளியேற்றத்தோடு ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு, எண்ணிக் கொள்ளுங்கள் இன்னும் ஏழு நாட்கள்தான் பாக்கியிருக்கின்றன, ஏனெனில் அவர் தவறு இழைத்துள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதாலோ, அல்லது குற்றம் புரிந்துள்ளார் என்பதாலோ இது நடக்கவில்லை ஆனால் ராஜபக்ஸவின் ஆட்சி அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அந்த ஆசனத்தில் அமரப்போகும் அடுத்த அரசாங்க வேலைக்காரர் யாராகவிருந்தாலும், அவர் நிச்சயமாக ராஜபக்ஸவின் கற்பனைக்கு ஏற்ற ஒருவராக இருப்பாரே தவிர, தகுதிப்படி நியமனம் பெற்றவராக இருக்கமாட்டார். சுயாதீனமான நீதித்துறை பற்றி உருவாகிவரும் இந்த குழப்பங்கள் யாவற்றுக்கும் அப்பால், இந்த விடயம் பற்றி மிகவும் குறைவாகப் பேசப்பட்டது மாத்திரமன்றி இதை ஒரு பிரச்சினையாக ஒருபோதும் யாருமே எடுத்துக் கொள்ளாததுதான், இதிலுள்ள மனிதாபிமானமான துயரம்.

Continue Reading →

நூலக ஆணை வேண்டி சுடர் முருகையா தலைமையில் 11-01-2013 அன்று திருவல்லிக்கேணியில் கவன ஈர்ப்புப் பேரணி!

நூலக ஆணை வேண்டி சுடர் முருகையா தலைமையில் 11-01-2013 அன்று திருவல்லிக்கேணியில் கவன ஈர்ப்புப் பேரணி!

கடந்த 2008 முதல் தமிழ்ப் படைப்பாளிகளை புறந்தள்ளும் விதமாக நூலக ஆணை தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து நூலக ஆணை வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் கவிஞர் சுடர் முருகையா தலைமையில் 11-01-2013 அன்று திருவல்லிக்கேணியில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.

இடம்: அரசு விருந்தினர் மாளிகை (Government Guest House), சேப்பாக்கம் மைதானம் அருகில், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600005.; நாள்: 11-01-2013; நேரம்: காலை 9.00 மணி

Continue Reading →

மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா

 மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா

அனபுடையீர், வணக்கம், எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். என்றும் தமிழுடன், – சோலை.தியாகராஜன்

Continue Reading →