பொங்கல் கவிதை: ‘இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று’ பொங்கல் செய்வோம்; களிப்போம்.

'இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று'  பொங்கல் செய்வோம்; களிப்போம்.

உலகப் பந்தின் திக்குக ளெங்கும்
பரந்து வாழும் தமிழர் வாழ்வில்
முக்கிய நாளே! பொங்கல் நாளே!
அதிலும் கதிரின் கருணை வாழ்த்தி
உழுது வாழும் உழவர் போற்றும்
உன்னத நாளிது வாழ்த்தி நிற்போம்
இந்த நாளில் இன்பமும் பொங்கிட
வேண்டி நிற்போம். வேண்டி நிற்போம்.
யுத்தம் மலிந்த பூமியில் இனிமேல்
நித்தமும் அமைதி நிலவிட வேண்டும்
என்றே நாமும் வேண்டி நிற்போம்.
மானிடர் யாவரும் அன்பு கொண்டு
மதங்கள், மொழிகள், இனங்கள் மற்றும்
நிலவிடும் பிரிவுகள் நீங்கி அன்புடன்
வாழ்ந்திட வேண்டி நிற்போம் நாமே.

Continue Reading →

மீள்பிரசுரம்: அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெரிக்கவில்லை”- ரிஸானா நபீக்.

30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

Continue Reading →