குளோபல் தமிழ்ச்செய்தி: சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவந்துள்ள தீபச்செல்வனின் மூன்று நூல்கள்

எழுத்தாளர் தீபச்செல்வன்ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்று புத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன.  ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன.

கிளிநொச்சி – போர் தின்ற நகரம்
தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பானஅழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ்செய்திகள்  இணையத்தில் தீபச்செல்வன் எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்த மனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்பட்டு இப்பொழுது ‘எழுநா’ வெளியீடாக நூலாக்கப்பட்டுள்ளது.

Continue Reading →