சிறுகதை: அறிவு

navajothy_baylon_4.jpg - 21.10 Kb   ‘அறிவு, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’

   ‘ஏன் என்ன பிரச்சினை?’

      ‘அப்ப உனக்கு போன்’ எடுக்கக்கூடாதோ?’

   ‘தேவையில்லை என்று சொல்லி அடித்து ‘போன்’ றிசீவரை வைக்கவேணும்போல் இருந்தது அவளுக்கு. நெஞ்சுக்குள்ள  இனம் தெரியாத கவலை,

யோசனை, எல்லாம் தான் அவளுக்கு. என்ன  ஒவ்வொருநாளும் ‘போன்’ செய்து நடக்கிற செய்திகள் எல்லாம் சொல்ல வேண்டும். அதுதான்

அவளுக்குக் கோபம் ஏறியிட்டுது போல இருக்கு.

   ‘யாருக்கு ‘போன்’ எடுத்தனீங்க?’ அவள் கேட்டாள்.

Continue Reading →

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்” மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள்…

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது தமிழ் நாவல் நானறிந்தவரையில் நான் எழுதிய சிறு நாவலான ‘மண்ணின் குரல்’ நாவலே. இதனைப் பற்றி ஒரு பதிவுக்காகக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த நாவல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய சிறு நாவல். நாற்பது பக்கங்களைக் கொண்டது. இந்நாவலின் முதல் ஆறோ அல்லது  ஏழோ அத்தியாயங்கள் மான்ரியாலிலிருந்து 1984, 1985 காலப்பகுதியில் வெளியான ‘புரட்சிப்பாதை’ என்னும் கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியாகின. ‘புரட்சிப்பாதை’ என்னும் கையெழுத்துப் பத்திரிகை அக்காலத்தில் மான்ரியாலில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினரின் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியானது, அக்காலகட்டத்தில் கனடாவில் பல்வேறு ஈழ விடுதலைச் சார்ப்பு அமைப்புகளும் இயங்கி வந்தன. இந்தச் சஞ்சிகையை அக்காலகட்டத்தில் ஜெயந்தி, ரஞ்சன், சுந்தரி ஆகிய இளைஞர்களுடன் சேர்ந்து மேலும் சில இளைஞர்கள் நடாத்தி வந்தனர். இந்தக் கையெழுத்துப் பிரதியில் கவிதைகள் சில, கட்டுரைகள் சில மற்றும் ‘மண்ணின் குரல்’ என்னுமிந்தச் சிறு நாவல் ஆகியவற்றையும் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் வெளியான எனது படைப்புகள் அனைத்தும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலியுறுத்துபவையாகவே அமைந்திருந்தன. அதற்காகவே எழுதப்பட்டவை அவை. ‘மண்ணின் குரல்’ சிறுநாவல் முடிக்கப்பட்டு , ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கி ‘மண்ணின் குரல்’ தொகுப்பு கனடாவில் 4.1.1987 அன்று வெளியானது. கனடாவில் றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சடிக்கப்பட்டு, மங்கை பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.  எனது நாவல்களான ‘மண்ணின் குரல்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ , மற்றும் ‘கணங்களும் குணங்களும்’ ஆகியவை ஒரு தொகுப்பாக ‘மண்ணின் குரல்’ என்னும் பெயரில் தமிழகத்தில் 1998இல் ‘குமரன் பப்ளீஷர்ஸ்’ நிறுவனத்தால் வெளியிப்பட்டது.  இரண்டு ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்புகள் என் படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ளன. இரண்டு தொகுப்பிலும் உள்ள பொதுவான ஒரே படைப்பு ‘மண்ணின் குரல்’ நாவல்தான்.

Continue Reading →

கணித்தமிழ்: இணையம் வழி தமிழ்மொழியைக் கற்றல் – கற்பித்தல்

அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. - ஆசிரியர், பதிவுகள் -– அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  – ஆசிரியர், பதிவுகள் –

ஆய்வுச்சுருக்கம்
தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய ஏந்துகள் (வசதிகள்) தற்போது பல்கிப் பெருகி வருகின்றன. மழலையர்; கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து முதலான அடிப்படைப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் இணையத்தில் படிக்கக்கூடிய நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது. தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும், இணையம் தொடா;பான ஏந்துகளைத் தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும், இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகுமுறைகளோடு தமிழ்மொழியைக கற்பது கற்பிப்பதுப் பற்றி இக்கட்டுரை எடுத்துக் கூறுகின்றது.

Continue Reading →

தந்தையர் தினத்தினிலே….

நான் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவனாகவிருந்தபோது என் தந்தையாரை (நடராஜா நவரத்தினம்) இழந்து விட்டேன்.. அவர் ஒரு நில அளவையாளராகவிருந்தார்.  அவர் மிகவும் உயரமானவர் (சுமார் ஆறடி உயரமெனலாம்; நான் அவரைவிட ஒர் அங்குலம் உயரத்தில் சிறியவன்.) எனக்கு எழுதுவதிலும் , வாசிப்பதிலும் இவ்வளவு தூரம் ஈடுபாடு தோன்றியதற்குக் காரணமே அப்பாதான். சிறுவயதிலிருந்தே வீடு நிறைய புத்தகங்களும் , சஞ்சிகைகளும்தாம். பொன்மலர், பால்கன் காமிக்ஸ் , அம்புலிமாமா தொடக்கம், விகடன், கல்கி, கதிர், கலைமகள், ராணி, ராணிமுத்து, மஞ்சரி, கலைக்கதிர், ஈழநாடு, சுதந்திரன், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று வீடே நிறைந்து கிடக்கும்.  எனது ஐந்து வயதிலேயே நாங்கள் வவுனியாவுக்கு இடம் மாறிச் சென்று விட்டோம், அம்மா ஆசிரியையாக வவுனியா மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்த காரணத்தால். வவுனியாவில் நாங்கள் குருமண்காடு என்னும் பகுதியில் அப்பொழுது வசித்து வந்தோம். ஒற்றையடிப் பாதையாகவிருந்த வீதியினைக் கொண்டிருந்தது குருமண்காடு அக்காலகட்டத்தில். சுற்றிவர விரிந்திருந்த கானகச் சூழல். பல்வேறு விதமான பறவையினங்கள் (நீர்க்காககங்கள், ஆலா, பருந்து, மாம்பழத்தி, நீண்ட வாற் கொண்டைக்குருவிகள், வவ்வால்கள், குக்குறுபான்கள், மரங்கொத்திகள், மீன் கொத்திகள், பலவேறு வகையான பாம்பினங்கள், குரங்கினங்கள் என விளங்கிய கானகச் சூழலில்
எம் வாழ்வு கழிந்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 47: கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் தொகுப்புகள் பற்றிச் சில வார்த்தைகள்….

வாசிப்பும், யோசிப்பும் 47: கனடாத் தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் தொகுப்புகள் பற்றிச் சில வார்த்தைகள்....

புகலிடத் தமிழ்ச் சிறுகதைகளில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகளுக்கும் முக்கியமானதொரு பங்குண்டு. புகலிடத் தமிழர் படைத்த சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை உளளடக்கிய தொகுப்புகள் பல வெளிவந்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக வெளிவரும் தொகுப்புகள் சிலவற்றில் வெளியாகும் படைப்புகளைப் பார்க்கும்போது ஒரு குழுவாக இயங்கும் சில எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி அமைத்துக்கொண்ட வட்டத்தைச் சார்ந்தவர்களின் படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து தொகுப்புகளில் சேர்க்கும் போக்கு தென்படுகின்றதோ என்று ஐயுறுகின்றேன். இந்நிலை இலக்கியத்துக்கு ஆரோக்கியமானதொரு போக்கல்ல. ‘காலம்’ செல்வம், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இவர்களைச் சுற்றியுள்ள சில எழுத்தாளர்களின் படைப்புகள், கவிஞர்கள் இவர்களின் படைப்புகளை மட்டுமே திரட்டித் தொகுத்து வருகின்றார்களோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது. கடந்த முப்பது வருடங்களில் ‘காலம்’ செல்வம் எத்தனை சிறுகதைகள், கவிதைகளை எழுதியிருக்கின்றார்? ஆனால் அண்மைக்காலத் தொகுப்புகளில் தவறாமல் இவரது கவிதை, சிறுகதைகள் சேர்க்கப்படுகின்றன.  ஒரு தொகுப்பானது தொகுக்கப்படும்போது குழு மனப்பான்மையுடன் தொகுக்கப்படுமானால் அது வரவேற்கத்தக்கதல்ல.

Continue Reading →

அருகிவரும் குதிர்ப் பயன்பாடு

இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்)…

Continue Reading →

அருகிவரும் குதிர்ப் பயன்பாடு

இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்)…

Continue Reading →

சங்காலப் பெண்பாற் புலவர்களின் உரத்த குரல்கள்

முன்னுரை
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

Continue Reading →

சங்காலப் பெண்பாற் புலவர்களின் உரத்த குரல்கள்

முன்னுரை
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

Continue Reading →

GTF ready to assist OHCHR probe By Easwaran Rutnam

GTF ready to assist OHCHR probe  By Easwaran RutnamWith the outgoing UN High Commissioner for Human Rights Navi Pillay confirming that her office has put together a team to investigate allegations over the war in Sri Lanka, the role of the Tamil Diaspora will be also in the spotlight. Suren Surendiran, the spokesman for the Global Tamil Forum (GTF), an influential Tamil lobby group based in London expressed his views on the investigation.

Q:  Does the GTF has any plans on assisting the OHCHR probe on Sri Lanka by providing information or any form of evidence related to the war?
A:The process of collecting evidences or the operational terms of reference for the investigation haven’t been made public as yet. Just as GTF submitted a whole series of documentary evidences to the UN Panel of Experts on crimes that were committed at the end of the war, GTF will continue to fully support any international independent process that has the potential to gain justice for our people that’s long overdue.

GTF as an internationally recognised organisation will represent the Tamil voice in these international forums until justice is served to our people who lost their loved ones. GTF will also help to expose the current ground human rights reality for Tamils, Muslims, Christians and Sinhalese, particularly the effects of militarisation of the north and east of the country is having on the Tamil community.

Continue Reading →