வாசிப்பும், யோசிப்பும் 135: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது ‘கருடா! செளக்கியமா?’ ருஷ்யக் கரடியைச் சீண்டியது துருக்கி!

ருஷ்ய அதிபர் புடின்துருக்கி அதிபர்அண்மையில் ருஷ்ய விமானப்படையினரின் விமானமொன்றினை துருக்கி சுட்டு வீழ்த்தியது யாவரும் அறிந்ததே. துருக்கியால் ஒரு போதுமே ருஷ்யாவுடன் நேருக்கு நேர் மோத முடியாது. இருந்தாலும் ஏன் துருக்கி இவ்வளவு துணிவாக ருஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. ருஷ்ய அதிபர் புட்டின் குற்றஞ்சாட்டுவது போல் துருக்கி திரை மறைவில் இசிஸுடன் (ISIS) நட்பாகவிருக்கிறது. அவர்கள் விற்கும் எண்ணெயினை வாங்குகின்றது. சிரியாவின் தன்னின மக்களைக்கொண்ட போராளிகளுக்கு ஆதரவளிக்கிறது. அதே சமயம் துருக்கி நேட்டோ என்னும் மேற்கு நாடுகளின் கூடாரத்தில் அங்கம்  வகிக்கும் நாடு. துருக்கிக்கும் , ருஷ்யாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்து ருஷ்யாவுக்கும் நேட்டோவுக்குமிடையிலான மோதலாக வெடிக்கும் ஆபத்து உண்டு.

இவ்விதமானதொரு சூழலில்தான் துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்தியுள்ளது. இது துருக்கியுடன் நட்பாகவிருக்கும் இசிஸின் ஆலோசனையாகவிருக்க வேண்டும். துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்துவதன் மூலம் அம்மோதலை நேட்டோவுக்கும், ருஷ்யாவுக்குமிடையிலான மோதலாக மாற்றிடலாமென்று துருக்கியும், இசிஸும் திட்டமிட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் அவர்கள் விரித்த வலைக்குள் ருஷ்யா விழவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. அது மட்டுமல்ல உடனடியாகவே ருஷ்யா சிரியாவில் இசிஸின் எண்ணெய்க்கிணறு நிலைகள் மீது தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 134 : பொன் குலேந்திரனின் ‘முகங்கள்’

பொன் குலேந்திரனின் 'முகங்கள்'கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் பொன்.குலேந்திரனின் ‘முகங்கள்’ சிறுகதைத்தொகுதியினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘ஓவியா பதிப்பகம்’ (தமிழகம்) வெளியீடாக , அழகான அட்டையுடன் வெளிவந்திருக்கின்றது. தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களை மையமாக வைத்து அவரால் எழுதப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பிது.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது: குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவர் பற்றிய விவரணச்சித்திரங்களாச் சில கதைகள் அமைந்துள்ளன. சந்திக்கடை சங்கரப்பிள்ளை, வைத்தியர் வைத்திலிங்கம், சண்டியன் சங்கிலி இஸ்மாயில், நாட்டாண்மை நாச்சிமுத்து, நாவிதர் நாகலிங்கம், பியூன் பிரேமதாசா, அரசாங்க அதிபர அபயசேகரா, சின்னமேளக்காரி சிந்தாமணி போன்ற சிறுகதைகளை இவ்வகையில் அடக்கலாம். இவ்விதமான சிறுகதைகள் பொதுவாக ஒருவரைப்பற்றி அல்லது ஒரு பிரதேசமொன்றினைப்பற்றிய விவரணைகளாக, ஆரம்பம் , முடிவு போன்ற அம்சங்களற்று அமைந்திருக்கும். இதற்கு நல்லதோர் உதாரணமாகப் ‘புதுமைப்பித்தனின்’ புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான ‘பொன்னகரம்’ சிறுகதையினைக் குறிப்பிடலாம்.

இன்னும் சில சிறுகதைகள் குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவரைபற்றிய விவரணையாக இருக்கும் அதே சமயம், எதிர்பாராத திருப்பமொன்றுடன், அல்லது முக்கியமானதொரு நீதியினைப் புகட்டும் கருவினைக்கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விதம் அமைந்துள்ள கதைகளின் மேலும் சில அம்சங்கள் முக்கியமானவை. கதைகள் கூறும் நடை, மற்றும் கதைகளில் விரவிக்கிடக்கும் பல்வகைத்தகவல்கள். எளிமையான ஆனால் ஆற்றொழுக்குப் போன்ற நடை ஆசிரியருக்குக் கை வந்திருக்கின்றது. அந்நடையில் அவ்வப்போது அளவாக நகைச்சுவையினையும் ஆசிரியர் கலந்து வெளிப்படுத்தியிருக்கின்றார். தொகுப்பிலுள்ள பல்வேறு ஆளுமைகளும் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது காலங்களில் நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள், குறிப்பிட்ட இடம் அல்லது கட்டடங்கள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் எனப்பல்வகைத்தகவல்கள் இக்கதைகள் எங்கும் பரந்து கிடக்கின்றன.

Continue Reading →