எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..

எந்திரங்களோடு பயணிப்பவன் - சொர்ணபாரதி - (கவிதைகள்)

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் சொர்ணபாரதி– ஆரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத் தமிழ் இலக்கியவெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் கவிஞர் சொர்ணபாரதி (இயற்பெயர்: முகவை முனியாண்டி) கல்வெட்டு பேசுகிறது என்ற சிற்றிதழைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவருவதன் மூலம் எழுதும் ஆர்வமுள்ள பலருக்குக் களம் அமைத்துத் தருபவர். நுட்பமான கவிஞர். கல்வெட்டு பேசுகிறது இதழ்களில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் இவருடைய சீரிய சமூகப் பிரக்ஞைக்கும், அரசியல் பிரக்ஞைக்கும் சான்று பகர்பவை.

சமீபத்தில் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ என்ற தலைப்பிட்ட இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. நல்ல இலக்கிய நூல்களை ஆர்வமாக வெளியிட்டு வரும் தோழர் உதயக்கண்ணனின் அன்னை ராஜேஸ்வரி பதிப்பக  (bookudaya@ gmail. com) வெளியீடு இது. சென்னையில் நடந்த இந்த நூலுக்கான அறிமுக விழாக் கூட்டத்தில் கவிஞர்கள் கிருஷாங்கினி, அரங்க மல்லிகா, தமிழ் மணவாளன், நான் மற்றும் பலர் கலந்துகொண்டு நண்பர் சொர்ணபாரதியின் கவிதைவெளி குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம். –  லதா ராமகிருஷ்ணன்


‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்  தொகுப்பில் இடம்பெறும் என் எண்ணப்பதிவுகள்! –  – லதா ராமகிருஷ்ணன் –

யோசித்துப்பார்த்தால் நாம் [நான் அல்லது நீங்கள் அல்லது அவர்(கள்)] எப்போதுமே மற்றவர்களோடு தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், நம்மோடு நாம் பேசிக்கொள்வதேயில்லையா….? கண்டிப்பாக பேசிக்கொண்டுதானிருக்கிறோம்.  நம் எண்ணம் என்பது உண்மையில் நம்மோடு நாம் நடத்துகின்ற தொடர் உரையாடல் தானே! இன்னும் சொல்லப்போனால், மற்ற எவரோடும் பேசிக்கொண்டிருக்கும் போதுகூட நமக்குள் நாம் நடத்துகின்ற இந்த ‘நம்மோடு நமக்கான’ உரையாடல் (குறுக்கீடுகளோடும், குறுக்கீடுகளின் றியும்) நடந்துகொண்டேதானிருக்கிறது.

இதில் கவிதை என்பது என்ன? கவிதைக்கான தேவை என்ன? இலக்கியப் படைப்புகள் யாவுமே (மேம்போக்கானவை உட்பட) ஒரே சமயத்தில் பல பேரோடு நாம் மேற்கொள்கின்ற உரையாடல்கள்தான். ஒரு கருத்தை, அல்லது உணர்வை ஒரே சமயத்தில் பலருக்கு எடுத்துச்செல்லும் எத்தனம்தான். ஆனால், நல்ல படைப்பு அல்லது நிஜமான படைப்பு என்பதைப் பொறுத்தவரை, எழுதும்போது படைப்பாளி இந்த உரையாடலை முதலில் ஆத்மார்த்தமாக தனக்குத் தானே, தானாகிய தன்னிலிருந்து கிளைபிரிந்திருக்கும் எண்ணிறந் தோரிடம்தான் மேற்கொள்கிறார்.

Continue Reading →

சிறுகதை: மணல் வீடுகள்!

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....என் ஆரம்ப காலத்துச்சிறுகதைகளிலொன்று ‘மணல் வீடுகள்’.  19.06.1977 வெளியான ஈழநாடு வாரமலரில் பிரசுரமான சிறுகதையிது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் (G.C.E – Advanced Leval) படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு வாரமலரில் அக்காலகட்டத்தில் வெளியான எனது நான்கு சிறுகதைகளில் ‘மணல் வீடுகள்’ சிறுகதையுமொன்று. தமிழக வெகுசன ஊடகங்களின் ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடந்த பருவத்தின் பாதிப்பை இச்சிறுகதையில் நீங்கள் அவதானிக்கலாம். அந்த வயதுக்குரிய உணர்வுக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்தும் சிறுகதை. மல்லிகையில் வெளியான ஈழநாடுச்சிறுகதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் செங்கை ஆழியான் அவர்கள் (முனைவர் க.குணராசா) ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவராக என்னைக்குறிப்பிட்டு, இச்சிறுகதையினையும் குறிப்பிட்டிருப்பார். ஒரு பதிவுக்காக இச்சிறுகதையினை இங்கு பதிவு செய்கின்றேன்.

Continue Reading →

இன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின் நித்திய வாழ்வு வாழலாம். (Live long enough to live for ever)

இன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின்   நித்திய வாழ்வு வாழலாம். (Live long enough to live for ever) - ப.தயாநிதி -தொழில் நுட்ப வளார்ச்சியால் நித்திய வாழ்வைப் பெறாலாம் எனப் பல ஆதாரங்களைக் காட்டிக் கூறுபவர் கூகிளின் (Google) பொறியியல் பணிப்பாளாரில் (director) ஒருவரான றே கேர்ஸ்வில்  (Ray Kurzweil) ஆவர்.  68 வயதான இவர் இன்னும் முப்பது வருடங்களில் இது சாத்தியமாகும் என எதிர்வுகூறி 2045 வரை வாழ்ந்து நித்திய வாழ்வை அடைவதற்காக தனது தேக, மன ஆரோக்கியத்தை மிகக் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார்.  அவருடைய முக்கிய கருதுகோள், விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி, நேரியல் (linear) வீதத்தில் இல்லாமல் அடுக்கேற்ற (exponential) வீதத்தில் நடைபெற்றாலும் அதனை நாம் உணராமல் இருப்பதே.

சற்றே சிந்தியுங்கள்.  200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த எமது மூதாதையர் ஒருவர் இன்னும் 200 வருடங்களில் 1,000 மைல்களுக்கு அப்பால் நடைபெறும் நிகழ்ச்சியை நேரடியாகக் காண்பது போலக் காணலாம் என்றால் நம்பியிருப்பாரா? அவர் காலத்திற்கு முந்திய பல்லாயிரம் ஆண்டுகளில் நடைபெறாதது, இன்னும் 200 வருடங்களில் நடைபெறும் என்று கூறினால் நம்பக் கூடியதாகவா இருந்திருக்கும்? ஸ்கைப்பில் (skype) நேரில் பார்த்துக் கதைப்பது, ஆகாயத்தில் பறந்து செல்வது, குதிரைகளுக்குப் பதிலாகச் சொந்த இயந்திரக் குதிரையில் (மோட்டார் காரில்) செல்வது எல்லாம் நம்பக்கூடியதாகவா இருந்திருக்கும்?

றே கூறும் விஞ்ஞானவளர்ச்சி தானியங்கியியல் (Robotics), நனோ தொழில்நுட்பம் (Nano technology), மரபுப்பொறியியல் (Genetic engineering)  எனும் மூன்று திசைகளில் நடைபெறும்.  இம்மூன்றும் ஒன்றை ஒன்று வளர்ப்பதற்கு மிகவும் அவசியமாகும்.  மூன்றும் வளர்ச்சி அடையும் பொழுது மொத்த வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.

தானியங்கியியல் (Robotics)
1946 இல் உருவான முதலாவது இலத்திரனியல் கணனி ”எனியாக்’ (ENIAC) இன்,    செயலாக்க வேகம் (processing speed)  0.1 MHz, விலை $ 500,000 ($ 6  மில்லியன்  இன்றைய விலை),  எடை  30  தொன் (ton),  ஆக்கிரமித்த பரப்பு 1,800 சதுரஅடி,   கன அளவு 8’x3’x100′,   இதனை இயக்குவதற்கு தேவையான வலு 150 kW.   ஆனால் தற்பொழுது வெறும் 2 இறாத்தல் நிறையேயுள்ள மடிக்கணினி (Laptop)  20,000  மடங்கு செயலாக்க வேகத்தில் (processing speed) $ 850 இற்கு வாங்கமுடிகிறது.  ஒரு நுண்ணறிபேசி‎ (smart phone) கூட ”எனியாக்’ ஐ விட மிகமிக அதிகமாக வேலை செய்கிறது.

Continue Reading →