அமரர் எம்.எஸ்.கமலநாதனின் நனவிடைதோய்தல்!

கமலநாதன் அண்மையில் மறைந்த ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ பாடலை எழுதிய எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையிது. இதில் அவர் தான் ‘சின்ன மாமியே!’ பாடலை எழுதி, மெட்டமைத்த விபரங்களைப்பதிவு செய்திருக்கின்றார். இதனைப் பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள். அவருக்கு எம் நன்றி. – பதிவுகள் –


வதிரியூரில் பல்வேறு குடும்பக் குழுமங்கள் மத்தியில் யாவத்தை என்ற நீண்டகால வர்த்தகம்,கல்விப் பாரம்பத்திற்குரிய குடும்பங்களில் சீனித்தம்பி தங்கரத்தினம் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1939 ஆம் ஆண்டு மாசி 26 ஆம் திகதி பிறந்தேன். யாவத்தையில் வசித்த கூட்டுக்குடும்பங்களின் மத்தியில் நான் மூத்தவன். ஆண் பிள்ளை என்பதனாலும் என்னிடம் பற்றுப் பாசம் என அபிரிமித்மாகக் கிடைக்கப் பெற்ற எனக்கு தேவையான சகல வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப் பட்டிருந்தன.

கல்விப் பருவத்தையடைந்த நான் யா/தேவரையாளி இந்துவில் (அப்போதைய தேவரையாளிச் சைவ கலைஞானசபைப் பாடசாலை) ஆரம்பக்கல்வியினைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கற்றுப் பின் எனது தகப்பனார் தென்னிலங்கை மாத்தறையில் தொழில் நிமிர்த்தம் இருந்தமையால் தென்மாகாணம் மாத்தறை சென்தோமஸ் கல்லூரியில் (1946-1948) கல்விதனைத் தொடர்ந்தேன்.அதனையடுத்து யா/சென்யோன்ஸ் கல்லூரியில் 1949-1952 வரை கல்லூரி விடுதி (BOARDING) யில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்தேன். இக்காலப்பகுதியில்தான் அங்கு பதினொரு வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணியில் ஒருவராக இணைந்து விளையாடினேன். இதுதான் எனது உதைபந்தாட்ட முதல் பிரவேசமுமாகும்.

Continue Reading →

The Prime Minister’s Office – Communications ; Prime Minister sets new course to address crises In Iraq and Syria and impacts on the region

Justin Trueadu, The Prime Minister of Canada.February 8, 2016  Ottawa, Ontario
The Prime Minister, Justin Trudeau today announced Canada’s new policy to address the ongoing crises in Iraq and Syria and the impact they are having on the surrounding region. It will make a meaningful contribution to the Global Coalition’s fight against the Islamic State of Iraq and the Levant (ISIL), while strengthening the ability of regional governments and local authorities to defend themselves, and rebuild over the long-term.

It is a whole of government approach that enlists several federal departments to work closely together to enhance security and stability, provide vital humanitarian assistance, and help partners deliver social services, rebuild infrastructure and good governance.

On the security front, Canada looked at how the Canadian Armed Forces (CAF) could best contribute in the fight against ISIL in the region within the Global Coalition. In keeping with the mandate the government received from Canadians last fall, the government will focus on training and advising local security forces to take their fight directly to ISIL.

To this end, additional military resources will be dedicated to supporting Coalition partners at various headquarters and to training, advising and assisting Iraqi security forces in their efforts to degrade and defeat ISIL. While Canada will cease air strike operations no later than February 22, 2016, aerial refueling and surveillance activities will continue. As well, stabilization and counter-terrorism measures and chemical, biological, radiological and nuclear security programming in the region will be enhanced

Continue Reading →

ஆய்வு: பண்பாட்டு அபகரிப்பு

எழுத்தாளர் க.நவம்ஆங்கிலேய அரசியல்வாதிகள் பட்டு வேட்டி, நஷனல், சால்வை சகிதம் தமிழர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் காட்சிகளை அண்மைக் காலங்களில் கனடாவில் கண்டிருக்கின்றோம். அப்போதெல்லாம் இவர்களுள் பலரும் ‘வனக்கம்’ என்று பேசத் துவங்கி, ’நான்றி’ என்று பேசி முடிக்கக் கேட்டிருக்கின்றோம். 2012இல் ஓப்ரா வின்ஃப்றி நெற்றியில் பொட்டுடன் மும்பாய் வீதிவழியே நடந்து சென்றதை அறிந்திருக்கின்றோம். சாறியும் பொட்டும் அணிந்தவராய் மடோனா இசை நிகழ்ச்சியில் பங்குகொண்டதைப் பார்த்திருக்கின்றோம். இவையும் இவைபோன்ற இன்னபிறவும் சமூக, அரசியல், பொருளாதார பலாபலன்களை உள்நோக்காகக் கொண்ட பண்பாட்டுப் பகடைக்காய் நகர்த்தல்கள் மட்டுமே என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும் எருமைச் சருமத்தில் மழைத்துளி விழுந்தாற்போல, இவை குறித்து அக்கறை ஏதுமற்றவராய் ஏனோதானோவென்று வாழாதிருப்பதை விடுத்து, இவற்றின் பின்னணியில் தோன்றாப் பொருளாய் மறைந்திருக்கும் அதிகார அரசியலையும் – அதன் பெறுபேறாக வரலாற்று வழிவந்த வலிகள், வேதனைகள், அவமானங்கள் ஆகியவற்றைப் புதைபண்புகளாகக் கொண்ட ‘பண்பாட்டு அபகரிப்பு’ (Cultural Appropriation) எனும் எண்ணக்கருவையும் – நாம் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

‘ஒரு பண்பாட்டினரின் கூறு ஒன்றினை அல்லது கூறுகள் பலவற்றினைப் பிறிதொரு பண்பாட்டினர் தமதாக்கிக் கொள்ளல் ‘பண்பாட்டு அபகரிப்பு’ என்பது ஓர் எளிய, இலகுவான வரைவிலக்கணம். அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்களின் பாரம்பரிய உணவான ’பிற்ஸா’ இப்போது அமெரிக்கரது பாரம்பரிய உணவாகிவிட்டமையை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். ஆனால் பண்பாட்டு அபகரிப்பு என்பது இத்தகையதோர் இலகுவான விடயமல்ல. ‘ஒரு பண்பாட்டின் சில குறிப்பிட்ட மூலக்கூறுகளை அப்பண்பாட்டினரின் சம்மதமின்றி அல்லது விருப்பின்றி பிறிதொரு பண்பாட்டினர் தம்வசப்படுத்துதலே ’பண்பாட்டு அகரிப்பு’ என இன்னொரு வரைவிலக்கணம் கூறுகின்றது.

Continue Reading →

சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன்!

தோழர் சண்முகதாசன்!–  பெப்ருவரி 8 தோழர் என். சண்முகதாசன் அவர்களின் நினைவு தினமாகும். அவரது நினைவு தினத்தையொட்டி ‘பதிவுகள்’ (மார்ச் 2010  இதழ் 123) இணைய இதழில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அசலகேசரி என்னும் பெயரில் வெளியான இக்கட்டுரையினை எழுதியவர் வி.ரி,இளங்கோவன ஆவார். – பதிவுகள் –


சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான்தோழர் சண்முகதாசன்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும், சர்வதேச ரீதியாக மதிக்கப்படும், ‘மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் காலமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே, பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும், பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி, முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார்.

1960களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும், சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது, இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் ‘திரிபுவாதம்” எனக் கண்டித்தார்.. குருசேவ் முன்வைத்த ‘சமாதான சகவாழ்வு” என்ற சோவியத் பொதுவுடமைச் சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை, புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன.

1964ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க, வாலிபர் சங்க, கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர். சோவியத்சார்புப் பொதுவுடமைக் கட்சியினர் அன்று முதலாளித்துவப் பாராளுமன்றப் பாதையூடாக சோசலிச சமுதாயத்தைக் காணலாம் என்று கூறி வர்க்க சமரசமாகியதைச் சண் கடுமையாகச் சாடினார். தொழிலாளி – விவசாயி வர்க்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தின் – புரட்சியினூடாகவே விடுதலை பெறமுடியும் என்பதை வலியுறுத்தினார்.

Continue Reading →