ஆய்வு: கேடாகிப் போன கேலிச்சித்திரம்!

“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ  “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்ததுஎழுத்தாளர் க.நவம்“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ  “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. அவுஸ்திரேலியாக் கண்டம் இன்று அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிக்க, இந்தச் சின்னஞ்சிறு கேலிச் சித்திரம் காரணமாகிவிட்டது! சர்ச்சைக்குரிய இந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவர் ப்பில் லீக் (Bill Leak) என்பவர். இதனால் ஒரு புறத்தில் கோபத்துடன் கிளர்ந்தெழுந்து, ஆர்ப்பரித்து நிற்பவர்கள் அவுஸ்திரேலியப் பழங்குடியினர். அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்புபவர்கள் சில அரசியல்வாதிகள், நடுநிலை ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், உள்ளூர் – வெளியூர் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்கான அமைப்பினர் – முகவர் நிலையத்தினர் எனப் பலதரப்பட்டவர்கள். இனவெறுப்பாளர்களுடன் மறுதரப்பில் கைகோர்த்து நின்று கள்ள மௌனம் காப்பவர்கள் வெள்ளை நிறப் பெரும்பான்மையினர். இடையில் நின்று இருபக்க மத்தளம் போல அடிபடுவோர் அரசயந்திரச் சாரதிகளும் சங்கூதிகளுமான அரசாங்கத்தினர்!

Cartoons எனப்படும் கேலிச் சித்திரங்கள் அதன் ஆரம்ப காலங்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்த வர்ணனைகளையும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தும் வரைபடங்களாக இருந்து வந்துள்ளன. அங்கதத்துடனும் நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும் நுட்பமான விமர்சனங்களை மிகுந்த புத்தி சாதுரியத்துடன் அவை முன்வைத்து வந்துள்ளன.

இந்த வகையில், மேற்கூறப்பட்ட கேலிச்சித்திரத்தை வரைந்த ப்பில் லீக், தனது கேலிச்சித்திரத்தைக் கண்டு, ‘புனிதமான இனிய பறவைகள் வீறிட்டெழுந்துள்ளன’ என்று குறிப்பிட்டிருப்பதுடன், இதன் விளைவாக ஆத்திரம் கொண்ட சமூக ஊடகப் பாவனையாளரிடம், காவல் துறையினர் தம்மைக் கையளிப்பது போன்ற ஒரு புதிய கேலிச்சித்திரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், பிரச்சினைக்குரிய அந்தக் கேலிச்சித்திரத்தைப் பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியர், தமது செயலை நியாயப்படுத்தி இருக்கின்றார். பழங்குடி இனத்தவரின் அலுவல்களுக்கெனத் தமது பத்திரிகை கணிசமான மூலவளங்களை ஏற்கனவே அர்ப்பணித்துள்ளது எனவும், இந்தக் கேலிச்சித்திரம் அவர்களை இழிவுபடுத்தும் ஒன்றல்ல எனவும் அவர் வாதிட்டிருக்கின்றார்.

Continue Reading →

ஆய்வு: முனைவர். சூ. இன்னாசியின் திருத்தொண்டர் காப்பியத்தில் “பெண்ணலம்”

ஆய்வுக்கட்டுரை வாசிப்போம்!முன்னுரை:
இலக்கியமென்பது அறிவுறுத்தல், இன்புறுத்தல் ஆகிய இருபெரும் பணிகளைச் செய்யவேண்டும். இவ்விருபெரும் பணிகளைச் செய்யும் இலக்கியங்கள்தாம் வாழ்வாங்கு வாழ்கின்றன. பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் எழுதிய “திருத்தொண்டர் காப்பியம்” என்ற இலக்கியமும் அங்ஙனமே வாழ்வாங்கு வாழும் வகையில் உள்ளது. அவரது இக்காப்பியத்தில் பல இடங்களில் பெண்ணியம் சிறப்பிக்கப் பெறுகிறது. பெண் சிறந்தால் நாடு சிறக்கும். பெண்மையை சிறப்பு செய்ய தமிழ்க்கவிஞர்கள் பலர் பா இயற்றியிருந்தாலும், பெண்மை பெருமைப்பட வேண்டும் என்ற நன்நோக்கில், பேராசிரியர் முனைவர்.   சூ. இன்னாசி அவர்கள், “திருத்தொண்டர் காப்பியம்” என்னும் தம் காப்பியத்தில் “பெண்ணலம்” பீடுற்ற நிலையை அரிய பல உண்மைகள் வாயிலாக அழகாக, நயம்பட எடுத்துரைக்கின்றார்.

முனைவர் சூ. இன்னாசியின் பிறப்பு:
பேராசிரியர் சூ.இன்னாசி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சூசைபிள்ளை, லூர்தம்மாள் இணையருக்கு 1934 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 13ஆம் நாள் பிறந்தார். திருமயம், தேவகோட்டை ஆகிய ஊர்களின் பள்ளிகளில் பயின்று 1951இல் பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றார். பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியையும் முடித்து 1953இல் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். பணியாற்றிக் கொண்டே வித்துவான், தமிழ் இளங்கலை, முதுகலை போன்ற பட்டங்களையும் பெற்றார்.

கல்லூரிப்பணி:
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணி நியமனம் பெற்று முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1983ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர்-தலைவராகப் பணியமர்த்தப் பெற்றார். 1993 வரை அங்குப் பணிபுரிந்தார். ஆசிரியர், ஆய்வாளர், படைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர். சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமைகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பேராசிரியர் தமிழ்ப் புலத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் (டி.லிட்) பட்டமும் பெற்றார்.

Continue Reading →

ஆய்வு: இன்னா நாற்பது காட்டும் அரசியல் நெறிகள்!

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் கபிலர். இவர் சிவன், திருமால், பிரம்மன் முருகன் முதலிய நால்வரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது. இந்நூலில் அமைந்துள்ள நாற்பது பாடல்களிலும் 160  கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இந்நூலில் இடம்பெறும் அரசியல் நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

அரசன்
இன்னா நாற்பதில் அரசியல் நெறி அரசனையே மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அரசன் என்னும் சொல்லிற்கு  தமிழ் மொழி அகராதி இராசன் எப்பொருட்கு மிறைவன்,எழுத்து தானம் ஐந்தினொன்று,கார் முகிற் பா~hனம்,துருசு,பாணகெந்தகம்,முக்குவர் தலைவன்,வியாழன் என்று பொருள் கூறுகிறது.(பக்.113)
அரசன் என்பதற்கு க்ரியா அகராதி பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையை பெற்றவர் என்றும் மiபெ என்றும் பொருள் கூறுகிறது.மேலும் அரசன் செய்யும் அரசாட்சியை ஆளுகை,நிர்வாகம் சரடந ழச சநபைn ழக ய மiபெ என்று பொருள் உரைக்கிறது. (ப.38)

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி.இதற்கு காரணம் மன்னது  நீதி ஆட்சி முறையில் தான்  மக்களது நல்வாழ்வு அடங்கும்.ஆட்சியின் உயர்வும் தாழ்வும் மக்களை நேரிடையாகப் பாதிக்கும் என்பதை மோசிகீரனார்,

நெல்லும் உயிரென்றே நீரும் உயிரென்றே
மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்ப தற்கை
வேல்மிகு தானே வேந்தற்குக் கடனே      (புறம்.186)

என்ற பாடலின் மூலம் மக்கள் மகிழ்ச்சியுடனும்,செழுமையுடனும் வாழ்வதும,; பகை,பஞ்சம்,பிணி போன்றவற்றிலிருந்து காப்பதும் மன்னன் ஆகையால் நெல்லும் நீரும் உயிரன்று மன்னனே மக்களுக்கு உயிர் போன்றவன் என்கிறது.மேலும் புலி தன் குருளைகளை பேணுவதைப் போல அரசன் மக்களைப் பேணி காத்தான் என்பதை,

புலி புறங்காங்கும் குறளை போல
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப  (புறம்.42:10-11)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

Continue Reading →

தொடர்நாவல்: “ஒரு நம்பிக்கை காக்கப்பட்டபோது…! ”

அத்தியாயம் மூன்று:

ஆர்.விக்கினேஸ்வரன்அன்றய  இரவுப்பொழுது  விடியும்போது, என்  வாழ்விலும்  விடியல் மகிழ்ச்சி  தெரிந்த்து. பகல்பொழுது  திருமண வைபவத்தோடு  கழிந்தது.  நண்பன்  வீட்டுத் திருமணம் அல்லவா…! ஓடியோடி  வேலைபார்த்துப்  போதும் போதும்  என்று  ஆகிவிட்டது. செமையாக  உழுக்கு எடுத்துவிட்டார்கள். வேலைகளை முடித்து, குளித்துச்  சாப்பிட்டுவிட்டு, லாட்ஜில்  எனக்கென்று  ஒதுக்கிய  ரூமுக்கு சென்று, கட்டிலில்  விழும்போது  பத்துமணி  ஆகிவிட்டது. மாலாவின்  எண்ணுக்குப்  போன்  எடுத்தேன்.  மறுமுனையில் கலாவின்  அப்பா. “கலாவிடம் கொடுங்கள்….” எனச்  சொல்லவும்  முடியவில்லை. அதேவேளை,  என்மீது  அவர்கள்  மனதில்  தப்பான  எண்ணங்கள்  இருக்கும் பட்சத்தில், அதனை  நீக்கும் முகமாக  நான்  பேசவேண்டிய முதல் நபரே  அவர்தான்.  

ராமேஸ்வரத்தில்,  கலா வீட்டிலிருந்து  புறப்பட்டு  எனது  வீடு நோக்கிச்  சென்றது முதல், அங்கு நடந்த பிரச்சினைகள்.. ஹோமா நிலை, அதன் பின் ஓராண்டு கழித்து, ராமேஸ்வரம்  சென்று  அவர்கள் குடும்பம் பற்றி  விசாரித்தமை,  ஏமாற்றத்தோடு திரும்பியமை  அனைத்தையும் விபரமாகக்  கூறிவிட்டு,  பேச்சின்  கோணத்தைத்  திருப்பினேன். முக்கியமாக, மாலாவை இரவுவேளையில்  வியாபாரம் செய்ய விடுவது பற்றிய, மன விசனத்தைக்  கொட்டியபோதுதான், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவளுக்குத்  திருமணமான தகவலை  அவர் தெரிவித்தார். உள்ளூர  மகிழ்ந்தேன்…! அதையடுத்து, அவளின் கணவன் இரண்டு  மாதங்களுக்குள்ளாக, இறந்துபோனதையும்…, அவள் விதவையானதையும் தெரிவித்தார். உள்ளத்துள்  நெகிழ்ந்தேன்…!! இறுதியாக, அவளது கணவனை.. “அவளே கொன்றாள்..” என்றும், அதற்குக் காரணம் : அவனது தவறான  நடத்தையின்  உச்சக்கட்டம் என்றும், அதன் பொருட்டு – சிறைவாசத்தையும் அனுபவித்தாள் மாலா என்பதையும் தெரிவித்தார். உண்மையில்  அதிர்ந்து போனேன்…!!! அதைவிடக்  கொடுமையான  சம்பவம்  நான் கொடுத்திருந்த  என்வீட்டு  விலாசத்திற்கு, ஆரம்ப காலத்தில் கலா எழுதிய கடிதங்கள், மூன்று வந்துள்ளன. என்னுடைய  ‘ஹோமா’காலத்தில், வந்த இக் கடிதங்கள் அனைத்தையும் என் பெற்றோர், உறவினர் எல்லோரும் சேர்ந்து மறைத்து விட்டனர். அது மட்டுமன்றி, கலா குடும்பத்தார் யாவரும் ராமேஸ்வரத்திலிருந்து இடம் மாறியமை, மாறிச் சென்ற புது இடத்தின் முகவரி  உள்பட  யாவும் தெரிந்து வைத்துக்கொண்டுதான், என்னோடு  ராமேஸ்வரம் வந்து, கலா குடியிருந்த வீட்டுக்கெல்லாம் அலைந்து…..  அப்பப்பா…. எத்தனை  அழகாக நடித்து முடித்துவிட்டார்கள்.    அது மட்டுமல்ல.!  ‘அக்னி தீர்த்த’த்தில் நீராடி, எனக்காக அர்ச்சனைகள் செய்து…. சே…சே…..  கண்ணை மறைத்துக்கொண்டிருக்கும் மூட கெளரவம்.. கடவுள் முன்னும் ‘கபடநாடகம்’ புரியவைத்துவிட்டதா..

Continue Reading →

ஆய்வு: பறை கொட்டிக் கூத்தும் ஆடி இன்புற்றிருந்த பண்டைத் தமிழன்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பறை என்பதை ஆதிகாலம் தொடக்கம் இற்றைவரை தென் இந்தியத் தமிழ் நாட்டு மக்களும், சிறி – இலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களும் தம் இசைக் கருவியாகப் பாவித்து வருகின்றனர். பறை என்பதற்கு முரசு, முரசொலி, தட்டு, கொட்டு, மிடா, முரசடிப்பவர் என்றும் அகராதிச் சொற்கள் உள. பறை என்றால் ‘அறிவித்தல்’ என்ற பொருளும் உண்டு. இது தமிழரின் பாரம்பரிய இசைக் கருவியுமாகும். இது எல்லாத் தோல் இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவியாகும். இதன் ஒலி அரைக் கி.மீ. தூரம் வரை சென்று அங்குள்ளோரைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.

ஆதிகாலத்தில் கூத்தாடல், பிண ஊர்வலம், கோயில் திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சிகள், அறுவடை காலத்தில் விழா நடத்துவதற்கும், பறவைகளைத் துரத்துவதற்கும், போர் காலத்தில் வெற்றி தோல்வி அறிவிக்கவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டளைகள், செய்திகள். உத்தரவுகள் ஆகியன அறிவிக்கவும், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றிற்குப் பறையினைப் பெரும்பாலும் பாவித்தனர். மேலும், சுகப் பிரசவம் வேண்டிக் கோயில்களில் பறை முழக்குவதும் அன்றிலிருந்து இற்றைவரை காணக்கூடிய தெய்வ நம்பிக்கைக்குரிய ஒரு நிகழ்ச்சியாகும். இன்னும், ஒரு சிலர் கோயிற்; பூசை நிகழ்வின்போது தெய்வ உருவெடுத்துக் குறி கூறுவதையும் காண்கின்றோம். இதன்போது பறையை அடித்து அடித்து உருவேற்றுவர் பறையடிப்பவர்கள்.

பறை பசுவின் தோலால் ஆக்கப்பட்டது. அதை இரண்டு தடிகளால் அடித்து முழக்குவர். அதில் ஒரு தடி 28 செ.மீ. நீளமுடையது. மற்றத் தடி 18 செ.மீ. நீளமுடையது. இரு தடிகளும் மூங்கில் தடிகளாகும். பறையை நின்று கொண்டும், நடந்து கொண்டும், இருந்து கொண்டும் அடிப்பார்கள். பறையின் முரசறைவை 1. ஒத்தையடி என்றும், 2. தென்மாங்கு என்றும், 3. சாமியாட்டம் என்றும், 4. துள்ளல் என்றும், 5. உயிர்ப்பு என்றும் வுகுத்துக் கூறுவர்.

பறையில் பல்வேறுபட்ட பறைகள் உள்ளன. அவற்றில்  1. ஆரியப் பறை, 2. ஆறிருப் பறை, 3. உவகைப் பறை, 4. சாப் பறை, 5. வெற்றியின் பறை, 6. மீன்கோற் பறை, 7. மருதநிலப் பறை, 8. குறவைப் பறை, 9. தடாருப் பறை, 10. குறும் பறை, 11. கேற் பறை, 12. தடாரிப் பறை, 13. நிசாளம் பறை, 14. தலைப் பறை, 15. பண்டாரப் பறை, 16. பான்றிப் படை,        17. முருகியம் பறை, 18. வெறியாட்டுப் பறை, 19. வீரணம் பறை, 20. பஞ்சமாசதம் பறை என்பவை ஒரு சிலவாகும்.

Continue Reading →

கவிதை: தமிழ்க் கனேடியனும் நானும்!

கவிஞர் திருமாவளவன்இன்று கவிஞர் திருமாவளவனின் நினைவு தினம்.  அவரது நினைவாக அவரது கவிதைகளிலொன்றான ‘தமிழ்க்கனேடியனும் நானும்’ என்னும் கவிதையினை இங்கு எமது வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.- ப்திவுகள் –


இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.

இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் ‘இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?’ என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.

எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. மகிழ்ச்சி!   ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.

மிகுந்த வேடிக்கை என்னவென்றால் தாம் உண்மையான கலை, இலக்கியவாதிகளாகத்தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும்பலர் கூடத்தம் சொந்த வாழ்வில் இவ்விதம்தானிருக்கின்றார்கள். இவ்விதமான நகல் கலை, இலக்கியவாதிகள் அசல் கலை, இலக்கியவாதிகளைச்சந்திக்கும்போது கலை, இலக்கியம் பற்றி உரையாடுவதில்லை. பொருள் பெருக்குவது பற்றியதாகவே அவர்களும் உரையாடலைத்தொடங்குவார்கள்.

இவர்களில் பலர் என்னைச்சந்திக்கும்போதும் ‘பதிவுகள்’ இணைய இதழைப்பற்றி ஆர்வமாகக் கேட்பார்கள். அப்படி என்ன ஆர்வமாகக் கேட்கின்றார்கள் என்கின்றீர்களா? அவர்களது கேள்வி இதுதான்: “பதிவுகள் நடத்துவதால் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?”

இந்நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமரர் திருமாவளவன் தனது கவிதையொன்றில் விபரித்திருக்கின்றார். கவிதையின் பெயர்: ‘தமிழ்க்கனேடியனும் நானும்‘.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 200: மீண்டு வருக!

தமிழக முதல்வரின் சிறு வயதுத்தோற்றம்.தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாதமிழக முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் கட்சி பேதமின்றி அவர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டுமென்று வாழ்த்தியிருக்கின்றனர். இது தமிழக அரசியலில் காணாத விடயம். அரசியல் நாகரிகம் இன்னும் சிறிதாவது இருப்பதை எடுத்துக்காட்டும் பண்பு இவ்வாழ்த்துதலில் தெரிகிறது. “மகிழ்ச்சி!”

தமிழக முதல்வர் பற்றிய அரசியல்ரீதியிலான கருத்துகளுக்கு அப்பால் அவர் தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப்பெற்ற வசீகரம் மிக்க தலைவர். அந்த மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ள வேண்டும். அவரை உயிருக்குயிராக விரும்பும் அந்த மக்களுக்காக அவர் விரைவில் பூரண சுகமடைந்து வருவார் என்று எதிர்பார்போம். ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் சுகவீனம் சாதாரணமானதல்ல. அது பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் வெளியில் வராது மறைக்கப்பட்டிருந்தாலும், அவர் கடுமையானரீதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதுதான் அது. ஏதாவது தொற்றுநோயாகக்கூட இருக்கலாம். சவால்களை எதிர்த்து மீண்டு வரும் ஆளுமை மிக்கவர் அவர். இம்முறையும் மீண்டு வருவாரென்று எதிர்பார்ப்போம்.

பெண் சிசுக்கொலையைத்தடுக்க எடுத்த நடவடிக்கை,  மாணவர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவும் திட்டங்கள். போன்ற அவரது திட்டங்கள் வறிய மக்களுக்கு மிகவும் உதவும் திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை.

Continue Reading →