வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் ‘தாத்தாமாரும் பேரர்களும்’ பற்றி…..; முனைவர் சி. மெளனகுருவின் ‘சங்காரம்’ கவிதை நாடகம் பற்றி…

1. கவிஞர் நுஃமானின் ‘தாத்தாமாரும் பேரர்களும்’ பற்றி…..

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் 'தாத்தாமரும் பேரர்களும்' பற்றி.....; முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...ஈழத்துத்தமிழ்க் கவிதையுலகில் எம்.ஏ.நுஃமானின் ‘தாத்தாமாரும் பேரர்களும்’ முக்கியமான கவிதைத்தொகுதி. நுஃமானின் ஐந்து நெடுங்கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசகர் சங்க வெளியீடாக (கல்முனை) வெளியானது.

இத்தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் வருமாறு:

1. உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்
2. அதிமானிடன்
3. கோயிலின் வெளியே
4. நிலம் என்னும் நல்லாள்
5. தாத்தாமரும் பேரர்களும்

இந்நூலை நுஃமான் கவிஞர் மஹாகவிக்கும், நீலாவணனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.

இன்று கவிதைகள் என்னும் பெயரில் நூற்றுக்கணக்கில் எழுதிக்குவிப்போர் ஒரு கணம் நுஃமான் போன்றோரின் கவிதைகளை வாசித்துப்பார்க்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள் ஒருவருக்கு மரபுக்கவிதையின் அறிவு எவ்விதம் இன்றைய கவிதையினை எழுத உதவியாகவிருக்கும் என்பதை. உதாரணத்துக்கு நூலிலுள்ள நுஃமானின் ‘அதிமானிடன்’ கவிதையிலிருந்து ஒரு பகுதியைப்பார்ப்போம்:

Continue Reading →

வே.நி. சூர்யா கவிதைகள்!

1. தாந்தேவின் நரகத்தில் நான்

 தாந்தேவின் நரகத்தில் நான்அப்போது வலியின் ஒளியொலிக்கீற்றுகள் நிறப்பிரிகை கண்டு
வானவில்லாகக் கதறல்களை அம்பாகத் தொடுத்து கொண்டிருந்தது எனக்குள்
தாந்தேவின் நரகத்திற்குள் பிணங்களை அரைத்து பொடியாக்கி
காலைக் காபியில் கலந்து அருந்துபவனை நான் சந்தித்தேன்
ரகசியங்களை கேட்கப் பல ஜோடிக் காதுகள்
ஊசியில் கோர்க்கப்பட்டு அவன் அலமாரியில் இருந்தன
நீயொரு பெண்ணாய் இருந்தாய்
நான் உன் ரகசியங்களை என்னுள்
ரகசியப்படுத்தி கொண்டிருந்தேன்
என் மூளையின் சதைமடிப்புகளுக்குள்
என்றொரு உரையாடல் கேட்கிறது நீ தானா அது என்கிறான்
என் முகத்தை கழற்றி எறிகையில்
தற்கொலையின் வாசனையைப் பின்பற்றி
என்னை உண்ணக் காத்திருந்தவர்கள் வந்திருந்தார்கள்
ஒப்பந்தத்திற்க்ச் சம்மதிக்கிறேன் என மொழிந்தேன்
என் தலையை அவர்களும் என் உடலை அவனும் உண்ணும்போது
தற்கொலையின் சீழ் காற்றில் பரவி காலத்தின் யோனிக்குள்
விந்தென கறுப்பு ரத்தம் பாய்கிறது
கூடவே எனக்காக சிரிக்கிறது
என் சொல்லும் என் முள்ளும் கடைசியாக
என் குடல்களை என் எலும்பால் உருவாக்கிய யாழில் நாணென போட்டு
என் நுரையீரல் அதிர இசைப்பார்கள்
என் பிறப்புறுப்புகளை புல்லாங்குழலென உருவாக்கி இசைப்பார்கள்
என் தோலை மிருதங்கத்தில் பொருத்தி இசைப்பார்கள்
என் மூளையின் சதைமடிப்புகளை விரித்து அதன்மேல் சயனம் கொள்வார்கள்
என்றெல்லாம் நினைத்து மகிழ்வுடன் உருவாகிறேன்
இல்லாமல் இருப்பவனாய்
அப்போது மரணத்தின் வானவில் தலைகீழாக மாறியிருந்தது என்னைத் தொடுத்தபடி

(நரகங்களின் வரைபடங்களை வைத்திருக்கும் தாந்தேவுக்கு )

Continue Reading →

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

தீபத் திரு நாளில் தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்……. தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீயவை அனைத்துக்கும்  தீயை மூட்டுவோம்.தீண்டாமைக்கும்…

Continue Reading →