எம். ஜெயராமன் (மெல்பேண் … அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

1. வாய்க்கும் நல்ல தீபாவளி

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி
மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி
நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

புலனெல்லாம் தூய்மைபெற
புத்துணர்வு பொங்கிவர
அலைபாயும் எண்ணமெலாம்
நிலையாக நின்றுவிட
மனமெங்கும் மகிழ்ச்சியது
மத்தாப்பாய் மலர்ந்துவிட
வாசல்நின்று பார்க்கின்றோம்
வந்திடுவாய் தீபாவளி !

பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்
தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்
கஷ்டமான அத்தனையும் கழன்றோட வெண்டுமென்று
இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்
தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம்
தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்
தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !

Continue Reading →