காலத்தால் அழியாத கானங்கள் (4-6)

காலத்தால் அழியாத கானங்கள் 4:  நாரே நாரே நாரே! நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

ஸ்ரேயா கோஷல்கவிஞர் வைரமுத்துஇன்று இந்தியத்திரையுலகில் கொடி கட்டிப்பறக்கும் பாடகிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியாக ஸ்ரேயா கோஷலைக் கூறுவேன். அவரது பிறந்த தினம் மார்ச் 12. மார்ச் 12, 1984 பிறந்த ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர். ‘சரிகமப’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறந்த பாடகியாகப் புகழ்பெற்று, திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியால் இனங்காணப்பட்டு (Sanjay Leela Bhansali ) , அவரது தேவதாஸ் இந்தித் திரைப்படத்தில் (2002) பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டு, அப்படத்தின் மூலமே இந்திய மத்திய அரசின் மற்றும் ஃபிலிம்ஃபெயர் சஞ்சிகையின் சிறந்த பாடகிக்கான விருதினைப்பெற்றவர். குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதினையும், ஆறு தடவைகள் ஃபிலிம்ஃபெயரின் விருதினையும் சிறந்த பாடகிக்காகப் பெற்றவர். இவை தவிர தமிழக அரசின் மாநில விருதினை இரு தடவைகளு, மூன்று தடவைகள் கேரள மாநில அரசின் விருதினையும் , மேலும் பல விருதுகளையும் பெற்றவர். இங்கிலாந்திலுள்ள Madame Tussauds அருங்காட்சியத்தில் மெழுகினால் சிலையாக வடிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பாடகர் என்ற பெருமையினையும் பெற்றவர். இவரது பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையானவை. திரைப்படங்கள் மட்டுமல்லாது, சொந்தமாகவும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இசை ஆல்பங்கள் தயாரித்தும் வெளீயிட்டுள்ளார்.

இவர் பாடகர் உதய் மஜும்தாருடன் பாடிய மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ‘குரு’ படத்தில் பாடிய ‘நன்னாரே’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. இப்பாடலின் சிறப்புகளாக ஸ்ரேயா கோஷலின் குரல், ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் வைரமுத்துவின் வரிகள் , இயற்கையெழிலின் அழகிய காட்சிகளை வெளிப்படுத்தும் ஒளிப்பதிவு மற்றும் ஐஸ்வர்யா ராஜி`ன் நடிப்பு, நடன அசைவுகள் ஆகியவற்றைக் கூறுவேன்.

Continue Reading →

ஆய்வு: தமிழ் சூடியில் சமுதாய நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
17.4.1917 ஆம் ஆண்டு மேலைச் சிவபுரியில் வ.சு.ப. மாணிக்கம் பிறந்தார்.இயற்பெயர் அண்ணாமலை.மாணிக்கம் என்று அழைக்கப்பட்டார்.அப்பெயரே நிலைத்து விட்டது.பண்டிதமணி கதிரேசச் செட்டியாரின் தொடர்பால் தமிழ் நூல்களை ஊன்றிப் படித்தார். தமிழில் ‘அகத்திணைக் கொள்கை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.தமிழ் சூடி என்னும் நூலை இயற்றியவர் ஆவார்.இவர் கல்விச் சிந்தனையில் தலையாயவர்.மொழிப் பகை விரும்பாதவர்.மொழிக்கலவை வேண்டாதவர்.எக்கலையும் தமிழ்ப்படுத்தலாம் ;.என்னும் கொள்கையர்.அறிவுத் தூய்மை போல அகத்தூய்மையும் புறத்தூய்மையும் கொண்டவர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவு நலம் பெற்று வளர்ந்து அழகப்பர் கல்லூhயில் ஆள்வினைத்திறம் கற்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மதிப்புயர் துணைவேந்தராக பணியாற்றிய இவர்.இளமைத்துறவு,செல்வத் துறவு போலப் புகழ்த்துறையும் விரும்பும் காந்திய நெறியாளர் உரைநடையில் புதுத்தடம் காட்டுபவர்.உவமை நடையும், சுருக்க நடையை வளஞ் செய்து தனிநடையாளராகக் காட்டுகின்றன.இவர்; பாடிய ‘கொடை விளக்கு’ வள்ளல் அழகப்பரின் புகழ்பாடும் தமிழ் விளக்கு.இவரால் இயற்றப்பட்ட தமிழ் சூடி,ஆத்திசூடி போல அமைந்தது.இவருடைய பாடல்களில் உலகப் பார்வை,தேசியப் பார்வை,தமிழ்ப் பார்வை,ஒழுக்கப் பார்வை,நடைமுறைப் பார்வை எனப் பலவிதப் பார்வைகளைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்துள்ளார்.இந்நூல் ஒரடியால் அமைந்த 118 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளன சூடிகள் பலவற்றிலும் தமிழ் சூடிக்கு தனி இடம் உண்டு இந்நூல் காப்பு வாழ்த்துப் போல் குழந்தையை முன்னிலையாக கொண்டு தமிழை வாழ்த்தி பாடியுள்ளார்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

தமிழ்ப்பற்று
இந்நூலில் தமிழ்ப்பற்றை வளர்க்க கூடிய பாடல்கள் ஏழு  (1,21,44,50,61,62,100,) ஆகும்.  ஒவ்வொரு மனிதருக்கும் தமிழ்ப்பற்று இருக்க வேண்டும்.இப்பற்றை வளர்ப்பது தமிழ் நூல்கள் இந்நூல்களைப் படிக்க வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இதனை,

Continue Reading →

ஒப்பீட்டு நோக்கில் கடைநிலைத்துறை (தொல்காப்பியம், புறநானூறு)

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இலக்கியங்களைப் பொதுவாக அகம், புறம் என்று பிரிப்பர். குடும்பம்; சார்ந்தவை அகம் என்றும் சமூகம் சார்ந்தவை புறம் என்றும் கொள்ளலாம். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் புறத்திணையியலும் சங்க இலக்கியத்தின் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறம் சார்ந்தவை. அத்தகைய இலக்கிய இலக்கணங்களுள் தொல்காப்பியத்தின் பாடாண் திணை சார்ந்த கடைநிலைத் துறையை புறநானூற்று கடைநிலைத் துறைப் பாடல்களோடு பொருத்தி  ஆய்வதை நோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வு அமைகின்றது.

தொல்காப்பிய கடைநிலைத்துறை
உள்ளத்துணர்வால் உணரும் இன்பம் தவிர்ந்த அனைத்து உலக வாழ்வும் புற வாழ்வாகும். தொல்காப்பிய பொருளதிகாரத்தில் புறத்திணையியல் மட்டுமே புறம் சார்ந்தது. புறத்திணையியலில் தொல்காப்பியர் ஏழு திணைகள் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார்.  அவ்வெழுவகைத் திணைகளுள் ஒன்று பாடாண் திணை. பாடாண் திணை இருபது துறைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் கடைநிலைத் துறையும் ஒன்று.  இதனை

“கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தலும்
……   ……  …….   ……..  ……..
வழிநடை வருத்தம் வீட வாயில்
காவலர்க்குரைத்த கடைநிலையானும்
…….        …….       ……. “        (தொல்-1036)

என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். கடைநிலைத் துறை குறித்து தமிழண்ணல் அவர்கள்

“மிக நீண்ட தூரத்திலிருந்து வந்த வருத்தம் தீருமாறு வாயில் காவலரிடம் தன் வருகையை அரசனிம் கூறுமாறு சொல்லும் கடைநிலை”
என்று விளக்கம் அளித்துள்ளார்.

புறநானூற்றில் கடைநிலைத் துறை
புறநானூற்றில் பதினொரு பாடல்கள் கடைநிலைத் துறைப் பாடல்களாக அமைந்துள்ளன. இவை மன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறும் நோக்கத்துடனும் பரிசில் அளித்தமைக்காக வாழ்த்தும் நோக்கத்துடனும் பாடப்பட்டவையாக அமைந்துள்ளன. மன்னனது கொடைச் சிறப்பைப் பாடும் பாடல்களில் புலவர்கள் வற்கடம் நேர்ந்த காலத்தில் கூட புரப்போரின் வள்ளண்மையால் தான் பாதுகாக்கப்படும் உறுதியுடன்  பாடியுள்ளனர். மேலும் தனது உள்ளக் கிடக்கையினை நன்றி உணர்வினை கிணைப் பொருநன் கூற்றாக அமைத்துப் பாடியுள்ளனர்.

Continue Reading →