இத்தாலியில் ஐந்து நங்கைகளின் நடன அரங்கேற்றமும் பட்டமளிப்பும்

இத்தாலியில் ஐந்து  நங்கைகளின்  நடன அரங்கேற்றமும் பட்டமளிப்பும்

‘ இத்தாலியின் பலர்மோ நகரில் வாழ்கின்ற செல்விகள் செந்தூரன் சந்தியா, அன்ரன் ரோமன் பிரிஸ்ரிக்கா, ஜெயக்குமார் பிரவீனா, அமலராசா அஸ்வின், சிறிகரன் ஸ்ரெவானியா ஆகியோரின் பரதநாட்டிய அரங்க நிகழ்வு ஒரே மேடையில் இடம்பெறுவது பெரும் மகிழ்வைத் தருகின்றது. சிறந்த குருவான ‘நர்த்தன கலாபவன நடனப்பள்ளி’யின் அதிபரான ஸ்ரீமதி லோஜினி திஷரூபனின் பெருமுயற்சியும்; அரங்க நர்த்தகிகளின்;; பெற்றோர்களின் ஒற்றுமையான செயற்பாடுகளுமே இத்தகைய ஒருங்கிணைந்த வெற்றிக்குக் காரணம். நடன நங்கைகளை டிப்ளோமாவரை பயிற்சியளித்து அரங்கேற்றி அந்த மேடையிலேயே பட்டம்பெற வைப்பது என்பது இலகுவான செயலன்று. யாழ்பல்கலைக்கழகத்தில் நாட்டியத்தில் பட்டம் பெற்ற நாட்டியக் கலைமாமணி லோஜினி திஷரூபன் பதினான்கு வருடங்களுக்கு மேலாக பலர்மோவில் நடனப்பள்ளியை நடாத்திய நீண்ட அனுபவமும் பரதக் கலையை வளர்ப்பதில் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் இவை எடுத்துக் காட்டுகின்றது’ என்று பலர்மோ நகரில் உள்ள மிகப் பெரும் அரங்கில் இடம்பெற்ற பரதநாட்டிய அரங்க – பட்டமளிப்பு நிகழ்வில், லண்டனில் இருந்து பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த லண்டன் கீழைத்தேய பரீட்சை நிறுவனத்தின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் குறிப்பிட்டார்.

Continue Reading →