தமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்பு

முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் -தமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.  அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது.  செய்யுள் இலக்கியம் படிப்பதற்குக் கடினமானது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.  அதனால் சிறுகதை இன்று தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஊடகங்களும் பேருதவியாக உள்ளன. நாளேடுகள், பருவ இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன.  பல சிறுகதை ஆக்கங்கள் உருவாகின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பல்கிப் பெருகியது.

நவீன தமிழ்ச் சிறுகதை என்ற முகவரியுடன் இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் வெளிவரு கின்றன.  அவை தொகுப்பாக்கமும் செய்யப்பட்டுள்ளன. எனவே அச் சிறுகதைகளை ஓரிடத்திலே பார்ப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.  அந்த வகையில் தமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்புப் பற்றிய கருத்துப் பகிர்வாக இக்கட்டுரை அமைகிறது.  இன்றைய சிறுகதை எழுத்தாளர்கள் உலகெங்கும் பரவி நிற்கின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு அதற்கு ஒரு காரணமாக அமைந்ததெனலாம்.  தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களில் தமிழ் ஊடகங்களும் உருவாகின.  அவ்வாறு உருவாகிய ஊடகங்கள் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் ஏற்றிருந்தன.  இந்தச் சூழலில் குரு அரவிந்தன் என்ற சிறுகதை எழுத்தாளரையும் அடையாளம் காண முடிகிறது.

Continue Reading →

ரொறன்ரோதமிழ்ச்சங்கம்: மாதாந்த இலக்கியக்கலந்துரையாடல் “கனடியத்தமிழ்த்திரைப்படங்கள்: இதுவரையில்……….”

நிகழ்ச்சிநிரல் பிரதமபேச்சாளர்உரை: திரு.கந்தசாமிகங்காதரன் சிறப்புபேச்சாளர்கள்உரை: “கனடாவில்தமிழ்த்திரைப்படத்தயாரிப்பு: பட்டதும்அறிந்ததும்” –  திரு.எஸ்.ஶ்ரீமுருகன் |திரைப்படஇயக்குனராக என்அனுபவங்கள்” – திரு. லெனின்எம்.சிவம்” } “விமர்சகர் பார்வையில் கனடியத்தமிழ்த்திரை” –திரு .ரதன் ஐயந்தெளிதல்அரங்கு…

Continue Reading →

ஆய்வு: சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் மடலேறும் தலைவன்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பாண்டிய மன்னர்கள் தாம் அரசாண்ட காலத்தில் முச் சங்கங்களான தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய சங்கங்களை அமைத்து இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்து வந்தனர். அதில் தலைச் சங்கம், இடைச் சங்கம் ஆகியவற்றில் எழுந்த பல சிறந்த நூல்கள் யாவும் (தொல்காப்பியம் ஒன்றைத் தவிர) கடலன்னையின் சீற்றத்தால்  அழிந்து விட்டன. இருந்தும் கடைச் சங்கக் காலத்தில் எழுந்த ஒரு சில நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்று அழைத்தனர். இச் சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை ஆகிய நூல்களைப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் வகுத்துக் காட்டுவர் ஆன்றோர்.

சங்க இலக்கியங்களில் தமிழர் தம் வாழ்வியல், அறவியல், அறிவியல், தொன்மை வாய்ந்த மொழி, பெருமை மிகுந்த பண்பாட்டுச் சிறப்பு, சிந்தனை வளமுடைய இலக்கண இலக்கியங்கள், இயற்கை வளம், நாகரிகம், கலாசாரம், களவியல், கற்பியல், பழக்க வழக்கங்கள், தலைமுறைத் தத்துவங்கள், கரணத்தோடு கூடிய சடங்கு முறைகள் ஆகியன பரந்து செறிந்து கிடக்கின்றன. இவற்றில் மடலேறல் பற்றி ஆய்வதுதான் இக் கட்டுரையின் நோக்காகும்.

மடலேறல்
தான் காதலித்த தலைவியை அடைய முடியாத நிலையில் உள்ள தலைவன் ஒருவன் இரு பக்கங்களிலும் கருக்குள்ள காய்ந்த பனை மட்டையால் குதிரை ஒன்றை அமைத்து, அதை அலங்கரித்து, சிறு மணிகள் பூட்டி, மயிற் பீலி சூட்டி, பூமாலை தொடுத்து, தன் காதலியின் படம் வரைந்து குதிரையின் கழுத்தில் தொங்க விட்டு, தலைவன் தன் கழுத்தில் எருக்கலம் பூமாலை அணிந்து கொண்டு குதிரையில் ஏறி அமர, பக்கத்திலுள்ள சிறுவர்கள் அக் குதிரையை இழுத்துக் கொண்டு தெரு வழியே செல்வார்கள். தெருவிலுள்ளோர் இக் காட்சியைப் பார்த்துச் சிலர் மகிழ்வதும், வேறு பலர் பார்த்து மனம் குலைவதும் நிகழும். குதிரையை இழுத்துச் செல்லும் பொழுது பனங்கருக்குத் தலைவனை வெட்டி உதிரம் பெருக்கெடுப்பதும் நிகழும். தலைவன் காமவெறியுடன் இருப்பதினால் இதனை அவன் பொருட்படுத்த மாட்டான். இவற்றைக் கவனித்த ஆன்றோர் இரு பக்கத் தமருடன் கதைத்து இருவருக்கும் திருமணம் நடாத்தி வைப்பதும் நிகழும். இனி, சங்க இலக்கியங்கள் மடலேறல் பற்றிப் பேசும் பாங்கினையும் காண்போம்.

Continue Reading →

ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு: யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள்: ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.

1. ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.-

யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.

ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

பலர் அமைச்சர்களாக பதவிக்கு வருமுன் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள். பின் பதவிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை பொருட்படுத்தாது விட்டுவிடுவார்கள். பதவியில் இருக்கும் பல தமிழ் அரசியல் அதிகாரிகளும் பல தமிழ் கல்வித்துறைகளில் உள்ள அதிகாரிகளும் இவையாவற்றிலும் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை.

இன்று யாழ்ப்பாண வட்டாரத்து சைவ கோவில்கள் நீதிமன்றத்தில் பல வழக்குகள் சம்பந்தமாக பதிவாகியுள்ளது. இவையாவும் சீக்கிரத்தில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். எல்லா சைவ கோவில்களும் தங்கள் பழைய அனுதின நிலைக்கு திரும்பி தமது முக்கிய இடத்தை சிவத்திற்கு கொடுக்க வேண்டும். நீங்கள் யாவரும் யாழ்ப்பாணத்து அரசர் ஆரிய சக்கரவர்த்திகளின் காலங்களில் எவ்வண்ணம் இயங்கி வந்தீர்களோ அவ்வண்ணம் சிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே என் ராஜ உத்தரவு!

நம் தமிழ் வரலாற்று வளத்தைக் குறித்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். யாழ்ப்பாணத்திற்கூட அனேகர் தங்கள் சொந்த வரலாற்றினை அறியாது உள்ளனர். கல்வி சாலைகளிலும் 1948ம் ஆண்டிற்கு பின்னர் நிகழ்ந்தவற்றையே கற்றுக்கொடுக்கின்றனர். அவற்றிற்கு முன் நிகழ்ந்த தமிழ் வரலாற்றுக்களை அவர்கள் கற்றுக்கொடுக்க அலட்சியமாக உள்ளனர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 164: கலாநிதி க. கைலாசபதியின் பிறந்தநாள் இன்று! நினைவு கூர்வோம்!

கலாநிதி க. கைலாசபதியின் பிறந்தநாள் இன்று! நினைவு கூர்வோம்!கலாநிதி கைலாசபதியின் நூல்களை வாசித்திருக்கின்றேன். ஆனால் அவரை ஒருமுறைதான் என் வாழ்நாளில் நேரில் சந்தித்திருக்கின்றேன். ‘மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க’த்தின் வருடாந்த வெளியீடான ‘நுட்பம்’ இதழுக்காக ஆக்கம் வேண்டி, யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை சந்தித்திருக்கின்றேன். இதழுக்குக் கட்டுரை தர ஒப்புக்கொண்ட அவர் குறிப்பிட்ட திகதியில் கட்டுரையைத் தரவும் செய்தார். அது மட்டுமின்றி ‘நுட்பம்’ மலர் கிடைத்ததும் அது பற்றிய சிறு விமர்சனக்குறிப்படங்கிய கடிதமொன்றினையும் அனுப்பி வைத்தார். அக்கடிதம் இன்னும் என்னிடமுள்ளது. நேரத்தை மதிக்கும், சொன்ன சொல் தவறாத அவரது பண்பு என்னைக்கவர்ந்ததொன்று.


கைலாசபதியவர்கள் தினகரனில் ஆசிரிய பீடத்தை அலங்கரித்த காலகட்டம் தினகரனின் இலக்கியச்சிறப்பு மிக்கதொரு காலம் என்று கூறலாம். ஈழத்துத்தமிழ் முற்போக்கிலக்கியத்துக்கு அதுவொரு பொற்காலம் என்றும் கூறலாம்.


அவரது எழுத்தில் எனக்குப் பிடித்த அம்சம்: தெளிவான நடையில், தர்க்கச்சிறப்பு மிகுந்திருப்பதுதான். கூறிய பொருள் பற்றிய அவரது தர்க்கம் எப்பொழுதும் என்னைக் கவர்ந்தது. வேறு சிலர் ஒரு பொருளைக்கூற வந்து, பலரின் மேற்கோள்களுடன் , வாசிப்பவரைக்குழப்புமொரு மொழி நடையில் எழுதுவார்கள். அவர்கள்தம் கட்டுரைகளை வாசிப்பவர்கள் பிரமித்துப்போவார்கள் அவர்கள் மேற்கோள்களைக்கண்டு, ஆனால் வாசித்து முடித்ததும் தங்களது தலைகளைச்சொறிந்துகொள்வார்கள் கூறும் பொருள் அறியாது. ஆனால் கைலாசிபதியின் எழுத்து இதற்கு நேர்மாறானது. தெளிவான நடையில், ஆழமான மொழியில், தர்க்கம் செய்யும் எழுத்து அவருடையது.


அவர் மார்க்சியக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டவர். அதனால் அழகியலை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்துகளை மக்களுக்குப் பயன்படாத எழுத்துகள் என்று கருதினார். அதனால் அவற்றை அவர் வன்மையாகச் சாடினார். அவர் இருந்திருந்தாலும் ஏனைய சிலர் மாறியதுபோல் தன் கொள்கையிலிருந்தும் அவர் மாறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

Continue Reading →