கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

Continue Reading →

மே18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் -அவுஸ்திரேலியா

வணக்கம் நண்பர்களே, இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன், சிட்னி, பேர்த் நகரங்களில் நடைபெறவுள்ள "மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய் து ”மெல்பேர்ன், சிட்னி, பேர்த் இன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் ​நிகழ்வுகள்”​ ​சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங் களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின் னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.வணக்கம் நண்பர்களே, இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன், சிட்னி, பேர்த் நகரங்களில் நடைபெறவுள்ள “மே18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்” பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய் து ”மெல்பேர்ன், சிட்னி, பேர்த் இன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் ​நிகழ்வுகள்”​ ​சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங் களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின் னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.

தயவுசெய்து அந்நாளின் முக்கியத்துவம் மற்றும் வலிகள் அறிந்து உங்களினால் முடிந்த ஆதரவினை நல்குவதோடு, மே மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை மெல்பேர்னில் மாலை 6.30 மணிக்கு, Hungarian Community Centre மண்டபத்திலும், சிட்னியில் மாலை 7 மணிக்கு, Wentworthville Redgum Hall மண்டபத்திலும், பேர்த் நகரில் மாலை 7.15 மணிக்கு, Mandogalup ஸ்ரீ பாலமுருகன் ஆலய மண்டபத்திலும் முழுக்குடும்பத்துடன் வந்து இந்நிகழ்வுகளில் பங்குகொண்டு, ஆயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளை மீட்டி, தொடரும் இலட்சிய  பயணத்தில் இணைந்து கொள்வோம்!! 2 009யில் எம் தமிழ்மக்கள் மீது இடம்பெற்ற அப்பேரவலத்தையும், போர்குற்றத்தையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துவோம். ! உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

Continue Reading →