ஐரோப்பியப்பயணத்தொடர் (2) : மனோவிருப்பத்தின் மூலாதாரம்

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் இரண்டாவது  அத்தியாயம் மனோவிருப்பத்தின் மூலாதாரம்’ என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


I

“இலக்கியமும், பட்டாம்பூச்சிகளும் மனிதன் அறிந்த இரண்டு இனிமையான உவர்ச்சிகள்” – விளாடிமிர் நபோகோவ் { Literature and butterflies are the two sweetest passions known to man.  – Vladimir Nabokov }

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்இலக்கியம் மட்டுமே மிகுந்த இணக்கத்துடன் வாழ்வின் துக்கங்களைப் புறந்தள்ள உதவுகிறது.. கனவுப்பிரதேசங்களில் சுதந்திரமாகச் சஞ்சாரம் செய்ய அனுமதிக்கிறது. தேச எல்லைகள் இலக்கியங்களில் கிடையாது. ஆங்கில கவிஞர்களோ, ரஷ்ய எழுத்தாளர்களோ, ஆப்பிரிக்க நூலாசிரியரோ அல்லது உலகின் எந்த பிரதேசத்தின் குடிமகன் ஆனாலும் இலக்கியம் நமக்கு அவர்களை பாஸ்போர்ட் விசா ஏதுமின்றி நமது கரங்களில் சேர்க்கிறது. அவர்களின் உணர்வுகள் நமக்கு புரிகிறது. ஒரு யூலிஸிஸ் – ஹோமரின் கதாநாயகன் ஆனாலும் சரி, உலகையே தன் வசப்படுத்திய ரோமானிய சீசர், ஆன்டனி போன்ற கதாநாயர்கள் ஆனாலும் சரி, உலகின் மிகச் சிறந்த அழகிகள் என வர்ணிக்கப்பட்ட கிளியோபாட்ரா, ஹெலன் போன்ற பெண்களையும் சரி இலக்கியம் அல்லவா நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதுவும் ஆங்கில இலக்கியப்படிப்பு உலக இலக்கியத்தை, இந்த அகிலத்தையே நம் நேத்ரங்கள் முன் பிரதிபலிக்க செய்யும் மாயக்கண்ணாடி என்பதை எந்த இடத்திலும் ஆணித்தரமாக அடித்துக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

. ஆங்கில இலக்கியம் விருப்பப்பாடம் படிக்க எடுத்ததே ஒரு எதிர்பாராத நிகழ்வு. நான் கல்லூரி படித்த காலங்களில் ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் பணக்காரக் குடும்பத்தை சார்ந்த பெண்களாக இருக்கும் அல்லது ஒரு பந்தாவுக்காக எடுத்து படிப்பதற்காக இருக்கும். அதுவும் நான் படித்த பெண்கள் கல்லூரி உயர் மட்ட குடும்பத்து பெண்கள் மட்டுமே அதிக அளவில் படிக்கும் இடம் ஆகும். ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருந்த நான், எந்த ஒரு இலக்கையும் தீர்மானிக்க முடியாத அந்த வயதில் வேதியியல் படிப்பு இளங்கலையில் படிக்க என் தகப்பனாரின் விருப்பம். இந்த படிப்புக்கு உடனே வேலை கிடைக்கும் என்பது அந்தக் கால ஐதீகம். இன்று உள்ளது போல் அன்று கணினி அறிவியல் மற்றும் ஐடி படிப்புகள் அப்போது கல்லூரிகளில் இல்லாததால் அறிவியல் பாடங்களுக்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆர்ட்ஸ் வகுப்புகளான ஆங்கில, தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்றவை வேலைவாய்ப்பு கொடுக்காத கல்விப்பிரிவுகள் என்பதும் அன்றைய காலகட்ட சூழ்நிலை. இன்று நிலைமை தலைகீழ்.

வேதியியலில் எவ்வித பிடிப்பும் இல்லாத நான் வேண்டா வெறுப்பாக அந்த வகுப்பில் அமர்ந்து மேற்கூரையையும்,, கூட அமர்ந்து இருக்கும் மாணவிகளையும்  ‘கமெரா’க் கண்கள் சுழல்வது போல் சுற்றி முற்றி பார்த்துக் கொள்வது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செயல். மாணவிகளில் பலர் நல்ல ‘பவர்’ பொருந்திய கண் கண்ணாடிகளுடன் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். இதில் ஈடுபாடு இருப்பதாக என்னால் நடிக்கக் கூட இயலவில்லை. அந்த ஒரு மாதக் காலப் படிப்பில், பகுதி இரண்டு பொது ஆங்கில வகுப்புக்கு ஆங்கில இலக்கிய மாணவிகள் எங்களுடன் சேர்ந்து படிக்க வருவார்கள். அதில் ஒருத்தி எனக்குப் பள்ளித்தோழி. அவள் அப்பா அவள் ஆங்கில இலக்கியம் படித்து ஒரு ‘டிகிரி’ வாங்கினால் போதும் என்ற நோக்கத்தில் அவளை அந்தப் பிரிவில் சேர்த்திருந்தார்.

Continue Reading →

குட்டிக்கதை: முட்டாள்?

முல்லை அமுதன்அவன் இறங்கி நடந்தான்.

இரண்டுவாரங்களுக்கு முன்பே  அனுமதி கேட்டிருந்தான்.

பதினெட்டாம் திகதி நிகழ்வொன்றிருக்கிறது.. போகவேணும்..

முகத்தைப் பார்க்காமலேயே முதலாளியின் மனதைப் படம் பிடித்தான்.

லீவு?

பதில் இல்லை..

தராவிட்டால் வேலை அம்போதான்.. பரவாயில்லை.. நினைத்தான்.

நேற்றிரவு வேலை முடிய சொல்லிவந்தான்.

‘நாளை வரமாட்டன்…முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு போறன்’

அதே மௌனம்.

அவரும் அகதியாய் வந்தவர்தான்.

Continue Reading →

சிறுகதை: ஒரு விபத்து!

சிறுகதை வாசிப்புமுன்பெல்லாம்  நகரக்காவலர், அவர்களின் உபபிரிவான பார்க்கிங் ஒபிசர் … மட்டுமில்லை, நகரசபையும்  கூட தன்பங்கிற்கு டிக்கற் வழங்குவதற்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருதிருந்தது. ‘பொது மக்களின் வாகன நிறுத்ததிலும் நிறுத்தக் கூடாது .     பட்ட காலே படும் போல , அதற்கும் டிக்கெட் கிடைத்துக் கொண்டிருக்கும்.  

சில‌ “டாக்ஸி” கம்பனிகள் ஏற்கனவே, சிறிது பாரம் கூடிய கணனியைப் பொறுத்தி, அவசர ,அவசிய விபரங்களை வழங்குவதற்கு மட்டும் ரேடியோவை பயன்படுத்திக் கொண்டிருந்தன. ‘ஜி.பி.எஸ் கருவி’ விற்பனைக்கு வந்த பிறகு,வீதிகள் விபரங்கள் அடங்கிய பெரிய வரை  புத்தகத்தைக் வைத்திருக்கிறதும் ஓட்டிகளிடம் குறைந்து விட்டன. சாந்தன், இன்னமும் …புத்தகமும் வைத்திருக்கிறவர்களில் ஒருத்தன்.

நகரசபை, வர்த்தக மையங்களில் இரண்டு அல்லது மூன்று  “டாக்ஸி”கள் நிறுத்தும் தரிப்புகளையே பெரும்பாலும் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.அவற்றில் கொண்டு போய் நிறுத்த எல்லா “டாக்ஸி”களும் போட்டி போட்டால்.. எப்படி.?அதற்கு மேலே ..நிறுத்தினால்,வீதிச்சட்டத்தை மீறிய குற்றம். “டாக்ஸி”க் கம்பனிகள், சட்டை செய்யாமல் .  சேவையை செய்வதற்கு  தமக்கென பிறிம்பான சட்டங்களை, விதிமுறைகளை தயாரித்து வைத்திருந்தன.அவை நகரம் ஏற்படுத்திய சட்ட முறைகளோடு அவ்வளவாக ஒத்து போகவில்லை.வீதிச்சட்டத்தை மீறினால் பொலிஸ் டிக்கற்றை தருவான்.அவர்களுடைய தயாரிப்புபே மீறல்கள்.  நீயாச்சு, நகரகாவ‌லராயிற்று..”என விட்டேந்தியாகவே விட்டிருந்தார்கள்.

பார்கிங் டிக்கற்றுக்கள் வைப்பதில் கண்கொத்திப் பாம்பாக நடக்கிற பொலிஸ்,பார்சல்(பொதிகள்) பெறுவதற்கு நிறுத்தினால் கூட டிக்கற் வைக்கிறவர்களாக இழிந்து போய் இருந்தார்கள். ஓட்டிகள் வழக்கை சட்டமன்றத்திற்கு கொண்டு போகலாம். போவார்கள்.ஆனால்,அடிப்படையில் பொலிஸும், நீதிமன்றமும் ஒரே  கூட்டம் தான்.நகரத்தை காப்பாற்றுவதாகக் கூறி பொலிஸ் ,பொதுமக்களைச் சுடுகிறது.அதற்கு ஏதோதோ காரணங்களை எல்லாம் அடுக்கிறார்கள்.. எந்த பொலிஸ்காரர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்?. அதே கதை தான். (சட்டமன்றுக்கு) போவதால் க‌ட்டவேண்டிய தொகை சிறிதளவு குறையும்.அவ்வளவு தான்

Continue Reading →

கவிதை: பேரண்டப் பெருவெளி.

- வேதா. இலங்காதிலகம். டென்மார்க் -

நட்சத்திரங்கள்,  கோள்கள்,  மனிதனியக்கும்  கருவிகள்
தட்டாமலையாகச்  சுற்றும்  பேரண்டப்  பெருவெளி.
வெட்ட வெளி,  ஆகாயம்  விதானமென்றும்
வட்டம் சுற்றும் காற்று  மண்டலமுமிணைந்தது.

அறிவியலிற்கு   எட்டாத  மன  எல்லைகள்
முறிவற்று  விரிக்கும்  பால் வெளி பூமியும்
தெறிக்கும்  ஒளியீயும் சூரியனும்  தவிர
பிறிதொரு  எல்லையுண்டோ  பேரண்டப்  பெருவெளிக்கு!

Continue Reading →