நிகழ்வுகள்: கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும், நிதிக்கொடுப்பனவு நிகழ்வும்!

நிகழ்வுகள்: கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும், நிதிக்கொடுப்பனவு நிகழ்வும்!

அன்புடையீர் வணக்கம். அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் உதவிபெறும் கிழக்கு மாகாணத்தில் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் அண்மையில் வித்தியாலய அதிபர் திரு. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இங்கு பயின்று நிதியத்தின் உதவி பெற்ற செல்வி க. ஹர்சினி, இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தினார். இம்மாணவி தற்போது தனது பட்டப்படிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்துள்ளார். இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராஜா, மற்றும் சமூகப்பணியாளர் செங்கதிர் கோபாலகிருஷ்ணன், வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம், சீர்மிய ஆசிரியை திருமதி சுபாஷினி கிருபாகரன் ஆகியோருடன் முருகபூபதியும் பங்குபற்றினர். உதவி பெறும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழ் நூல்களில் ‘பரத்தமை’!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

தம் உடம்பை ஆடவர்க்கு விற்கும் பெண்களைப் பரத்தை, விபச்சாரி, விலைமகள், பொதுமகளிர், வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், வேசி, தாசி, கற்பற்றார் எனப் பல பதங்களால் அழைப்பர். உலகில் மனிதப் பிறவியே ஓர் உயர்ந்த நுணுக்கமான தத்துவப் படைப்பாகும். ஆணைப் பெண்ணுக்காகவும், பெண்ணை ஆணுக்காகவும் படைக்கப்பட்டமை ஓர் அரிய உண்மையாகும். இனிச் சங்க இலக்கியங்களிற் பரத்தமை பற்றிப் பேசப்படும் பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
இடைச்சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தைத் தொல்காப்பியனார்  (கி.மு. 711) எனும் புலவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பரத்தையிற் பிரிவு தோன்றிவிட்டது.
தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிச் சென்று விட்டான். சென்ற காலை, தலைவி பூப்பெய்திய செய்தி கேட்டுத் தலைவியை நாடிச் சென்று, முதல் மூன்று நாளும் அவள் சொற்கேட்டு, ஒழுகி நின்று, பிற்பட்ட பன்னிரண்டு நாளும் அவளைப் பிரியாது கூடி நிற்பான். பரத்தையிற் பிரிவைத் தணிக்க இவ்வரையறை வேண்டற்பாலதாகும். அக்கால மக்கள் குழந்தைப் பேற்றிற்குக் கொடுத்துள்ள சிறப்பும், சீரும், முக்கியத்துவமும் தெளிவாகின்றது. இதைத் தொல்காப்பியச் சூத்திரம் இவ்வண்ணம் கூறுகின்றது.

‘பூப்பின் புறப்பாடு ஈராறு  நாளும்
நீத்தகன்று உறையார்   என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான.’   –    (பொருள்.  185)

தொல்காப்பியர் காலத்தில் பரத்தையர் மாட்டு வாயில்களை அனுப்புதல், நான்கு இனத்தார்க்கும் உரித்து என்பதைக் கீழ் வரும் சூத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இங்கு நால்வர் என்பது (1) அந்தணர் (2) அரசர் (3) வணிகர் (4) வேளாளர் எனும் நால்வகுப்பினரைக் குறிக்கின்றது.

Continue Reading →

முல்லைஅமுதன் கவிதைகள் மூன்று!

1.

முல்லை அமுதன்

வெய்யில்
வரும் போது புடவைகளை
காயப்போடுங்கள்.
‘ம்’
பிள்ளைகளுக்கு
உணவை ஊட்டிவிட்டு,
பாடசாலை வாகனத்தில்
அனுபிவிடுங்கள்.
‘ம்’
மின்சாரக் கட்டணம் கட்டவேண்டும்.
‘ம்’
அம்மா வரப் போறா
வீட்டைத்துப்புரவு பண்ணி வையுங்கள்.
‘ம்’
அப்படியே மாடியில
காயவிட்ட ஊறுகாயை எடுத்து வைச்சு
,பிறகு
சாப்பிடுங்கள்.
நான் வர தாமதமாகும்..
‘ம்’
செருப்பை
மாட்டியபடி நகர்ந்தாள்
மனைவி.
நான் இரவுப் பூக்களின் மீதான
பனித்துளியை
இரசித்தபடி இருந்தேன்.
என் கனவை
மிதித்தபடி
வெளியேறினாள்.

Continue Reading →