வாசிப்பும், யோசிப்பும் 256: அண்மைய நல்லூர் சூட்டுச் சம்பவங்கள் பற்றி….

Surgent Sarath Hemachandraநீதிபதி இளஞ்செழியன்யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் யாழ் நீதிபதி இளஞ்செழியனைக் காப்பாற்றத் தன் உயிரைக்கொடுத்ததாக, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் சரத் ஹேமச்சந்திரா பற்றிச் செய்திகள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற முறையினைப் பார்க்கும்போது இச்சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த சம்பவங்கள் எதிர்பாராமல் விரிவடைந்ததன் அடிப்படையில் நிகழ்ந்தது போல்தான் தெரிகிறது. இச்சம்பவத்தில் உடனடியாக நீதிபதி இளஞ்செழியனை நோக்கித்தான் துப்பாக்கி பாவிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சகலரும் எண்ணும் நிலை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புங்குடுதீவி மாணவி வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதுதான். ஏன் இச்சம்பவம் நீதிபதியை நோக்கி நிகழ்த்தப்படவில்லை என்பதற்கான காரணங்களே அதிகமாகவுள்ளன.

ஊடகவியலாளர் டி.பி,எஸ்.ஜெயராஜின் பத்திரிகைக் குறிப்பு இச்சம்பவத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:  “Seeing the group of arguing persons blocking the road, Sgt.Hemachandra got off the motor cycle and went towards the group asking them to clear the way for the Judge’s vehicle to pass. A heated exchange of words occurred between Sgt.Hemachandra and the drunken Jeyanthan. At one point Sgt.Hemachandra laid his hand on the pistol in his holster in a bid to scare Jeyanthan but did not pull it out. An enraged jeyanthan engaged in a scuffle with the Policeman who then pulled out the gun. But Jeyanthan suddenly gripped the pistol and tried to seize it. The High court judge Illanchelliyan saw what was happening and got out of the vehicle shouting at Jeyanthan “Vidadaa Pistol ai, Vidadaa pistol ai” ( Let go of the pistol) in Tamil. The other policeman sgt Wimalasiri got out of the vehicle and pushed Judge Illancheliyan back into the vehicle.” [Manhunt Launched in North for Killer of Policeman in Jaffna Shooting Incident; Suspect Identified as 39 Year old Ex-Tiger Selvarasa Jeyanthan of Nallur. By DBSJeyarajhttp://dbsjeyaraj.com/dbsj/archives/54396#more-54396]

Continue Reading →

ஆய்வு: கனடா மண்ணில் தமிழிலக்கியம் தோற்றமும் தொடர்ச்சியும்

– கணையாழி சஞ்சிகை வெளியிட்ட கனடாச்சிறப்பிதழில் (ஜனவரி 2017 இதழ்)  வெளியான கட்டுரை இது. ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. கட்டுரையினைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி உதவிய  பேராசிரியர்  கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி. – பதிவுகள் –


முன்னீடு
- பேராசிரியர்  கலாநிதி நா. சுப்பிரமணியன் -தமிழிலக்கியங்களை வகைப்படுத்தும் நோக்கில் கடந்த ஏறத்தாழ முப்பதாண்டுகளில் வழக்கிற்கு வந்து, நிலைத்து விட்ட அடையாளக் குறிகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்வது ’புலம்பெயர் இலக்கியம்’. ஈழத்தின் விடுதலைப் போராட்டச் சூழலிலே அம்மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் புகலடைந்த தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ள இலக்கியச் செயற்பாடுகளை ஒரு தனிவகையாக இனங்காட்டும் நோக்கில்  உருவாகி வழக்கில் நிலைத்துவிட்ட தொடர், இது. மேற்சுட்டியவாறு பல்வேறு நாடுகளிலும் புகலடைந்த ஈழத்தமிழர்களிற் பெரும்பாலோர் அவ்வந்நாடுகளின் குடிமக்களாகிவிட்டனர். அவர்களின் பிள்ளைகளும் அவ்வந்நாடுகளின் குடிமக்களாகவே வாழத்தலைப்பட்டுவிட்டனர். அவர்களில் ஒருசாரார் தங்கள் தாய்மொழியில் இலக்கியங்கள் படைப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இவ்வாறான வரலாற்றுச்  சூழலிலே   அவ்வந் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழ் மொழிசார் இலக்கிய முயற்சிகளை ’புலமபெயர்இலக்கியம்’ என அடையாளஞ்சுட்டி இனக்காட்டுவதற்கான அவசியம்  குறைந்துவிட்டது. மாறாக,அவ்வாக்கங்களை அவ்வந்நாடுகள் மற்றும் புவிச்சூழல்களை மையப்படுத்தி, ’அவுஸ்திரேலியத் தமிழிலக்கியம்’, ‘ஐரோப்பியத் தமிழிலக்கியம்’, ’கனடியத் தமிழிலக்கியம்’ முதலான பெயர்களில் தனித்தனியாக அடையாளப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டம் உருவாகிவிட்டது. இவ்வாறான வரலற்றுச் செல்நெறியைக் கோடிட்டுக் காட்டும் முயற்சியாக அமையும் கட்டுரை ,இது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் பெருந்தொகையினராக வாழும் நாடுகளில் ஒன்றான  கனடாவிலே தமிழிலக்கிய முயற்சிகள் தோன்றிய சூழல் மற்றும் அவை தொடர்ந்த முறைமைகள் ஆகியன தொடர்பான முக்கிய குறிப்புகள் இக்கட்டுரையில் முன்வைக்கப்படவுள்ளன.

1.கனடா  மண்ணிலே தமிழிலக்கிய முயற்சிகளின்  தோற்றம்
கனடா மண்ணிலே  தமிழர் குடியேற்றமானதுஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது. ஏறத்தாழ 1960-70களிலே தமிழகம், ஈழம் மற்றும்சில நாடுகளிலிருந்து தமிழர்கள் கல்வி நோக்கிலும் பணிகளை மையப்படுத்தியும் இம்மண்ணுக்கு வந்துள்ளனர். அவ்வாறு வந்தோரில் ஒருசாரார் இங்கு நிரந்தரமாக வாழவும் தொடங்கிவிட்டனர். அக்காலகட்டங்களில் இங்கு தமிழிலக்கியம்சார்ந்த முயற்சிகள் எவையாவது நடைபெற்றள்ளனவா என்பது தொடர்பான செய்திகள் இதுவரையான தகவல்கள் தேட்டங்களினூடாக நமக்குக் கிடைக்கவில்லை. அண்மைக்காலம்வரை நமக்குக்கிடைத்துள்ள தகவல்களின்படி 1980களிலிருந்தே தமிழிலக்கியம் தொடர்பான முயற்சிகள் இங்கு முளைவிடத் தொடங்கியிருக்க வேண்டும் எனக் கருத வேண்டியள்ளது.

Continue Reading →

‘பதிவுகளி’ல் அன்று: தமிழ்த் தேசியம் குறித்து மார்க்சீயர் தியாகுவுடன் யமுனா ராஜேந்திரன் மற்றும் விசுவநாதன் உரையாடல்

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


– ‘பதிவுகள்’ மே 2003 இதழ் 41 –

தோழர் தியாகுவுடன் ஓர் உரையாடல்யமுனா :ரொம்பவும் நேரடியாகவும் ப்ருட்டலாகவுமே தொடங்கலாம் என்று நினைக்கிறேன். .இன்றைய இந்திய சூழலில் தமிழ்த்தேசியத்தின் தேவை  என்னவென்று கருதுகிறீர்கள்?

தியாகு : தமிழ்த்தேசியம் என்கிறபோது அது ஒன்றுதான் உண்மையான நேர்மறையான தேசியம்.. ஏதோ பல்வேறு தேசியங்கள் இருக்கிறமாதிரி அதில் தமிழ் தேசியம் ஒன்றாக இருந்தது அதன் இடம் என்ன அல்லது இந்திய தேசியம் என்பது என்ன என்று பேசுவதற்கான இடம் இதுவல்ல.  ஒரு காலத்தில் இந்திய தேசியத்திற்கான தேவை இருந்தது. அது எதிர் மறை தேசியமாக இருந்தது. தமிழ்த் தேசியம் என்பதுதான் -மொழி- மொழி பேசுகிற இனம்- அதனுடைய நிலப்பரப்பு- அதனுடைய பண்பாடு- அதனுடைய உளவியல் உருவாக்கம்- அதனுடைய பொருளியல் பிணைப்பு என்று எல்லா அப்படைகளிலும் தேசம் என்பதற்குரிய வரலாற்று வழிப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் உண்மையான நேர்வகையான தேசம்.. தமிழ்த் தேசம் என்கிறபோது- அப்படி இருப்பது அங்கீகரிக்கப்படாமல் மறுக்கப்பட்டும் பிறிதொரு அரசமைப்புக்குடபட்டும்  இருக்கிறபோது இயல்பாகவே அது ஒரு ஒடுக்குண்ட தேசத்தின் தேசியமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசியத்தின் தேசியம் என்ற வகையில் தமிழ்த் தேசியம் இன்று பொருத்தப்பாடுடையது. அந்த வகையில்தான் எல்லா அடிப்படையகளிலும் இங்கு மாற்றத்திற்கான அரசியல் பேசுகிறோம்.

Continue Reading →

‘பதிவுகளி’ல் அன்று: தமிழ் செவ்வியல் மரபின் மறுவாசிப்பிற்கான அறிமுகம்

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


‘பதிவுகள்’ ஆகஸ்ட் 2002 இதழ் 32

மறுவரையறை  எதற்காக?

வாசிப்போமா?செவ்வியல் [classic]  என்பது என்ன  , செவ்விலக்கியங்கள் எவை என்ற கேள்வி  எல்லாக்  கலாச்சார சூழலிலும் எப்போதுமே எழுந்தபடியே இருப்பதாகும்.காரணம் ஒரு சமூகம் தன் அடிப்படைகள் என்ன ,அடையவேண்டிய இலக்கு என்ன என்பவற்றை தீர்மானித்துக் கொள்வதற்காகவே இவ்வினாக்களை  எழுப்பிக் கொள்கிறது.

ஓவ்வொரு புதிய கலாச்சார இயக்கம் உருவாகும்போதும் அது செவ்வியல் செவ்விலக்கியம் முதலியவற்றை மறு வரையறை செய்ய முயல்வதைக் காணலாம். தமிழ் சூழலில் கடந்த கால உதாரணங்களை எடுத்து பார்த்தால் இது தெளிவாகத் தெரியும் . நூறு வருடம் முன்பு பக்திக் காலகட்டத்தில் புராணங்கள் ,சிற்றிலக்கியங்கள் ,துதிப்பாடல்கள் முதலியவை முறையே முக்கியமான செவ்விலக்கியங்களாக கருதப்பட்டன.அடுத்த மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் பாரதி ‘ யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப்போல்….’ என்று ஒரு தரவரிசையை உருவாக்கி செவ்விலக்கியம் குறித்த பிரக்ஞையை மாற்றியமைத்தார். அதன் பிறகு உருவான திராவிட இயக்கம் இம்மூன்று படைப்புகளில் கம்பராமாயணத்தை வெளியே தள்ள கடுமையாக முயன்றது . வள்ளுவத்தை முதலில் கொண்டு வந்தது. அடுத்த இடத்தில் சங்க இலக்கியத்தைக் நிறுத்தியது .

ஒவ்வொரு சமூக ,அரசியல் மாற்றங்களையும் இவ்வாறு இலக்கிய அடிப்படைகளில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்தே நாம் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று தோன்றுகிறது . கம்ப ராமாயணத்தை வைத்து ஒரு பெரும் கலாச்சாரப் போரே தமிழில் நடந்துள்ளது. திராவிட இயக்கம் அதை இரண்டு அடிப்படைகளில் மறுத்தது . ஒன்று: அது மத இலக்கியம் . இரண்டு : அது வடமொழியில் இருந்து வந்தது , ஆகவே ஆரியக் கலாச்சாரத்தில் வேர்கொண்டது . கம்பன் தமிழ் மனத்தில்  உருவாக்கிய விழுமியங்களையும் ,கம்பனின் மொழிக்கொடையையும் முக்கியமாகக் கருதிய ஒருசாரார்  காரைக்குடி , சா. கணேசன் அவர்களின் தலைமையில் கம்பன் கழகம் அமைத்து கம்பனின் முக்கியத்துவத்தை வலியுறுத்த தலைப்பட்டனர்.திராவிட இயக்கம் கூறிய கருத்தின்படி பார்த்தால் கம்பனுக்காக பரிந்து பேசியிருக்க வேண்டியவர்கள் வைணவர்களும் பிராமணர்களும்தான் .மாறாக சைவர்களும் ,பிராமணரல்லாத தமிழறிஞர்களும்தான் கம்பனுக்காக பேசினார்கள் . முக்கியமான கம்பராமாயண அறிஞர்கள் மு. மு. இஸ்மாயில் , அ. ச. ஞானசம்பந்தன் , கருத்திருமன் ஆகியோர் உதாரணம். இது செவ்விலக்கியத்தின் அடிப்படைகள் குறித்து யோசிக்கும் போது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் .

Continue Reading →