ஆய்வு: நல்வழி உணர்த்தும் அறநெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான நல்வழியில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33)

அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10)என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 255: கனடாத் தமிழ் இலக்கியம் – ‘தேடக’த்தின் ‘தேடல்’ சஞ்சிகை!

தேடலில் வ.ந.கிரிதரன் சிறுகதைதேடல் சஞ்சிகைதேடல் (கனடா) சஞ்சிகை ‘தேடகம்’ என்று அறியப்பட்ட கனடாத் தமிழர் வகைதுறை வள நிலையத்தாரால் வெளியிடப்பட்ட சஞ்சிகை. கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் ‘தேடல்’ மிகவும் முக்கியமான சஞ்சிகைகளிலொன்று. பதினாறு இதழ்கள் வெளியாகியுள்ளன. இதழ் 14 என்று இரு இதழ்கள் (1994 மற்றும் 1996) வெளியாகியுள்ளன. வடிவமைப்புச் செய்தவரின் தவறாக இருக்க வேண்டும். வெளிவந்த இதழ்களில் முதலிரண்டையும் தவிர ஏனையவற்றை ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் ஆவணப்படுத்தி வைத்துள்ளார்கள்.

‘தேடல்’ சஞ்சிகையில் கவிதைகள், மனித உரிமை சார்ந்த கட்டுரைகள் , அறிவியற் கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் எனப் பல்வகையான காத்திரமான ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. செழியன், விதுரன், பா.அ.ஜயகரன், வ.ஐ.ச.ஜெயபாலன், அமுதன், பாமதி, சகாப்தன், ஆனந்தபிரசாத், சிவம், கிறிசாந் பாக்கியதத்தா என்று பலர் கவிதைகள் எழுதியிருக்கின்றார்கள். மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவும் பிரசுரமாகியுள்ளன. சபா வசந்தன், விதுரன், சகாப்தன், வ.ந.கிரிதரன், ஜோர்ஜ்.இ.குருஷேவ் , கோவை றைதன் (ரதன் ஆக இருக்க வேண்டும். றைதன் என்று பிரசுரமாகியுள்ளது), அருள்தாஸ் என்று பலர் சிறுகதைகளை எழுதியுள்ளார்கள். கட்டுரைகளை செழியன் (இவரது ‘ஒரு போராளியின் நாட்குறிப்பு’ தொடராக வெளிவந்துகொண்டிருந்தது), பேராசிரியர் சி.சிவசேகரம், வ.ஐ.ச.ஜெயபாலன், பா.அ.ஜயகரன், வ.ந.கிரிதரன், நேசன், ரதன் , ஆரூரான், எஸ்.வி.ராஜதுரை.. .. என்று பலர் எழுதியிருக்கின்றார்கள். இவை தேடலில் எழுதியவர்களின் முழுமையான பட்டியல் அல்ல. ஓருதாரணத்துக்காகக் குறிப்பிட்டுள்ளேன்.

Continue Reading →

‘பதிவுகளி’ல் அன்று: மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


அயென்டேலத்தின் அமெரிக்க கண்டத்தின் மக்கள் கூட்டம் பல தலைமுறைகளாக காலணியாதிக்கத்தின் அடக்கு முறையின் கீழ் அனுபவித்த அவலங்களைக் கண்டு பொங்கியெழுந்த புரட்சியாளர்கள் பலர். இவர்களுள் எனர்ஸ்டோ சே குவேரா போன்று தமது மக்களுடைய அவலநிலையைக் கண்டு மனம் பொறுக்காமல் அவர்களுடைய நன்மைக்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த காரணத்தால் கொலை செய்யப்பட்ட தலைவர்களில் ஒருவர் சிலி நாட்டின் ஜனாதிபதி சல்வடோர் அயென்டே, தமது மக்களின் நன்மைக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதனது ஆதரவாளர்களான சுதேசியப் பெருமுதலாளிகளையும் பகைத்துக் கொண்டதால், 1973 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி சிலியின் இராணுவ ஜெனரல்களால் கொலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதிக்கான தேர்தலில் 1970 இல் போட்டியிட்டபோது அயென்டே தான் ஒரு மார்க்ஸிஸ்ட் எனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது, உலகிலேயே வாக்குச்சீட்டின் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த முதலாவது மார்க்ஸிய அரசுத் தலைவராக அயென்டே புதிய வரலாற்றை உருவாக்கினார்.

லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் இருந்த நாடுகளுக்கும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும் அயென்டேயின் வெற்றி ஏகாதிபத்தியத்துக்கெதிரான ஏழை மக்களின் வெற்றியாகக் கொண்டாடப்பட்டு பெரும் ஆதர்சமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரம் எதுவுமற்;ற சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறிய முன்னேற்றம்கூட, அவர்கள் வாழும் சமூக அமைப்பில் ஏற்படக்கூடிய தீவிரமான மாற்றத்தின் மூலமே சாத்தியமாகுமெனில், அத்தகைய ஒரு தீவிர அமைப்பு மாற்றத்தை அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில், சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்ட வழிகளில் ஏற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானது என்பதை அயென்டேயின் வெற்றி உலகத்திற்கு உணர்த்தியது. ஒரு மாக்ஸிஸ்ட்டை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டத ன் மூலம் சிலி, உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

1908 ல் உயர் குடும்பத்தில் பிறந்த அயென்டே, தனது இருபத்தைந்தாவது வயதில் ஏனைய அரசியல் தோழர்களுடன் சேர்ந்து சிலியின் சோசலிசக் கட்சியை நிறுவினார். பாராளுமன்றம் முதலான ஜனநாயக அமைப்புகளின் மூலமாக, சோசலிசச அடிப்படையில் அமைந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அயென்டே உறுதியாக நம்பினார். வன்முறையை அடிப்படையாகக் கொண்ட புரட்சியின் மூலம் சோசலிசத்தை உருவாக்குவது, நூற்றைம்பது வருடங்களுக்கு மேலான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட சிலிக்கு பொருத்தமானதல்ல என அவர் கருதினார். சோசலிசத்திற்கான சிலியின் பாதையை நாற்பது வருடங்களுக்கு மேலாக அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். சிலியின் உழைக்கும் ஏழை மக்களுடைய நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அயென்டே, தனது வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், சொந்த நலன்களுக்காக, ஏழைகளின் வாழ்க்கையைப் பேரம்பேசி விட்டுக் கொடுக்காத தலைவராக இறுதிவரை வாழ்ந்தார்.

Continue Reading →

‘பதிவுகளி’ல் அன்று: ஓர் அங்குலத்தில் தவறியது: மேரி ஆன் மோகன்ராஜுடனொரு நேர்காணல்!

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


மேரி ஆன் மோகன்ராஜ்எழுத்தாளர் மேரி ஆன் மோகன்ராஜ்…2005ம் ஆண்டு கோடைக்கால முடிவில் நான் விமானத்தில் பயணம் செய்தபோது எனக்கு பக்கத்திலிருந்த இருக்கையில் ஒரு வெள்ளையர் வந்து உட்கார்ந்தார். அவருடைய உடம்பு அகலம் இருக்கையின் அகலத்துக்கு சரியாக இருந்தது. ஆசன பெல்ட்டை நுனி மட்டும் சிரமப்பட்டு இழுத்து பூட்டிக்கொண்டார். உடனேயே கைப்பிடியை யார் கைப்பற்றுவது என்ற போராட்டம் எங்களுக்குள் ஆரம்பமானது. தோற்றுவிடுவேன் என்று தோன்றியபோது நான் விட்டுக்கொடுத்தேன். சிறிது நேரம் சென்று பார்த்தபோது அவருடைய முகம் இளமையானதாகத் தோன்றியது. மெல்லப் பேச ஆரம்பித்தோம். நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று சொன்னதும் உங்களுக்கு மேரி ஆன் மோகன்ராஜை தெரியுமா என்றார். இல்லை என்றேன். கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றார். அதற்கும் குற்ற உணர்வு மேலிட இல்லை என்றேன். இன்று Erotica (காம இலக்கியம்) எழுதுபவர்களில் அவர் முன்னணியில் இருப்பதாகவும், பல புத்தகங்களை அவர் எழுதியிருப்பதாகவும் சொன்னார். மேரி ஆன் ஓர் இணையதளம் நடத்துகிறார்; தொடர்ந்து டயரி எழுதுகிறார்; பல புத்தகங்களுக்கு தொகுப்பாசிரியராக இருக்கிறார். அவர் கடைசியாக எழுதிய Bodies in Motion புத்தகம் இரண்டு மாதங்கள் முன்புதான் வெளியானது. இவ்வளவு விபரங்களை அவர் வாய் ஓயாமல் சொல்லி முடித்ததும் அவருடைய சுற்றளவு சற்று குறைந்துவிட்டதுபோல எனக்குப் பட்டது. வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக Bodies in Motion நாவலை வாங்கிப் படித்தேன். அவர் தொகுத்து வெளியிட்ட இரண்டு காம இலக்கியப் புத்தகங்களையும் வாசித்தேன். அவை தண்ணீருக்கு வெளியே வைத்துப் படிக்கக்கூடிய புத்தகங்கள். தண்ணீருக்கு உள்ளேயும் வைத்துப் படிக்கலாம். அப்படி பிளாஸ்டிக் போன்ற ஒரு தாளில் அவை அச்சடிக்கப்பட்டிருந்தன. பாண்டவர்களும், கௌரவர்களும் அடிக்கடி ஜலக்கிரீடை செய்யும்போது இப்படியான புத்தகங்களை படித்திருப்பார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

Continue Reading →

”பதிவுகளி’ல் அன்று: நூல் அறிமுகம் – ‘மால்கம் எக்ஸ் – என் வாழ்க்கை’

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


மால்கம் எக்ஸின் ‘என் வாழ்க்கை’“கூவர சுவாற்ஸ்” (ஊத்தைக் கறுப்பா) என்று அவன் பேசுகிறான். நான் கறுப்பா? பார் என்ரை நிறத்தை. பிரவுண். ஆபிரிக்கர்கள்தான் கறுப்பு என்கிறேன்;. சரியான பதிலாக திருப்தியடைகிறேன். வெள்ளைக்கார நண்பன் எனக்கான சான்றிதழொன்றைத் தந்து திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். “அவன் கறுப்புத்தான், ஆனால் மனசு வெள்ளை” என்கிறான். திருப்திப்படுகிறேன். இந்த எதிர்கொள்ளல் சரியானதா?. வெள்ளைமயப்படுத்தப்பட்ட சிந்தனையே இந்தப் பதிலில் ஊறியிருக்கிறது. அதாவது ஆணிய சிந்தனை பெண்ணிடம் ஊறியிருப்பதுபோல. இப்போ எனது பதில் இப்படியாய் வருகிறது. கூவர சுவாற்ஸ்! …ஆம் நான் கறுப்பன்தான். உனக்கு என்ன பிரச்சினை அதிலை?. வெள்ளை மனசு!… இல்லை என்ரை மனசும் கறுப்புத்தான்… அது வெளிப்படையானது. இதை இப்படித்தான் எதிர்கொண்டாக வேண்டும் எனப் படுகிறது எனக்கு.

அன்றாடம் ஏதோவொரு வடிவில் நான் கறுப்பன் என நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் “மல்க்கம் எக்ஸ்- என் வாழ்க்கை” என்ற நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 730 பக்கங்கள் கொண்ட இந்த நூல் எனது வாசிப்பை தீவிரப்படுத்திக் கொண்டே இருந்ததற்கு நிறவெறிமை அகலாத புகலிட வாழ்வில் எனது இருப்பு காரணமோ என எண்ணுகிறேன். சே, பனான், மார்க்கோஸ், லுமும்பா… என தத்துவவாதிகளை போராளிகளை தமிழுக்கு விலாவாரியாக அறிமுகமாக்கிக்கொண்டிருக்கும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது மல்கம் பற்றிய நூல். விடியல் பதிப்பகத்தின் வெளியீடுகளுடாக தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வெளிப்பட்டிருப்பவர்கள் பாலச்சந்திரன், கோவிந்தசாமி ஆகியோர். இந்த நூலும் கோவிந்தசாமியால் சரளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பை தடங்கலின்றி இழுத்துச் செல்கிறது.

நாம் காந்தியை தெரிந்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சுபாஸ் சந்திரபோஸினை தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. வெள்ளையர்களுடன் சமவுரிமைக்காக குடியுரிமைக்காக அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கினை அறிந்திருக்குமளவிற்கு வெள்ளைக் கருத்தியலின் எதிர்மறுப்பாளனாக கலகக்காரனாக வெளிக்கிளம்பிய மல்கம் எக்ஸ் இனை நாம் தெரிந்துவைத்திருக்கவில்லை. எப்போதுமே ஒரு தலைவன் ஒரு இயக்கம் என்ற பரிமாணத்துள் -அதன் பக்க பலங்களை புறந்தள்ளி- விளக்க முயலும் மனோபாவமும், தீவிர அரசியலின் போக்கை நிறுத்த மிதவாத அரசியலை முன்நிறுத்தியவர்களை அங்கீகரிக்க வைக்கும் முதலாளிய சூழ்ச்சியும் எமது புரிதல்களை மட்டுப்படுத்திவிடுகிறது.

Continue Reading →

‘பதிவுகளி’ல் அன்று: ஏ.ஜே.கனகரட்னா நினைவுப் பதிவுகள்

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


 ஏ.ஜே.கனகரட்னாஎழுத்தாளரும், கலை, இலக்கியத்திறனாய்வாளருமான ஏ.ஜே.கனகரட்னா மறைவையொட்டிப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான படைப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றன.

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி! – மேமன்கவி –

அண்மையில் மறைந்த ஏ.ஜே.கனகரட்னா
ஆளுமைமிக்க ஆகிருதி
ஒன்றின் மரணம் தரும்
மௌனம்-
அது அதன்
உடலின் நிரந்தர உறக்கம்
அதுவே விழிப்பாகி….
விரிந்த மேசையின் பரப்பில்
ஒடுங்கிய புத்தக அடுக்குகளில்
இணைய உலாவிகளின் முடக்கங்களில்
உரத்துப் பேசத் தொடங்கும் தருணமிது!
“எதற்குமே உரிமைக் கோராத
ஞானம்” பெற்ற
ஆகிருதியின் ஆக்கங்களுக்கே
அது சாத்தியம்.
அதன்-
திறன்களின் மீது
பாய்ச்சப்படும் வெளிச்சம் தரும்
புலர்வு
அருகே இருந்த மூளைகளில்….
பேசும் வார்த்த்தைகள் மௌனமாகிப் போக-
எழுதிய வார்த்தைகள் போல்
வாழ்ந்து போன வாழ்வு
அந்த புலரவின் பிரகாசத்தில்
உரத்து வாசிக்கப்படும்.
“ஏ.ஜே” எனும்
மறையாத ஆளுமைமிக்க
ஆகிருதியும்
அதுவான ஒன்றுதான்!

memonkavi@yahoo.com
பதிவுகள் டிசம்பர் 2006 இதழ் 84

Continue Reading →

விவாதம்: A DISPUTE IN MAALAN’S BLOG – R.P.Rajanayahem –

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


This is what Maalan has written in his blog:

R.P.Rajanayahemமாலன்– உவேசா மறைந்து இன்னும் அறுபது ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அவரைப் பற்றிய செய்திகள் ஆய்வாளர்களின் வசதிக்கு ஏற்பத் திரிக்கப்படுகின்றன. இத்தனைக்கும் உவேசாவே தனது வாழ்க்கைச் சரிதத்தின் பெரும்பகுதியை  எழுதியிருந்தும், அது பிரபல வார இதழான ஆனந்தவிகடனில் தொடராக வந்தும், இன்றும் அந்த நூலின் பிரதிகள் எளிதில் கிட்டும் போதும், இந்த நிலை. காலச்சுவடு இதழின் மார்ச் இதழில் பொ.வேல்சாமி எழுதுகிறார்:

“உ.வே.சாமிநாதய்யருக்கு அவர் குடும்பத்தார் இட்ட பெயர் வேங்கடராமன் என்பதாகும். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் உ.வே.சா மாணவராகச் சேர்ந்தபோது ‘வேங்கடராமன்’ என்னும் வைணவப் பெயரைச் சொல்லி அழைக்க அவர் மனம் இடம் தரவில்லை.ஆகவே ‘சாமிநாதன்’ எனப் பெயரை மாற்றினார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.”

ஆனால் உண்மை என்ன? ” நான் பிறந்த போது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது. சாமி மலை என்னும் ஸ்தலத்திலுள்ள முருகக்கடவுளுக்குச் சாமிநாதனென்பது திருநாமம். அது பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை சாமா என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று” என எழுதுகிறார் உவேசா. (என் சரித்திரம் – அத்தியாயம் 9)

உவேசா இவ்வளவு தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கும் போது காலச்சுவடு ஏன் வரலாற்றைத் திரிக்க முயல்கிறது?. “ஒரு சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எந்த வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர்”  என்பதை நிறுவ காலச்சுவடு ஆசைப்படுகிறது. அது வார்த்தைகளில் சொல்லாமல் மறைமுகமாக உணர்த்த முற்படும் செய்தி சூத்திரப் புலவரின் மனம், மாற்று மதம் சார்ந்த பெயரை ஏற்கத் தயங்கியது. ஆனால் பிராமணக் குடும்பம் பெருந்தன்மையுடன் சூத்திரப் புலவரின் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொண்டது என்பதாகும். ‘சூத்திரப் புலவர்’ எனக் காலச்சுவடு குறிப்பிடும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவரையும் தனது மாணவராக ஏற்றுக்  கொண்டிருந்தார். அந்த கத்தோலிக்கரின் பெயர் சவேரிநாத பிள்ளை.அவரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அன்பொழுக ‘அப்பா! சவேரிநாது’ என்றுதான் கூப்பிட்டு வந்தார். பெயர் மாற்றம் ஏதும் செய்யவில்லை.

Continue Reading →