வாசிப்பும், யோசிப்பும் 257: செழியனின் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..’ (வானத்தைப் பிளந்த கதை) மற்றும் மஹாஸ்வேதாதேவியின் ‘இலக்கம் 1084இன் அம்மா’

செழியனின் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..’ (வானத்தைப் பிளந்த கதை)

கவிஞர் செழியன்ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து...சிறந்த நாவல்கள் பலவற்றின் தொடக்க வசனங்கள் முக்கியமானவை. வாசகர்களைத் தட்டியெழுப்பி வாசிப்பிற்குள் மூழ்க வைப்பவை. மிகவும் புகழ் பெற்ற நாவல்களிலொன்றான ‘ஹெர்மன் மெல்வில்லின்’ ‘மோபி டிக்’ நாவலின் முதல் வசனம் ‘என்னை இஸ்மாயில் என்று அழையுங்கள்’ (Call me Ishmael)  என்று தொடங்கும். மறக்க முடியாத முதல் வசனத்தை உள்ளடக்கிய நாவல்களில் மோபி டிக்’கிற்கு முக்கியமானதோரிடமுண்டு.

இன்னுமொரு நாவலின் தொடக்கமும் வாசகர்களைத் தட்டெயெழுப்பி நாவலுக்குள் மூழ்க வைக்கும் தன்மை மிக்கது. அது காஃப்காவின் புகழ் பெற்ற நாவலான ‘உருமாற்றம்’ (The Metamorphosis) அதன் நாயகனான ‘கிரகர் சம்சா’வைப்பற்றி வர்ணிப்பதுடன் நாவல் தொடங்கும். அது வருமாறு:  “ஒரு காலைப்பொழுதில் கிரகர் சம்சா தொல்லைகள் நிறைந்த கனவுகளிலிருந்து விழித்தபோது அவன் தனது படுக்கையில் பூச்சி போன்ற பயங்கரமானதொரு உயிரினமாக மாறியிருப்பதைக் கண்டான்” (One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin)

சில நாவல்கள் அல்லது படைப்புகளின் முடிவுகளும் வாசகர்களைச் சுண்டியிழுப்பதாக, நெஞ்சில் நிலையாக உறைந்து விடுவதாக அமைந்து விடும். அண்மையில் கவிஞர் செழியனின் ‘வானத்தைப்  பிளந்த கதை (ஈழப்போராட்ட நாட்குறிப்புகள்) ‘ அத்தகையதொரு படைப்பு. இது கவிஞர் செழியனின் ஒரு குறிப்பிட்ட காலத்துச் சுயசரிதை. தாயகம் (கனடா)வில் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து’  என்று தொடராக வெளிவந்து ‘கனேடியன் நியூபுக் பப்பிளிகேசன்’ (ரொறொன்ரோ) பதிப்பகத்தால் அதே பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டது. பின்னர் ‘காலம்’ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ வெளியீடாக ‘வானத்தைப் பிளந்த கதை’ என்று மீண்டும் வெளியானது.  இந்நூல் பின்வருமாறு முடிகின்றது. நெஞ்சத்தைத்தொடும் முடிவு. புகலிடம் நாடிப் பிறந்த மண்ணை விட்டுப் பிரியும் மானுடர் அனைவரையும் சுண்டியிழுக்கும் முடிவு.

Continue Reading →

NEWS RELEASE: Entrepreneurs- Make your pitch and pivot to Canada!


NEWS RELEASE


Entrepreneurs: Make your pitch and pivot to Canada!

Pilot program for newcomers launching companies in Canada to be made permanent

July 28, 2017 – Toronto, ON – Canadians are welcoming to people and ideas from around the globe. Welcoming entrepreneurs who have the expertise to turn their ideas into successful companies is one way that Canada’s openness can help build a world-class innovation economy. The Start-up Visa Program, a pathway to permanent residence for cutting-edge entrepreneurs launching a start-up company in Canada, will become a regular feature of Canada’s immigration landscape in 2018.  As part of the five-year pilot, launched in 2013, innovative entrepreneurs can apply to become permanent residents after a Canadian venture capital fund or angel investor group has made a significant financial commitment in their business idea, or after a business incubator has accepted them into their program.

A recent evaluation of the Start-up Visa Program found that it is delivering on its goals; immigrant entrepreneurs are actively developing innovative companies in Canada that are beginning to show positive results for Canada’s economy and creating middle-class jobs across a range of industries. Making the program permanent supports the Government of Canada’s Innovation and Skills Plan, which seeks to attract investment and support the growth of a diverse range of companies, creating well-paying jobs for Canadians. In the months ahead, IRCC will work to finalize regulations for the permanent program in order to have a seamless transition when the pilot expires on March 31, 2018.

Continue Reading →

நூல் அறிமுகம்: தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்

நூல் அறிமுகம்: தழும்பு நாவல் பற்றிய கண்ணோட்டம்புரவலர் புத்தகப் பூங்காவின் 38 ஆவது வெளியீடாக மா. பாலசிங்கம் எழுதிய தழும்பு என்ற நாவல் வெளி வந்திருக்கிறது. இதுவரை ஒரு நூலைத் தானும் வெளியிடாத பல புதிய எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை 38 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டிருப்பது சாதனைக்குரிய விடயம். தன் தாய் மொழியாகத் தமிழைக் கொண்டில்லாதபோதும் நம் தாய் மொழித் தமிழுக்கு புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவுனரான புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. போற்றப்பட வேண்டியது.

தழும்பு என்ற இந்நூலில் வீடு வந்த வசந்தம், தழும்பு ஆகிய இரண்டு நாவல்கள் உள்ளடக்கப்பட்டு 196 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. இந்நூலாசிரியரான மா. பாலசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியத் துறையில் என்றும் நினைவுகூரத்தக்கவர். நூல் விமர்னங்கள் பலதை எழுதி வருவதுடன், நூல் வெளியீடுகளுக்கு சமூகமளித்து அந்நூல் வெளியீடு பற்றிய அனைத்துத் தகவல்களையும் பத்திரிகையில் காத்திரமாக எழுதி வரும் ஒரு சமூகப் பொறுப்பு மிக்கவர். சற்றும் தளராது இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு எழுத்தாளர்களை நாடறியச் செய்து கொண்டிருப்பவர். இவர் ஏற்கனவே இப்படியும் ஒருவன், எதிர்க்காற்று, மா.பா.சி. கேட்டவை ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நூலில் காணப்படும் முதல் நாவலான வீடு வந்த வசந்தம் என்ற நாவலே எனது ரசனைக் குறிப்புக்காக இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்டு யுத்தமும் அது தந்த வடுக்களும் அனுபவித்தவர்களுக்கு அதை வாழ்நாளிலேயே மறக்க முடியாது. நாடுவிட்டு நாடு ஓடி அகதிகளாக புகலிடங்களில் தஞ்சம் புகுந்து ஏராளம் துன்பங்களை அனுபவித்துள்ளார்கள் அந்த மக்களில் பலர். அந்நிய நாட்டிலிருந்துகொண்டு சொந்த நாடு பற்றிய ஏக்கங்களைச் சுமந்து பிறந்த மண்ணை மீண்டும் பார்ப்போமா என்றே தெரியாமல் வாழ்ந்து மடிந்தவர்களும் ஏராளம். அத்தகையதொரு சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே வீடு வந்த வசந்தம் என்ற நாவலாகும்.

Continue Reading →

சிறுகதை : அதிதுடிஇமை குணாம்சம்

சிறுகதை வாசிப்புடாக்டரின் பெயர் யுக்ஸியி. அந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை தங்கப் புத்தகம் என்று செல்லமாக அழைத்தார்கள். தங்கத்திற்கு நிகரான நற்குணங்களை அவர் கொண்டிருந்தார் என்பதற்காகத் தான் அவருக்கு அந்தப் பெயரைச் சூடியிருந்தார்கள் என்றால் அது தவறு. யுக்ஸியின் மேசையிலே தங்க நிறத்தில் பைண்டு செய்யப்பட்ட ஒரு புத்தகம் இருந்தது. பார்ப்போரின் கண்ணைக் கவரும் விதத்தில் அசல் தங்கப்பாளம் போல் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தை அழகிய கண்ணாடிப் பேழையிலே பத்திரப்படுத்தி வைத்திருந்த குறும்புக்காரான அவர் கண்ணாடிப் பேழை மீது ‘இது தங்கம்’ என்று செதுக்கியும் விட்டார். அதன் பிறகு தங்கப் புத்தகமாகி விட்டார் யுக்ஸியி.

புதியவர்கள் யாரும் அந்தப் பேழையைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன டாக்டர்?’ என்று கேட்டு விட்டால் போதும் ‘அது தங்கம் தொடாதீர்கள்’ என்று சீரியசாகச் சொல்லுவார் யுக்ஸியி. சுவாரஷ்யம் என்னவென்றால் சிகிச்சைக்காக வந்த திருடனொருத்தன் அந்தப் புத்தகத்தை உண்மையிலே தங்கமென நம்பி களவாடிப் போனான். ஒருசில நாட்களில் ‘மன்னிக்கவும்’ என்ற கடித்தோடு புத்தகப்பேழை திரும்பி வந்து விட்டது.

சிறிய அந்தப் புத்தகம் Hutchison’s clinical methods என்ற ஆங்கில மருத்துவ நூல் ஆகும். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்நூலின் பெறுமதி நன்றாகத் தெரியும். நோயாளியொருவரோடு எப்படி உரையாடுவது, நோய் அறிகுறிகள், நோய் திருஷ்டாந்தத்தை எப்படி அறிந்து கொள்வது, வயிற்றை, கால்களை, இதயத்தை, நுரையீரலை, தலையை, தோலை எப்படிப் பரிசோதிப்பது என்று அந்நூலில் விலாவாரியாகப் போட்டிருப்பார்கள். அந்நூலிலுள்ள தாற்பரியங்களைக்; கற்றுத் தேறாமல் யாரும் டாக்டராகி விடமுடியாது. அற்புதமான அப்புத்தகம் யுக்ஸியி மருத்துவக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தபோது செய்த சாதனைகளுக்காக கிடைத்ததா என்றால் அப்படி இல்லை.

யுக்ஸியி ஓய்வாக இருக்கும் வேளையில் படிக்கும்போது செய்த முட்டாள் தனங்களை நினைத்து தன்னுடைய தலையிலே தானே குட்டிக் கொள்வார்; சிலவேளை குபீரென்று சிரித்தும் விடுவார். அப்படிச் செய்த முட்டாள்தனத்திற்கு கிடைத்த பரிசுதான் அந்தத் தங்க பைண்டு தங்க புத்தகம்.

Continue Reading →

பயணியின் பார்வையில் — கல்வியை பூர்த்தி செய்து, தொழில்வாய்ப்பு பெற்ற மாணவர்களுடனும் இந்நாள் மாணவர்களுடனும் சந்திப்பு.

“கல்வியை பூர்த்தி செய்து,  தொழில்வாய்ப்பு பெற்ற மாணவர்களுடனும் இந்நாள் மாணவர்களுடனும்  சந்திப்பு.  அறிவதற்காக கற்றல், செயலாற்றுவதற்காக கற்றல், பிறரோடு சேர்ந்து வாழக்கற்றல், சுயஆளுமையுடன் வாழக்கற்றல்” –   யுனெஸ்கோவின்  கல்விச்சிந்தனை!”

எழுத்தாளர் முருகபூபதிஇலங்கைப்பயணங்களின்போது  தமிழ்ப்பிரதேசங்களில்  சில வீதிகளில் நான் அவதானிக்கும்  ஒற்றுமைjaffan2களை இங்கு குறிப்பிடல்வேண்டும். எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்ட மாணவர் தொடர்பாடல் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலையம்,   யாழ்ப்பாணம், அரியாலை கண்டிவீதியில் அமைந்திருக்கிறது. அதற்கு அருகில்தான், பெண்களின் மாற்றத்திற்கான வலையமைப்பு என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு. அந்தவீதியில்தான் இவை இரண்டுக்கும் அருகில் இலங்கைத்தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பணிமனை. அத்துடன், ஈ.பி.ஆர். எல். எஃப். பின் (பத்மாநாபா அணி) அலுவலகம். இந்த வீதியில் இந்த அமைப்புகள் தோன்றுவதற்கு முன்னர் 1970 களில் அரஸ்கோ என்ற மாம்பழச்சாறு, மற்றும் பழவகைகள் பதனிட்டு தென்னிலங்கைக்கு ஏற்றுதி செய்யும் பெரிய நிறுவனமும் அதன் தொழிற்சாலையும் இயங்கியது. தற்போது அந்தக்கட்டிடம் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் அனாதையாக காட்சி அளிக்கிறது. எனினும்,  முற்றத்தில்  மாமரங்கள் நிழல் பரப்புகின்றன. இவ்வாறு இலங்கையில் பல உள்ளுர் உற்பத்தி தொழிற்சாலைகள் பாழடைந்துவிட்டன. அரஸ்கோ நிறுவனம் கொழும்பிலும் அலுவலகம் வைத்திருந்தது. மல்லிகையில் விளம்பரங்களும் வந்துள்ளன. மல்லிகை ஜீவா அந்நாட்களில் கொழும்பு வரும்போது அவருக்கு துணையாக இங்கு சென்றிருக்கின்றேன். சிலவேளைகளில் அவர் சார்பாகச்சென்று விளம்பரத்திற்கான பணமும் (காசோலை) பெற்றுவருவேன். இன்று அரியாலையில் இந்த நிறுவனம் தனது பணியை முற்றாக நிறுத்தியிருந்தாலும், இதற்கு அருகில் பின்னாளில் தோன்றியிருக்கும் அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் கொழும்பு மலே வீதியிலும் சில  இடதுசாரி தொழிற்சங்கங்கள் இயங்கின. அங்குதான் முன்னர்  கன்னங்கரா, தஹநாயக்கா, பதியூதின் முகம்மது முதலானவர்கள் கல்வி அமைச்சர்களாக இருந்தபொழுது கல்வி அமைச்சு இயங்கியது. பரீட்சைத்திணைக்களம் அதன் முன்னால் இருந்தது. அமச்சர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காக கல்வி அமைச்சும் குட்டிகளை ஈன்றது. கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு. தற்பொழுது மாகாணங்களில் கல்வி அமைச்சுகளும் அமைச்சர்களும் துணை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள். இலங்கை கல்வி அமைச்சும் மக்களைப்போன்று இடம்பெயர்ந்துவிட்டது. தொழிற்சங்கங்களுக்கும் அதே கதிதான்.

Continue Reading →