ஆய்வு: : நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்

பெண் கவிஞர்கள்முன்னுரை
பெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்:

ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை மதம், சாதி, இன கலாச்சார பண்பாடுகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரான நிலையைத் தோற்றுவிக்கின்றன. உடல், உளம், உணர்வு நிலை, மொழி வயப்பட்ட அதன் கருத்தியல், இருப்பு என ஒரு பெண்ணின் அத்தனை கூறுகளையும் இயக்கும் சூத்திரதாயாக ஆண்மையக் கோட்பாடே செயற்பட்டது. இக்காலப் பகுதியில் பெண்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கின்றோம் என்னும் உணர்வின்றிப் பெண்கள் அதிகார மையத்துக்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நசுங்கி வாழ்ந்தனர்.

ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகவும், பெண் கல்வியின் தாக்கத்திலும் சமூகப் பொருளாதார, மத, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் பெண் மீதான மரபுசார்ந்த சமூகக் கட்டுமானம் தகா;க்கப்பட்டுப் பெண், பெண்ணியம், பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபை 1975ம் ஆண்டை மகளிர் ஆண்டாக அறிவித்ததையும் 1975 தொடங்கி 1985 வரையான பதினொரு ஆண்டுகளை அனைத்துலக மகளிர் ஆண்டாகக் கருதலாம்.

ஈழத்துப் பெண்ணிய எழுச்சி
ஈழத்துப் பெண் கவிதைகள் 1980 களுக்குப்பின், அமைப்பாலும் அனுபவ வெளிப்பாட்டாலும் மொழி நடையாலும் மாற்றம் கண்டன. இம்மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக ஆயுதப் போராட்டம், தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, பெண்நிலைவாதச் சிந்தனைக்கூடாக ஏற்பட்ட விழிப்புணா;வு, ஊடக சுதந்திரம், கல்வித் தகைமைக்கூடான தொழில்சார்நிலையின் மீள் உருவாக்கம் போன்றவற்றைக் கூறலாம். இக்காலக்கட்டத்தில் வெளிவந்த பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப் பறவைகள், நங்கை, மருதாணி, நிவேதினி, பெண் போன்ற ஈழத்துப் பெண் சஞ்சிகைகளும், ‘நமது குரல்’ (ஜேர்மனி), ‘கண்’ (பிரான்ஸ்), ‘சக்தி’ (நார்வே) போன்ற புகலிடப் பெண்நிலைவாதச் சஞ்சிகைகளும், பெண்ணியக் கருத்துக்களை உள்வாங்கி வெளிவந்ததுடன் ஆளுமைமிக்க பெண்ணிலக்கியப் படைப்பாளிகளையும் ஈழத்திலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தன.

Continue Reading →

ஆய்வு: உலகநாதர் அருளித் தந்தார் உலகநீதி

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எம் முன் காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள் தம் மக்களின் நல்வாழ்வுக்காகப் பல நீதிநூல்களை யாத்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் ஓளவைப் பாட்டியாவார். அவர் வழியில் நின்று ஆன்றோர் பலர் நீதி நூல்களைப் பாடித் தந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உலகநாதர் என்னும் தமிழ்ப்புலவராவர். அவர் ‘உலகநீதி’ என்ற ஓர் அரிய நூலை அருளித் தந்துள்ளார். இதுவே இங்கு கட்டுரையின் பேச்சுப் பொருளாகின்றது. இதில் பதின்மூன்று (13) பாடல்கள் அமைந்துள்ளன. இவர் பாடல்கள் மிகவும் எளிமையானவை. கடுஞ்சொற்கள் அற்றவை. பொருள் விளக்கத்துக்கு எவரிடமும் போகத் தேவையில்லை. இந்த நூலை எழுதுவதற்கு முன், கலைகளின் வடிவமாகத் திகழும் கரிமுகனுக்கு மருபுவழி நின்று கடவுள் வணக்கச் செய்யுள் பாடித் தொடங்குகிறார். ‘விக்னவிநாயகனே! வினைதீர்க்கும் கணேசா! வேழ முகத்தானே! உன் துணை கிடைக்க வேண்டும், இந்த நூலை நான் பாடுவதற்கு’ என்று வேண்டுகிறார்.

‘உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.’

1. ஓதாமல் இருக்க வேண்டாம்:- ஒரு காலும் படிக்காமல் இருக்க வேண்டாம். பிறர் மனம் வருந்தும்படியான சொற்களைச் சொல்ல வேண்டாம். மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். கெட்டவர்களுடன் பழக வேண்டாம். கீழ் மக்கள் கூடியுள்ள இடங்களுக்குப் போக வேண்டாம். பிறர் குணங்களைப் பற்றிப் பேச வேண்டாம். இதில் செய்ய வேண்டாமென்று ஆறு வகைகள் சொல்லப்பட்டுள்ளன. அழகு மிக்க குறவர்களின் மகளாகிய வள்ளியை அருகில் வைத்துக்கொண்டு, மயிலை வாகனமாகக் கொண்டுள்ள முருகனை வாழ்த்துவாயாக மனமே!

‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனை செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடம்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயில்ஏறும் பெருமானை வாழ்ந்ததாய் நெஞ்சே!’

Continue Reading →

Pera Sountharanathan (Real Estate Agent)

‘பதிவுகள்’ இணைய இதழ் விளம்பரங்கள் / அறிவித்தல்கள். ‘பதிவுகள்’ இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  ‘பதிவுகள்’ இணைய இதழில்…

Continue Reading →

நடிகையர் திலகம் சாவித்திரி: ஆறாது ஆறாது அழுதாலும் தீராது. ஆனாலும் வழியென்ன தாயே!

– நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி  எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் எழுதிய சிறப்பு மிக்க பதிவு. அவரது ‘R.P. ராஜநாயஹம்‘ என்னும் வலைப்பதிவிலிருந்து நன்றியுடன மீள்பிரசுரம் செய்கின்றோம். சாவித்திரி பற்றி அரிய தகவல்களைக்கொண்டுள்ள கட்டுரை இது. –


ஜெமினி கணேசன் , சாவித்திரி-  R.P. ராஜநாயஹம் -கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்! எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்!என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி.

சாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு  உண்டு. தேவதாஸ், மிஸ்ஸியம்மா, மாயாபஜார் சாவித்திரி ஒரு வகை அழகு. களத்தூர் கண்ணம்மா,பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு. அப்புறம் பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் குண்டு சாவித்திரி. திருவருட்செல்வர் படத்தில் ’ஊதிப்பெருத்த’ சாவித்திரி. பின்னால் மலையாளப்படம் ’சுழி’ சாவித்திரி. அப்புறம் அம்மா கதாபாத்திரங்களில் மெலிந்த ஒல்லி சாவித்திரி

அமிதாப் பச்சன் கூட இப்போது சாவித்திரி பற்றி குறிப்பிட முடிகிறது. ரேகா தன் சோட்டி மம்மி பற்றி சிலாகிக்கிறார்.

சாவித்திரி மட்டுமே அனைத்து நடிகைகளிலிருந்தும் வித்தியாசமானவர்! நடிகைகள் அனைவரிலும் மேலான திறமை கொண்டவர் தான் சாவித்திரி. பத்மினி, சரோஜாதேவி, தேவிகா இந்த வரிசையில் முதலிடம் சாவித்திரிக்குத் தான்.

வேற்று மொழிப்பெண்கள் தமிழ் திரையில் அன்று நிகழ்த்திய கண்ணிய சாதனை மகத்தானது. முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில்,ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில்,  பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அன்றைய சாவித்திரி,பத்மினி,சரோஜாதேவி,தேவிகாவெல்லாம் உயர்ந்த கலாபூர்வ நளினத்தை வெளிப்படுத்தினார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 252: ஊத்துக்காடு வெங்கட கவியின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண்ணன் பாடல்கள்!

ஊத்துக்காடு வெங்கட கவிநான் தீவிர கர்நாடக சங்கீத இரசிகனல்லன். ஆனால் சிறு வயதிலிருந்தே ஒரு சில பாடல்களைக் கேட்டு, அப்பாடல்களுக்கு அடிமையாகிப்போனவன். பாரதியாரின் கண்ணன் பாடல்கள், கண்ணம்மாப் பாடல்கள் எவ்விதம் கேட்கையில் இன்பத்தைத் தருகின்றன. அதுபோல் இப்பாடல்களும் கண்ணனைப்பற்றியவை. கேட்கையில் இன்பத்தைத்தருபவை. பக்திப்பாடல்கள் என்பதற்காக அல்ல. மானுடர்களின் காதல், குழந்தைப்பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிய, எளிய வரிகளுக்காக. மனத்தினை அமைதிப்படுத்தும் இசைக்காக. பாடகர்களின் குரலினிமைக்காக.

இப்பாடல்களை எழுதியவர் அண்மைக்காலத்தவரல்லர். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நூற்றுக்கணக்கில் கண்ணன் பாடல்களை எழுதித் தானே இசையமைத்தவர். எனக்கு மிகவும் ஆச்சரியமான விடயமென்னவென்றால்… இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்து எழுத்தே வாசிப்பதற்குக் கடினமாகவிருக்கும்போது பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவரது பாடல்கள் எவ்வளவு எளிமையாக , இனிமையாகவுள்ளன. இப்பாடல்களின் இனிமையும், எளிமையும்தாம் இவற்றை எழுதியவர் யார் என்பதைக்கண்டறியும் ஆவலை எனக்கு ஏற்படுத்தின.

அப்பாடலை எழுதியவர் பெயர் ஊத்துக்காடு வெங்கட கவி

இவரது ‘அலை பாயுதே – கண்ணா என்மனம் மிக அலைபாயுதே’ பாடலைப் பாடாத கர்நாடக சங்கீதப் பாடகர்கள் எவர்? அப்பாடலின் மொழிநடை எவ்வளவு எளிமையானது. இனிமையானது. இப்பாடலின் ‘தெளிந்த நிலவு பட்டப்பகல்போல் எரியுதே – உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே. கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே’ என்னும் சரணத்தில் வரும் வரிகளும், ‘அலை பாயுதே – கண்ணா என்மனம் மிக அலைபாயுதே’ என்னும் பல்லவி வரிகளும் மானுட வாழ்வின் காதல் அனுபங்களுடனும் ஒன்றிப் போகும் வரிகள் அல்லவா.

இவரது இன்னுமொரு புகழ்பெற்ற பாடல் ‘தாயே யசோதா உந்தன் மாயக் கோபாலக் கிருஷ்ணன் செய்யும் லீலையைப் பாரடி’. இதுவும் பாடகர்கள் பலரால் பாடப்பெற்ற, பாடப்படுகின்ற பாடல்தான். ‘அலை பாயுதே’ பாடலைப்போல் எளிய , இனிய வரிகள். குழந்தையான கிருஷ்ணன் செய்யும் குறும்புகளை அவனது தாயான யசோதையிடம் கோபியர்கள் முறையிடுவதாக அமைந்த வரிகள். மானுடக் குழந்தையொன்றின் குறும்புகளுடன் மனதை ஒன்ற வைக்கும் வரிகள்.

Continue Reading →