கவிதை: இன்பத்திற்குண்டோ இணை!

கவிதை: இன்பத்திற்குண்டோ இணை!

அடிவானணைக்கும்
நீள் வெளி, நீல வெளி.
விரையும் வெண் மேகம்,
என்னகம் கவர்ந்தன;
கவர்வன.
எப்பொழுதும்!
எப்பொழுதும்!
பதின்மப்பொழுதுகளில்
கல்லுண்டாய் வெளிதனில்
நடாத்திய
நீண்ட பயணங்கள்!
அடிவானணைக்கும் கடல் நங்கை
ஒருபுறம்.
விரியும் விரிவெளி
மறுபுறம்.
காற்றிலாடும் வயல்வெளிகள்,
ஆங்கு சிறகடிக்கும் கிளிக்கூட்டம்,
தூரத்தில் தவமியற்றும்
நவாலி மண்மேடுத்துறவிகள்,
நெஞ்சினில் களியேற்ற,
தண்தென்றல்
மேனி வருடிச்செல்லும்.
இன்பத்திற்குண்டோ
இணை.

Continue Reading →

கனடா: எழுத்தாளர் அகணி சுரேஸ் நூல் வெளியீடு!

அன்புடையீர், இந்நிகழ்வில் எனது பிந்திய படைப்புக்களான  “அன்புடைமை” என்னும் சுயமுன்னேற்ற அறிவியல் நூலும், “இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்”; என்னும் இலக்கிய நூலும் வெளியீடு செய்யப்படவுள்ளன என்பதை…

Continue Reading →