கவிதை: மின்னற்சுடர்!

courtesy:  Art - lightning_woman_by_memeticus


மின்னற்பெண்ணே!  நீ மீண்டும்

என் முன்னால்

மின்னினாய்.

ஆயின் இம்முறை முன்னரைப்போல்

மீண்டும் மறைந்து விடாதே.

உன் ஒளிதரும் வெளிச்சத்தில்

இப்பிரபஞ்சத்தை இன்னும் அதிகமாகச்

சுகித்திடவே விரும்புகின்றேன்.

எட்டாத உயரத்தில் நீ

இருப்பதையிட்டு எனக்குக்

கவலையில்லை.

நீ இருக்கும் இடத்திலேயே

இருந்துகொள்

மின்னலாக அல்ல

விண்சுடராக.

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

1. உட்குறிப்புகள்

அஞ்சலிக்கூட்ட இதழை ஆரவாரமாக நடத்துவது
அந்த மாமாற்றிதழின் மனிதநேயக் கோட்பாடு
இதழின் நான்கு மூலைகளிலும் மங்கல மஞ்சளாய்க் காணும் _
படைப்பாளி உயிரோடிருந்தபோது (அப் பத்திரிகை) அவரை அவமதித்த
காயத்தின் ரணக்கசிவுச் சிவப்பு.

இருக்கும்போதெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவரை இறந்தவுடன் பூசனைக்குரியவராக்கிப் பேசியது ஏனென்று புரியாமல்
நாளெல்லாம் குழம்பிநின்றேன் ரொம்பத்தான்
வாழ்ந்தகாலத்தில் வாழ்த்திப்போற்றிப் பிரசுரித்தோரை
வாகாய் ஓரங்கட்டி
இறந்துவிட்ட படைப்பாளியின் எழுத்துகளைப் பிரசுரிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டதைப் பார்த்ததில்

பிடிபட்டுவிட்டது போதிமரம்.

Continue Reading →