திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்!

திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களுடன்  ஒரு சிறப்பு நேர்காணல்!ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வு நிலை ஆசிரியருமான திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு  ஒருநேர்காணல்

நிலவன் :- உங்களைப் பற்றிச் சற்றுக் கூறுங்கள்…?

பாராசத்தி :- எனது பெயர் திருமதி பாராசத்தி  ஜெகநாதன். முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளைக் காட்டு விநாயகர் கோயிலடி எனது சொந்த ஊராகும். தற்போது விநாயகர் வீதி உக்குளாங்குளம் வவுனியாவில் வாசித்து வருகிறேன். நான் கணபதிப்பிப்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் ஒரே புதல்வியாவேன். எனது தந்தையார் ஒரு நாட்டுக் கூத்துக் கலைஞன். எனது ஒன்பதாவது வயதிலிருந்து இசை, நாடகம் இரண்டையும் முறையாக பயின்று வந்தேன். எனது பாடசாலைக் கல்வியை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலும் பட்டப்படிப்பை இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்று பத்து ஆண்டுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், இருபதாண்டு வவுனியா மாவட்டத்திலும் இசை ஆசிரியராக பணிபுரிந்து முப்பதாண்டுகள் பூர்த்தி செய்தும் தற்போது வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வு நிலை ஆசிரியராக இருக்கிறேன்.

நிலவன் :- பல்துறை சார் நிபுணத்துவம் உருவாக்கத்தில் உங்கள் இளைமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி கூறுங்கள்?

பாராசத்தி :- பெண் பிள்ளை என்று ஒரு காரணத்தைக் காட்டிப் பல்துறையிலும் ஊக்கப்படுத்தாதீர்கள் என்று பலர் தடைவித்தனர். என் பெற்றோர் எனக்குப் பக்கபலமாக இருந்து என்னை ஊக்குவித்தனர். மேலும் எனக்குக் கிடைத்த இசை ஆசான்களின் பயிற்சி மற்றும் வழிப்படுத்தலினாலே இது சாத்தியமானது.

Continue Reading →