வ.ந.கிரிதரனின் நான்கு சிறுகதைகள்: கணவன்! ஒரு முடிவும் விடிவும்! மனித மூலம்! பொந்துப்பறவைகள்!

சிறுகதை வாசிப்போமா?–  தாயகம் (கனடா), சுவடுகள் (நோர்வே) ஆகிய சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகள் இவை. எனது ‘அமெரிக்கா’ தொகுப்பிலும் அடங்கியுள்ளன.  இவற்றில்  சுவடுகள் (நோர்வே) சஞ்சிகையில் வெளியான ‘பொந்துப்பறவைகள்’  சிறுகதை. சிங்கப்பூர் கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்ப்பாடக் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. – வ.ந.கி –

எனது கதைகள் வ.ந.கிரிதரன் — அமெரிக்கா தொகுப்புக்கான என்னுரை. –

எமது புலம் பெயர்ந்த சூழலில் ஏற்படும் நிலைமைகளையும், அதேசமயம் எமது நாட்டுப் பிரச்சனைகளை மையமாக வைத்தும் என் படைப்புக்கள் எழுந்துள்ளன. இன்றைய புலம்பெயர்ந்த எமது தமிழ்த் தலைமுறையைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலிற்கும், புலத்தின் நினைவுகளிற்குமிடையில் அகப்பட்டு ஒரு வித திரிசங்கு வாழ்க்கை நடத்தும் தலைமுறை. இத்தலைமுறையினரில் நானும் ஒருவன் என்ற வகையில் எனது படைப்புகளில் புலத்தின் பிரச்சனைகளையும், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலின் நிலைமை களையும் சித்தரிப்பதை என்னால் தவிர்க்க முடியாது. நிறப்பிரச்சனை யென்பது புலம் பெயர்ந்து வாழும் குழலின் முக்கியமான பிரச்சனை. புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை. நாளைய எம் தலைமுறையும் இதற்கு விதிவிலக்கல்ல. எமது படைப்புக்கள் இப்பிரச்சினையை வெளிப்படுத்தும் அதேசமயம் புதிய சூழலின் ஏனைய பிரச்சனைகளையும், ஆராய வேண்டும். பூர்வீக இந்தியர்களின் பிரச்சினை, இந்நாட்டுப் பொருளாதாரச் சூழலால் உருவாகும் நிர்ப்பந்தங்கள், வாழ்வில், அவற்றாலேற்படும் தாக்கங்கள், பெண்களின் நிலைமை, புதிய சூழல் நம்மவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அனுபவங்கள்இவற்றையெல்லாம் நாம் எம் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம் நாட்டுப்பிரச்சனை காரணமாக ஓடிவந்தவர்கள் நாங்கள். அப்பிரச்சனையை மீண்டும் மீண்டும் கூறுவதென்பது தவறானதல்ல, தவிர்க்க முடியாததும் கூட.

அண்மைக் காலமாக எம்மவர்களில் சிலர் ‘புலம் பெயர்த்த எழுத்தாளரின் படைப்புக்கள் தொடர்ந்தும் பிறந்த நாட்டுப் பிரச்சனைகளை, விரக்தியையே புலப்படுத்தி வருகின்றன. இவர்கள் புகுந்த நாட்டுச் குழலை மையமாக வைத்துப் படைப்புக்களை உருவாக்க வேண்டும்’ என்ற கருத்துப்பட கூறி, எழுதிவருகின்றார்கள். இவர்களது கருத்துப்படி புகுந்தநாட்டுச்சூழலை வைத்து எழுதுவதுதான் இலக்கியத்தரமானதாக அமையுமென்ற நோக்கமும் இழையோடுகின்றது. இவர்களெல்லாம் ஒன்றை உணரவேண்டும். தரமான படைப் பென்பது எதனைப் பற்றியதாகவும் இருக்கலாம்.இரண்டாம்உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யூத எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புக்கள் அவர்களது சொந்த நாட்டுப் பிரச்சனையை மையமாக, வைத்து எழுந்தவையே. உதாரணமாக போலந்து யூத இனத்தைச் சேர்ந்து ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் Painted Birds என்ற மிகப் பிரபலமான நாவலைக் குறிப்பிடலாம். 1991 இல் தற்கொலை செய்து கொண்ட கொஸின்ஸ்கியின் படைப்புக்கள் பிரச்சனைக்குரியவை. நிறமூட்டப் பட்ட பறவைகள்’ (Painted Birds) நாவலில், யூதச் சிறுவனாக யுத்தச் சூழலில், நான்காண்டுகளாக கிழக்கு ஐரோப்பியநாடுகளில் அலைந்து திரிந்த தனது சொந்த அனுபவங்களையே கொளின்ஸ்கி விபரிக்கின்றான். இன்று இந்தப்படைப்பு: ஆங்கில இலக்கியத்தின் முக்கிய படைப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். கொஸின்ஸ்கியால் அவர்மேல் அவரது சொந்த நாட்டு அரசியல்நிலைமை ஏற்படுத்திய பாதிப்பை மறக்கமுடியவில்லை, அதனைப்படைக்காமல் இருக்கவும் முடியவில்லை.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் நான்கு சிறுகதைகள்: கணவன்! ஒரு முடிவும் விடிவும்! மனித மூலம்! பொந்துப்பறவைகள்!

சிறுகதை வாசிப்போமா?–  தாயகம் (கனடா), சுவடுகள் (நோர்வே) ஆகிய சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகள் இவை. எனது ‘அமெரிக்கா’ தொகுப்பிலும் அடங்கியுள்ளன.  இவற்றில்  சுவடுகள் (நோர்வே) சஞ்சிகையில் வெளியான ‘பொந்துப்பறவைகள்’  சிறுகதை. சிங்கப்பூர் கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்ப்பாடக் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. – வ.ந.கி –

எனது கதைகள் வ.ந.கிரிதரன் — அமெரிக்கா தொகுப்புக்கான என்னுரை. –

மேது புலம் பெயர்ந்த சூழலில் ஏற்படும் நிலைமைகளையும், அதேசமயம் எமது நாட்டுப் பிரச்சனைகளை மையமாக வைத்தும் என் படைப்புக்கள் எழுந்துள்ளன. இன்றைய புலம்பெயர்ந்த எமது தமிழ்த் தலைமுறையைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலிற்கும், புலத்தின் நினைவுகளிற்குமிடையில் அகப்பட்டு ஒரு வித திரிசங்கு வாழ்க்கை நடத்தும் தலைமுறை. இத்தலைமுறையினரில் நானும் ஒருவன் என்ற வகையில் எனது படைப்புகளில் புலத்தின் பிரச்சனைகளையும், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலின் நிலைமை களையும் சித்தரிப்பதை என்னால் தவிர்க்க முடியாது. நிறப்பிரச்சனை யென்பது புலம் பெயர்ந்து வாழும் குழலின் முக்கியமான பிரச்சனை. புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை. நாளைய எம் தலைமுறையும் இதற்கு விதிவிலக்கல்ல. எமது படைப்புக்கள் இப்பிரச்சினையை வெளிப்படுத்தும் அதேசமயம் புதிய சூழலின் ஏனைய பிரச்சனைகளையும், ஆராய வேண்டும். பூர்வீக இந்தியர்களின் பிரச்சினை, இந்நாட்டுப் பொருளாதாரச் சூழலால் உருவாகும் நிர்ப்பந்தங்கள், வாழ்வில், அவற்றாலேற்படும் தாக்கங்கள், பெண்களின் நிலைமை, புதிய சூழல் நம்மவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அனுபவங்கள்இவற்றையெல்லாம் நாம் எம் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம் நாட்டுப்பிரச்சனை காரணமாக ஓடிவந்தவர்கள் நாங்கள். அப்பிரச்சனையை மீண்டும் மீண்டும் கூறுவதென்பது தவறானதல்ல, தவிர்க்க முடியாததும் கூட.

அண்மைக் காலமாக எம்மவர்களில் சிலர் ‘புலம் பெயர்த்த எழுத்தாளரின் படைப்புக்கள் தொடர்ந்தும் பிறந்த நாட்டுப் பிரச்சனைகளை, விரக்தியையே புலப்படுத்தி வருகின்றன. இவர்கள் புகுந்த நாட்டுச் குழலை மையமாக வைத்துப் படைப்புக்களை உருவாக்க வேண்டும்’ என்ற கருத்துப்பட கூறி, எழுதிவருகின்றார்கள். இவர்களது கருத்துப்படி புகுந்தநாட்டுச்சூழலை வைத்து எழுதுவதுதான் இலக்கியத்தரமானதாக அமையுமென்ற நோக்கமும் இழையோடுகின்றது. இவர்களெல்லாம் ஒன்றை உணரவேண்டும். தரமான படைப் பென்பது எதனைப் பற்றியதாகவும் இருக்கலாம்.இரண்டாம்உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யூத எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புக்கள் அவர்களது சொந்த நாட்டுப் பிரச்சனையை மையமாக, வைத்து எழுந்தவையே. உதாரணமாக போலந்து யூத இனத்தைச் சேர்ந்து ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் Painted Birds என்ற மிகப் பிரபலமான நாவலைக் குறிப்பிடலாம். 1991 இல் தற்கொலை செய்து கொண்ட கொஸின்ஸ்கியின் படைப்புக்கள் பிரச்சனைக்குரியவை. நிறமூட்டப் பட்ட பறவைகள்’ (Painted Birds) நாவலில், யூதச் சிறுவனாக யுத்தச் சூழலில், நான்காண்டுகளாக கிழக்கு ஐரோப்பியநாடுகளில் அலைந்து திரிந்த தனது சொந்த அனுபவங்களையே கொளின்ஸ்கி விபரிக்கின்றான். இன்று இந்தப்படைப்பு: ஆங்கில இலக்கியத்தின் முக்கிய படைப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். கொஸின்ஸ்கியால் அவர்மேல் அவரது சொந்த நாட்டு அரசியல்நிலைமை ஏற்படுத்திய பாதிப்பை மறக்கமுடியவில்லை, அதனைப்படைக்காமல் இருக்கவும் முடியவில்லை.

Continue Reading →

தொடர்நாவல்: கணங்களும், குணங்களும் (காயத்ரியின் கதை பகுதி மூன்று (1 -2))

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது.


பகுதி மூன்று: காயத்ரியின் கதை

அத்தியாயம் ஒன்று: புயலான உள்ளம்

நான் நிச்சயமாகவே எதிர்பார்க்கவில்லை. அவன் மீண்டும் என் வாழ்வில் குறுக்கிடுவான் என்று. ஏற்கனவே உடைத்து  விட்டிருந்த அப்பா கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை தான். எதற்காக இவன் மீண்டும் வந்தான்? ஏற்கனவே செய்தது போதாதென்றா. அமைதியான துள்ளலுடன் ஆடிச்செல்லும் நதியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்வை சுழல்கள் நிறைந்து பாயும் காட்டாறாக்கி விட்டுப் போனவன் மீண்டும் எதற்காக? மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பாவ மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பெண்மை எவ்வளவு இளக்காரமாய் போய் விட்டது இவர்களிற்கு. மன்னிப்புக் கேட்டு விடுவதால் மட்டும் இவன் செய்த குற்றம் இல்லையென்று ஆகிவிடுமா என்ன?

இவனைப் பற்றி எண்ணியதுமே என்னிடத்தில் இவன் மேல் ஒருவிதமான அருவருப்புத்தான் எழுகிறது. மிருகமொன்றைப் பார்ப்பது போன்றதொரு உணர்வு. என்மேலேயே எனக்கு ஒருவிதமான அருவருப்பு. நான் மிகவும் மலிந்தவளாக, அசுத்தமானவளாக, அருவருக்கத்தக்கவளாக எனக்கே தெரிகிறேன். வாழ்க்கை வெறுப்பாக, அசிங்கமானதாக மாறி விடுகின்றது. ஒரு பெண்ணின் உணர்வுகளை, உள்ளத்து வேட்கைகளை, வெறும் உடலளவில் உறுதியானவர்களாக இருந்து விட்ட காரணத்தினால் இவர்கள் எவ்வளவு இலகுவாகக் காலடியில் போட்டு நசித்து விடுகின்றார்கள். இவனைப் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்கு அந்தக் கணம் தான் தெரிகிறது. எனது கெஞ்சல்கள். வேண்டுதல்கள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, வெறிமிருகமாக குலைத்து, சிதைத்து. அருவருப்பாயிருக்கிறது. நாங்களென்ன அப்படிப் பெரிய பாவம் செய்தோம். இத்தகையதொரு தண்டனையை அடைவதற்கு. அதன் பிறகு வாழ்வு தான் எவ்வளவு தலைகீழாக மாறி விட்டது. அன்று இடிந்து போன அப்பா இடிந்து போனவராக மாறி விட்டார்.

Continue Reading →

தொடர்நாவல்: கணங்களும், குணங்களும் (காயத்ரியின் கதை பகுதி மூன்று (1 -2))

தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி ஒன்று - கருணாகரன் கதை ( 1-6)– தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்’ நாவல்தான் ‘தாயகம்’ பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள்? என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே ‘கணங்களும், குணங்களும்’ நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல் வெளியாகின்றது.


பகுதி மூன்று: காயத்ரியின் கதை

அத்தியாயம் ஒன்று: புயலான உள்ளம்

நான் நிச்சயமாகவே எதிர்பார்க்கவில்லை. அவன் மீண்டும் என் வாழ்வில் குறுக்கிடுவான் என்று. ஏற்கனவே உடைத்து  விட்டிருந்த அப்பா கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை தான். எதற்காக இவன் மீண்டும் வந்தான்? ஏற்கனவே செய்தது போதாதென்றா. அமைதியான துள்ளலுடன் ஆடிச்செல்லும் நதியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்வை சுழல்கள் நிறைந்து பாயும் காட்டாறாக்கி விட்டுப் போனவன் மீண்டும் எதற்காக? மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பாவ மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பெண்மை எவ்வளவு இளக்காரமாய் போய் விட்டது இவர்களிற்கு. மன்னிப்புக் கேட்டு விடுவதால் மட்டும் இவன் செய்த குற்றம் இல்லையென்று ஆகிவிடுமா என்ன?

இவனைப் பற்றி எண்ணியதுமே என்னிடத்தில் இவன் மேல் ஒருவிதமான அருவருப்புத்தான் எழுகிறது. மிருகமொன்றைப் பார்ப்பது போன்றதொரு உணர்வு. என்மேலேயே எனக்கு ஒருவிதமான அருவருப்பு. நான் மிகவும் மலிந்தவளாக, அசுத்தமானவளாக, அருவருக்கத்தக்கவளாக எனக்கே தெரிகிறேன். வாழ்க்கை வெறுப்பாக, அசிங்கமானதாக மாறி விடுகின்றது. ஒரு பெண்ணின் உணர்வுகளை, உள்ளத்து வேட்கைகளை, வெறும் உடலளவில் உறுதியானவர்களாக இருந்து விட்ட காரணத்தினால் இவர்கள் எவ்வளவு இலகுவாகக் காலடியில் போட்டு நசித்து விடுகின்றார்கள். இவனைப் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்கு அந்தக் கணம் தான் தெரிகிறது. எனது கெஞ்சல்கள். வேண்டுதல்கள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, வெறிமிருகமாக குலைத்து, சிதைத்து. அருவருப்பாயிருக்கிறது. நாங்களென்ன அப்படிப் பெரிய பாவம் செய்தோம். இத்தகையதொரு தண்டனையை அடைவதற்கு. அதன் பிறகு வாழ்வு தான் எவ்வளவு தலைகீழாக மாறி விட்டது. அன்று இடிந்து போன அப்பா இடிந்து போனவராக மாறி விட்டார்.

Continue Reading →