ஆய்வு: இளிவரலெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்களின் அகநானூற்றுத்திறன்

- பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில் DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்.(தொ.மெய்.3) அவற்றுள் இளிவரலெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் இளிவரலுக்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் உரையில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.

இளிவரல் தோன்றும் களன்கள்
இளிவரலெனும் மெய்ப்பாடு தோன்றும் களனை தொல்காப்பியர்,
மூப்பே பிணியே வருத்த மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.(தொ.மெய்.நூ.6)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

உரையாசிரியர்களின் பார்வையில் இளிவரல்
மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் இளிவரலுக்குரிய பொருளாகும். இவை தன்னிடமும் பிறரிடமும் தோன்றும்(இளம்.) மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல்.(பேரா.) இளிவரல் எனும் மெய்ப்பாடு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கிறது.(பாரதி.) என உரையாசிரியர்கள் இளிவரலினைக் குறித்துக் கூறியுள்ளனர்.

மூப்பு
பிறர்மாட்டு தோன்றும் மூப்புப் பற்றி விளக்க நாலடி.14 ஆம் பாடலை இளம்பூரணர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தன்கட் டோன்றிய மூப்புப் பற்றி விளக்க பேராசிரியர். புறம்.243 ஆம் பாடலையும்,

”மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல”(அகம்.6)

எனும் பாடலையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். மேற்கண்ட அகநானூற்றுப் பாடலடிகளில் இன்று இங்கு வந்து எனது மார்பில் தோன்றிய தேமலையும், கற்பினையும் உடைய புதல்வனது தாய் என்று வஞ்சனையுடன் வணங்கிப் பொய்ம்மொழி கூறி என்னுடைய முதுமையை இகழாது இருக்க என தலைவனிடம் தலைவி வேண்டுகின்றாள் எனும் செய்தி இடம்பெற்றுள்ளமையின் இஃது தன்னிடம் தோன்றிய முதுமைப் பொருளாயிற்று. மூப்பு என்பது முதுமை(பாரதி) என பாரதி கூறியுள்ளார்.

Continue Reading →

மகாஜனா கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி ( 1935 – 2014) நினைவலைகள்: விஞ்ஞானத்தில் பிறந்த விண்ணாணம் பற்றி எழுதிய விலங்கியல் ஆசிரியர்

மகாஜனா கல்லூரி முன்னாள் அதிபர்  பொ. கனகசபாபதி  ( 1935 - 2014)  நினைவலைகள்: விஞ்ஞானத்தில் பிறந்த விண்ணாணம் பற்றி எழுதிய விலங்கியல் ஆசிரியர் ‘வாணி, உன் வீடும் வளவும் அறிவேன். அக் காணி முழுவதும் கலகலப்பே அல்லவோ?’-  கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி எழுதியிருக்கும் இந்தக்கவிதை வரிகள், யாழ். மகாஜனாக்கல்லூரியை நினைவுகூருகிறது.   யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய  நண்பர் என். சண்முகலிங்கன், ” சமூக மாற்றங்களிடையும் பண்பாட்டின் செழுமையான கூறுகளைக் கைவிடாத இந்தப்புலத்தின் சிறப்பினைக்கண்டுதான் படைப்புச்சக்தியாய்ப் பண்பாடு கண்ட கலைத்தெய்வமான வாணியும் தன்வீடாக மகாஜனாவைத் தேர்ந்தெடுத்து, தென்தமிழ் யாழ் மீட்டிச் சிரித்தபடி வீற்றிருக்கிறாள். – என்று தமது கட்டுரையொன்றில் பதிவுசெய்துள்ளார்.  சமூக மாற்றங்களுக்கு பிரதானமாகத்திகழும் கல்வியும் கலை, இலக்கியங்களும் உருவாகும்-வளரும் ஸ்தாபனம் மகாகவி குறிப்பிடும் கலகலப்பான கலாசாலைதான்.

இலங்கையில், தமிழ் கலை,இலக்கியவளர்ச்சிக்கு ஆரோக்கியமான செழுமையைத்தந்த பாடசாலைகளின்- கல்லூரிகளின் வரிசையில் மகாஜனாவும் ஒன்று என்பதில் அபிப்பிராய பேதமிருக்காது.  எனக்கு- எனது தாயகத்தில் பல பாடசாலைகளுடன் நீண்டகாலமாக தொடர்புகளிருந்தபோதிலும் மகாஜனாவுடனான உறவு சற்று வித்தியாசமானது. அதற்குக்காரணம் பலவுண்டு.  1972 ஆம் ஆண்டு ஜூலைமாதம் வெளியான மல்லிகை இதழின் முகப்பினை அலங்கரித்த படம் மகாஜனாக்கல்லூரியின் ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களுடையது. அந்த இதழில்தான் எனது முதலாவது சிறுகதையும் வெளியாகி ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகமானேன். ஒவ்வொருவரது வாழ்விலும் முதலாவது நிகழ்வு மறக்கமுடியாததல்லவா…?

யாழ்ப்பாணத்தில் 1975- 1986 காலப்பகுதியில் பல இலக்கியக்கூட்டங்களிலும் பேசியிருந்தபோதிலும் அந்தக்குடாநாட்டில் முதலும் – இறுதியுமாக நான் பேசிய ஒரேயொரு கல்லூரி மண்டபம் மகாஜனா மாத்திரமே. 1984 ஆம் ஆண்டு அச்சமயம் அங்கே அதிபராகவிருந்த எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் அவர்களின் தலைமையில் அக்கல்லூரியில் நடந்த திருமதி கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை கதைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில்தான் இந்த முதலும் இறுதியுமான  நிகழ்வுநடந்தது.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: “காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி” சுயவிமர்சனங்களை நாடும் தெய்வீகனின் அரசியல் பத்தி எழுத்துக்கள்

படித்தோம் சொல்கின்றோம்: "காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி" சுயவிமர்சனங்களை நாடும் தெய்வீகனின் அரசியல் பத்தி எழுத்துக்கள்எழுத்தாளர் முருகபூபதி‘ தந்தையாய்’, ‘தளபதியாய்’, ‘ தலைவராய்’, பயணித்த தமிழர் அரசியல் தற்போது ‘ ஐயாவாய்’ வந்து புதுவடிவம் பெற்று நிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர்.” எனத்தொடங்குகிறது அந்தப்பத்தி எழுத்து. தலைப்பு: ஐயாவின் பதவி: வரமா? வலையா? இந்தப்பத்தியை எழுதியிருப்பவர் மெல்பனில் வதியும் ஊடகவியலாளர் தெய்வீகன். இவர் இலங்கையில் வெளியாகும் தமிழ் மிரர் பத்திரிகையில் 2015 – 2016 காலப்பகுதியில் தொடர்ச்சியாக எழுதிய அரசியல் பத்திகள், இந்த ஆண்டில் (2017 இல்) தனிநூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. கிளிநொச்சி மகிழ் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

தெய்வீகன் ஏற்கனவே இலங்கையில் சுடரொளி, வீரகேசரி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றி அனுபவம் பெற்றிருப்பவர். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் இங்கு வெளியான ஈழமுரசு பத்திரிகையிலும் எழுதியிருப்பவர். தீவிர இலக்கியவாசகர். ஆனால், இவருக்கு இருப்பது ஊடகம் சார்ந்த முகம்தான். அதனால், இலாவகமாக அரசியல் பற்றி விமர்சிக்கவும் ஆழமாக ஆய்வுசெய்யவும் இவருக்குத் தெரிந்துள்ளது. சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு சிறந்த ஊடகவியலாளனின் கடமை. அதனை செவ்வனே நிறைவேற்றி வருபவர் தெய்வீகன்.

நூலின் தலைப்பு: காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி. நூலைப்புரட்டினால், இடம்பெற்றுள்ள 34 அரசியல் பத்திகளிலும் இந்தத்தலைப்பினை காணமுடியாது. அதனால் சற்று வித்தியாசமான தொகுப்பு. தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் புலி அரசியலைவிட்டு, தமிழ்த்தலைவர்கள் மட்டுமல்ல பத்திரிகைகளும் ஊடகவியலாளர்களும் வாசகர்களும் ஒதுங்கமுடியாது என்பதையும் காலியாக்கப்பட்ட இந்த நாற்காலி சொல்கிறது. நாற்காலி பேசுமா…? நாற்காலிகளுக்காகத்தானே தற்பொழுது பேசிக்கொண்டிருக்கிறார்கள் எமது தலைவர்கள்… !!! வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ன யோசனையில் தமது இயக்கத்திற்கு புலியின் பெயரைச்சூட்டினார்…? அன்டன் பாலசிங்கமும், அடேல் பாலசிங்கமும் எழுதிய நூல்களில் அதன் விபரம் இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், இவர்களின் இயக்கத்தின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை புலிகள் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறார்.

ஏன் அப்படி ஒரு தலைப்பினை தெய்வீகன் இந்த நூலுக்குச்சூட்டினார் என்பதையும் நூலில் தேடிப்பார்த்தேன். அவரது உரையும் இல்லை. பதிப்புரை எழுதியவரின் பெயரும் இல்லை. அந்த இடங்கள் காலியாக இருந்தாலும், எவருமே இன்று இல்லாத நாற்காலியில் புலி அமர்ந்திருக்கிறது. தலைவர்களின் பேச்சில், அரசுகளில் அச்சத்தில், ஊடகப்பதிவுகளில் புலி அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த வேடிக்கைதான் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் சமகால அரசியல் பத்திகள்.

Continue Reading →