அறிமுகம்: ஓவியர் நகுலேஸ்வரி

நகுலேஸ்வரி ஓவியம்

எழுபதுகளிலேயே கனடாவுக்குப்புலம்பெயர்ந்து , இங்குள்ள பிரபல நிறுவனமொன்றில் பணியாற்றி , அண்மையில் ஓய்வு பெற்றவரே நகுலேஸ்வரி அவர்கள். இவரை எனக்கு சிறு வயதிலிருந்தே நன்கு தெரியும். எமது மாணவப்பருவத்திலேயே இவர் அக்காலகட்டத்தில் வெளியான வெகுசன இதழ்களில் வெளியாகிக்கொண்டிருந்த ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களைப் பார்த்து அழகாக ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை வியப்புடன் பார்த்திருக்கின்றோம், கனடாவின் பொருளியல் வாழ்க்கைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் பெரிதாகத் தனது ஓவியத் திறமையில் நாட்டம் செலுத்தவில்லை. ஆனால் ஓய்வு பெற்ற பின்னர், குழந்தைகளெல்லாம் வளர்ந்து  தம் வாழ்வைக் கவனிக்கத்தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் பொழுதுபோக்குக்காக இவரது கவனம் ஓவியத்தின்பால் ஈடுபடத்தொடங்கியது. இருந்தாலும் தன் ஓவியத்திறமையில் பெரிதும் நம்பிக்கை வைத்தவராகத்தெரியவில்லை. அடிக்கடி ‘வோட்டர் கலர்’ ஓவியங்களை வரைவதும் , அவற்றை அழிப்பதுமாக இருந்திருக்கின்றார். அவ்வாறான சமயங்களில் தான் இவர் வரைந்த சில ஓவியங்களைப்பார்த்தேன். எனக்குப் பிரமிப்பாகவிருந்தது.

Continue Reading →

இறைநிலைக்கே உயர்ந்து விட்டாள் ! [ சர்வதேச மகளிர் தினத்துக்காக இக்கவிதை சமர்ப்பணம் ]

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

பொறுமைக்கு இலக்கணமாய்
புவிமீது வந்திருக்கும்
தலையாய பிறவியென
தாயவளும் திகழுகிறாள்
மலையெனவே துயர்வரினும்
மனமதனில் அதையேற்று
குலையாத நிலையிலவள்
குவலயத்தில் விளங்குகிறாள்

சிலைவடிவில் கடவுளரை
கருவறையில் நாம்வைத்து
தலைவணங்கி பக்தியுடன்
தான்தொழுது நிற்கின்றோம்
புவிமீது கருசுமக்கும்
கருவறையை கொண்டிருக்கும்
எமதருமை தாயவளும்
இறைநிலைக்கே உயர்ந்துவிட்டாள்

பெண்பிறவி உலகினுக்கே
பெரும்பிறவி எனநினைப்போம்
மண்மீது மகான்கள்பலர்
கருசுமந்த பிறவியன்றே
காந்திமகான் உருவாக
காரணமே தாயன்றோ
சாந்தியொடு சமாதானம்
சன்மார்க்கமும் தாய்தானே

Continue Reading →