வாசிப்பும், யோசிப்பும் 333: குயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?

அ.ந.ககுயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?  எனது அ.ந.க பற்றிய முகநூற் பதிவொன்று சம்பந்தமாகக் கருத்துத்தெரிவித்திருந்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் 'ஒரு சந்தேகம் .குயுக்தியார் எஸ் டி சிவநாயகம் இல்லையா ?' என்றொரு கேள்வி கேட்டிருந்தார்.குயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?

எனது அ.ந.க பற்றிய முகநூற் பதிவொன்று சம்பந்தமாகக் கருத்துத்தெரிவித்திருந்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் ‘ஒரு சந்தேகம் .குயுக்தியார் எஸ் டி சிவநாயகம் இல்லையா ?’ என்றொரு கேள்வி கேட்டிருந்தார்.

அக்டோபர் 1961 ‘மரகதம்’ சஞ்சிகையில் வெளியான, ராம்- ரஹீம் எழுதிய ‘ஒட்டிப்பிறவாத இரட்டையர் அ.ந.க – எஸ்.பொ’ என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையில் அ.ந.கந்தசாமியே குயுக்தியார் கேள்வி – பதில் பகுதியை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எஸ்.டி.சிவநாயகம் சுதந்திரனின் ஆசிரியராக இருந்த காலகட்டம் 1952 – 1961. ஆனால் அ.ந.க.வின் நானா வெளியான காலகட்டத்தில் (4-11-1951) ‘கேட்டுப்பாருங்கள் குயுக்தி’ என்னும் கேள்வி பதில் சுதந்திரனில் வெளியாகியுள்ளது.

இதிலிருந்து எஸ்.டி,சிவநாயகம் குயுக்தி கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்திருக்கச் சாத்தியமில்லை. அவர் ஆசிரியராக விளங்கிய காலகட்டத்தில் அப்பகுதியைத் தொடர்ந்திருக்கவே சாத்தியமுண்டு. இதன்படி அ.ந.கந்தசாமியே குயுக்தி கேள்வி – பதில் பகுதியைச் சுதந்திரன் பத்திரிகையில் உருவாக்கியவராகயிருக்க வேண்டும்.

அ.ந.க சுதந்திரனிலிருந்த காலகட்டத்தில் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் மொழிபெயர்ப்பு , புத்தகவிமர்சனம் மற்றும் குயுக்தி பதில் எனப்பன்முகப் பங்களிப்பு செய்துள்ளார். அது பற்றி அ.ந.க.வின் சுதந்திரன் காலகட்டம் என்னும் தலைப்பிலான ஆய்வு செய்யப்படுவது முக்கியம்.  4.11.1951 சுதந்திரனில் வெளியான குயுக்தி பதில்களுக்கான மற்றும் மரகதம் சஞ்சிகையில் வெளியான கட்டுரைக்கான சான்றுகள் கீழே. இங்குள்ள சுதந்திரன் குயுக்தி கேள்வி-பதில் பகுதியில் வாசகர் ஒருவர் அ.ந.க.வின் நானா பற்றியும் கேள்வியொன்றினைக் கேட்டுள்ளதை அவதானியுங்கள்

Continue Reading →