ஆய்வு: சாமானியரின் குரலாக ஒலிக்கும் சமூக ஊடகம்

எழுத்தாளர் க.நவம்சமூக ஊடகங்களில் வேண்டியதெல்லாம் ஒரு ‘பிம்பம்’ மட்டுமே; அதுவே பிறரைப் பெரிதும் கவர்கிறது. உள்ளடக்கத்தைவிட, உருவம்தான் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. சமூக ஊடகங்களில் பதியப்படும் இலக்கியங்கள் பொதுவாகப் பலரது கவனத்தைப் பெறுவதில்லை; பகிரப்படுவதில்லை; ஒருசில வரிகளுக்கப்பால் படிக்கப்படுவதுமில்லை. அரிதாகக் கிடைக்கும் விருப்புக் குறிகள்கூட (likes), பெரும்பாலும் படிக்கப்படாமலே கிடைக்கப்பெறுவன. எனவே, படிக்கப்படா இலக்கியங்களையும் இலக்கிய விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் பதிவுசெய்து என்ன பயன்? அன்றாடம் அவற்றில் இடம்பெற்றுவரும் சுயபுராணங்களுடன், கடிபாடுகளும், கிசுகிசுக்களும், வசைகளும், வக்கிரங்களும் மட்டும்தானா இலக்கியம்? இந்நாளைய இலக்கியக்காரர் சிலரது மனக் கவலை, இது! ஒருவகையில், நியாயமான கவலையுங்கூட!

ஒத்த விருப்புக்களையும் பின்னணிகளையும் கொண்ட பாவனையாளர்கள் தம்மை இணைத்து, தமக்கிடையே பகிர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கும் சமூக வலைத் தளங்களை சமூக ஊடகங்கள் என்பர். இன்னொரு வகையில் கூறுவதாயின், சமூக ஊடகங்கள் என்பன பாவனையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தாங்கிவரும் இணையத் தளங்கள் எனலாம். மிகப் பிரபலமானவை என Facebook, Facebook Messenger, Instagram, WhatsApp, Google+, Myspace, LinkedIn, Pinterest, Snapchat, Tumblr, Twitter, Viber, VK, WeChat, Weibo, Baidu Tieba, Wikia போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள், தமிழ்மொழிப் பாவனையாளர்கள் பெருவிருப்புடன் ஊறித்திளைப்பது முகநூல் எனப்படும் Facebook ஆகும். இணைய இணைப்பினைக் கொண்ட ஒரு கணினியில், ஒருவர் தாம் விரும்பிய உள்ளடக்கங்களைத் தாமே உருவாக்கி, அவற்றை உலகுடன் பகிர்ந்துகொள்ளச் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இவ்வூடகங்கள் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கக்கூடிய சாதனங்களாக இருப்பதனால்தான், பலரும் இவற்றைப் பெரிதும் விரும்புகின்றனர். இலக்கியப் பரப்பிலும் இவை கால் பதிக்கத் தவறவில்லை. படைப்பாளிகள் பலரும் தமது மூலப் படைப்புக்களை இப்போது சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இது இலக்கியத்தின் பாரம்பரிய வடிவத்தில் மட்டுமன்றி, அதன் கருத்துருவாக்கத்திலும் கணிசமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சமூக ஊடகங்களிலிருந்து இலக்கியப் படைப்புக்களைப் படிக்கும் வாசகர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப்பெருகி வருகின்றது. படைப்பாளிகள் வாசகர்களோடு உடனுக்குடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த முடிவதால் கிடைக்கும் பலாபலன்கள் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றன. முன்னர் எப்போதுமில்லாத வகையில், தாம் வாசகர்களுக்கு மிகக் கிட்ட நெருங்கியிருப்பதாகப் படைப்பாளிகள் உணர்கின்றனர். வாசகர்களிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கும் காத்திரமான பின்னூட்டங்கள் தமக்கு உற்சாகமளிப்பதாகக் கூறுகின்றனர். அவை வாசகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்தறிய உதவுவதுடன், அவற்றிற்கேற்ப தமது படைப்புக்களை அவ்வப்போது இற்றைப்படுத்தி மாற்றியமைக்கவும், புத்தாக்கம் செய்யவும், செவ்விதாக்கம் செய்யவும், இதனால் தமது எழுத்தாற்றலை மென்மேலும் மேம்படுத்தவும் முடிவதாகக் குறிப்பிடுகின்றனர். இந்த நேரடித் தொடர்பாடலாலும் உறவாடலாலும் படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த பாரம்பரியத் தடைச்சுவர் தற்போது தகர்ந்துவிட்டதாகக் கருதும் இவர்கள், பாரிய செலவுகளேதுமின்றித் தமது படைப்புக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லச் சமூக ஊடகங்கள் உதவுவதாகத் தெரிவிக்கின்றனர். காத்திரமான விமர்சனங்கள், கருத்தாடல்கள் என்பன ஊடாக, வாசகனும் படைப்பாளியும் கூட்டாக இணைந்து படைப்பின் தரத்தை மேம்படுத்த முடிகின்றது என்றும், ’நான் என்றிருப்பதைவிட நாம் என்றிருப்பது எப்போதும் ஒருபடி உயர்ந்ததுதானே’ என்றும் இவர்கள் கருதுகின்றனர்!

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 330: கே.எஸ்.எஸ் சிவகுமாரனின் நூல்கள் மூன்று பற்றி….

கே.எஸ்.எஸ் நூல்கே.எஸ்.சிவகுமாரன்கே.எஸ்.சிவகுமாரனின் ‘ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை’ (ஜீவநதி பதிப்பக வெளியீடு), ஈழத்து உளவியற் சிறுகதைகள் (மணிமேகலை பிரசுர வெளியீடு) மற்றும் ‘அருமையான ஆளுமைகளும், சுவையானமதிப்புரைகளும்’ (மணிமேகலை பிரசுர வெளியீடு) ஆகிய மூன்று நூல்களையும் நண்பர் காலம் செல்வத்திடமிருந்து இன்று பெற்றுக்கொண்டேன். நூல்களைக் கொண்டுவந்து சேர்ப்பித்தற்காக அவருக்கு நன்றியினை இத்தருணத்தில்தெரிவித்துக்கொள்கின்றேன். சிறுகதை நூல் தவிர ஏனைய நூல்களிரண்டும் கே.எஸ்.எஸ் அவர்களின் பல்வேறு புத்தகங்கள் பற்றிய, அவர் இரசித்த ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஜீவநதி பதிப்பகம் நூலினை மிகவும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. நூலினை ஒரு மூச்சில் வாசிக்க வேண்டுமென்ற அவாவினைத் தூண்டுகின்றது. 73 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் சிறந்ததோர் ஆவணம். இந்நூலினைப்பார்த்தபோது ஒரு சிந்தனையோடியது. இதுவரை கே.எஸ்.எஸ் அவர்கள் எழுதிய நூல்கள், எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரு பெருந்தொகுப்பாக இது போன்றதொரு சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டால் அதுவோர் சிறப்பான ஆவணமாகவிருக்கும்.

ஜீவநதி வெளியீடாக வெளியான ”ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை” நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தபோது உடனடியாகத் தோன்றிய எண்ணம் இந்நூலில் விடுபட்டவர்கள் பற்றிய கட்டுரைகள். ஈழத்துச் சிறுகதைகளும் , ஆசிரியர்களும் ஒரு பன்முகப்பார்வை என்றிருப்பதால் அப்பன்முகப்பார்வையில் தவிர்க்கப்பட முடியாத பலர் தவிர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. தொகுப்பு கே.எஸ்.எஸ் அவர்கள் 1962 – 1998 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அக்காலப்பகுதியில் கே.எஸ்.எஸ் மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி எழுதாமலிருந்திருக்கலாம். அல்லது எழுதியிருந்தாலும் தொகுத்த ஜீவநதி பதிப்பகம் அவற்றைக் கவனத்திலெடுக்காமலிருந்திருக்கலாம்.

2. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் வெளியான தொகுப்புகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் தொகுப்புகள் இக்காலப்பகுதியில் வெளிவராதிருக்கலாம். ஆனால் இக்காலப்பகுதியில் ஈழத்துப்படைப்பாளிகள் எழுதிய அரிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகள் பல வெளியாகியுள்ளன.. அவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் பல உள்ளடங்கியுள்ளன. அத்தொகுப்புகளைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்பட்சத்தில் தவிர்க்கப்பட்டவர்களின் தொகுப்புகள் வெளிவராதிருக்கும் பட்சத்தில் கூட நினைவு கூரப்பட்டிருப்பார்கள். மேலும் தொகுப்பில் நீர்வை பொன்னையன் சிறுகதைகள் பற்றிய இரு கட்டுரைகள் இடம் பெற்று:ள்ளன. இதுபோலவே காவலூர் ஜெகநாதனின், செ.யோகநாதனின், யோ.பெனடிற்பாலனின், கோகிலா மகேந்திரனின், சுதாராஜின் சிறுகதைகள் பற்றி ஒன்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதற்குப்பதில் அவர்களைப்பற்றி ஒவ்வொரு கட்டுரையும், பதிலாகப் பிற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரைகளும் வெளிவந்திருக்கலாம். அதே சமயம் ‘மட்டக்களப்புப் பிராந்தியப் பேச்சு வழக்கின் கதை’ கட்டுரை தொகுப்பொன்றிலில்லாத படைப்பாளிகளின் சிறுகதைகளைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.

Continue Reading →

வாசிப்பும்,, யோசிப்பும் 329: கலை , இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் நினைவாக மின்னஞ்சல்கள் சில..

வெங்கட் சாமிநாதன்‘பதிவுகள்’ இணைய இதழ் எனக்குப்பல நன்மைகளைச் செய்துள்ளது. சமகாலத் தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்தது. அவர்களில் முக்கியமானவர்களிலொருவர் அமரர் கலை, இலக்கிய விமர்சகரான திரு.வெங்கட் சாமிநாதன்.’ பதிவுகள்’ இணைய இதழில் மதிப்பும், என் மேல் அன்பும் வைத்திருந்தார். அவரைப்போன்றவர்களுடனெல்லாம் தொடர்புகளை இணையம் , குறிப்பாக ‘பதிவுகள்’ இணைய இதழ் ஏற்படுத்தித்தந்தது என் அதிருஷ்ட்டமே.

அவர் பல வருடங்களாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத்  தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டேயிருந்தார். உண்மையில் அவர் இறக்கும் வரையில் அனுப்பிக்கொண்டேயிருந்தார் என்பேன். அக்டோபர் 20 2015 அவர் மறைந்தார். மறைவதற்கு முன் அக்டோபர் 18, 2015 அன்றும் அவர் பதிவுகள் இணைய இதழுக்குத் தன் கட்டுரையை அனுப்பியிருந்தார். அத்துடன் அவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்தான் கீழுள்ளது:

– Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Oct. 18, 2015 at 12:47 a.m.
அன்புள்ள ஆசிரியருக்கு, இத்துடன் ஒரு நீண்ட பேட்டியை முன்று பகுதிகளாக்கி அதனை மீண்டும்  உங்கள் சௌகரியத்திற்காக முன்று அங்கங்களாக்கி,. உங்களுக்கு அனுப்பும் சௌகரியத்திற்காக மூன்றாக அனுப்பியிருக்கிறேன் . நீ​​ங்கள் இந்த மூன்றையும்  இணைத்து ஒன்றாக்கிக்கிக் கொள்ளுங்கள்.

அன்புடன்
வெசா –


பல வருடங்களாக அவரைப்போன்ற பலர் எழுதிய மின்னஞ்சல்கள் பல பல்வேறு கணினிகளில் புதையுண்டு கிடக்கின்றன. அவ்வப்போது கணினிகளை மாற்றுவதால் ஏற்பட்ட விளைவு. மீண்டுமொருமுறை அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டும். அமரர் வெ.சா அவ்வப்போது எனக்கனுப்பிய மின்னஞ்சல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். மின்னஞ்சல்கள் குறுகியவையாக இருந்தாலும் அவை என்னைப்பொருத்தவரை முக்கியமானவை. பதிவுகள் மீதான அவரது மதிப்பினையும், என் மீதான அவரது அன்பினையும் வெளிப்படுத்துபவை.

Swaminathan Venkat <vswaminathan.venkat@gmail.com>
To:ngiri2704@rogers.com
Apr. 23, 2009 at 8:14 a.m.
thank you. I see you are flush with such abundance of contributions that you are not able to cope with it, an enviable position of course.  I wish you the same success throughout.  Yesterday evening I met a friend from Singapore who said that he has been closely following what I write in Pathivukal.  It was then I thought, I must remind you of the position.

thank you,
swaminathan

Continue Reading →