ஆய்வு: சென்ரியு கவிதைகள்

ஆய்வு: சென்ரியு கவிதைகள்தமிழ் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புதுப் மாற்றங்களைப் பெற்று வருகின்றது. ஹைக்கூ கவிதை வடிவத்திலிருந்து பிரிந்து சப்பானில் மாபெரும் கவிதைவடிவமாகச் சென்ரியு கவிதைகள் வளர்ச்சி நிலை அடைந்துள்ளன. இக்கவிதை வடிவமானது, தமிழில்  புதிய கவிதை வடிவமாக  தோற்றம் பெற்று தொடக்ககால வளர்ச்சி நிலையினை அடைந்துள்ளது. ஆகையால், எந்த ஒரு இலக்கியத்தை  எடுத்துக்கொண்டாலும் அதற்கான தோற்றம், வரலாறு மற்றும்  அறிமுகம் இன்றியமையாதது. ஆகையால், தமிழில் சென்ரியு கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து  சென்ரியு சொற்பொருள் விளக்கம், சென்ரியு கவிதையின் தோற்றம்,  காரை சென்ரியு வரலாறு,  சென்ரியு வரையறை, ஹைக்கூ சென்ரியு வேறுபாடு,  சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலை ஆகிய தலைப்புகளின் வாயிலாகக்  காணலாம்.

சென்ரியு சொற்பொருள் விளக்கம்
சென்ரியு கவிதை ஜப்பானிய இலக்கிய வடிவமாகும். மானுடம் சார்ந்த சமூகம், பொருளாதாரம், அரசியல், மனித நடத்தை என உண்மை நிகழ்வை நகை உணர்வு தோன்ற வெளிப்படுத்துவது சென்ரியு கவிதையாகும். சென்ரியு என்னும் பெயர் காரை ஹச்சிமோன் என்னும் கவிஞரின் புனைப்பெயராகும். இவர் கி.பி 18ம் நூற்றாண்டில் இக்கவிதை  இலக்கியத்தை அறிமுகம் செய்தார். பின்னர், கவிஞரின் புனைப்பெயரே  இக்கவிதை  வகைகளுக்குப்  பெயராயிற்று.  சென்ரியு என்னும் சொல்லானது சப்பானிய மொழியில் ஆற்றோரத்து வில்லோ மரம் என்று பொருள் தரும்.

சென்ரியு பெயர்க்காரணம்
மாக்கூ சுகே என்னும் முன்ஒட்டு கவிதைக்கு எழுதப்படும் தொடர் கவிதைகளை தேர்ந்தெடுப்பதில் திறம் பெற்றவராக காரை சென்ரியு விளங்கினார். ஆகையால், காரை சென்ரியு பெயரில் உள்ள சென்ரியு என்னும் சொல்லே இக்கவிதைகளுக்குப் பெயராக வழங்கப்படுகின்றது. இதனையே வில்லியம் ஜெ.ஹிக்கிசன் என்பவர் தனது  ஹைக்கூ பருவங்கள் என்ற நூலில் சென்ரியு பெயர்காரணத்தைப் பற்றி பின்வறுமாறு கூறுகிறார். ‘சென்ரியு என்பது ஒருவருடைய இயற்பெயர் என்றும் அப்பெயரே இவ்வகை கவிதைக்கு  பெயராயிற்று ’1 என்று கூறுகிறார்.

Continue Reading →

சிறுகதை: போர்வை

எழுத்தாளர் அகஸ்தியர்– எழுத்தாளர் அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் அனுப்பிய சிறுகதை. மின்னஞ்சல்களுக்குள் மறைந்து தவறிவிட்டதை இன்று கண்டுணர்ந்தோம். -பதிவுகள் –


இவன் தற்காலத்து நாகரிகப் பையன். ஆனால், யாழ்ப்பாண  வைதீகப் பிடிப்பு இறுக்கம். சமய ஆசாரங்கள்,  விளையாட்டு வினோதங்கள், கோயில் திருவிழாக்கள் என்று  நிகழ்ந்தால் நாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக இவன்  கண்ட அரசியல் ஞானம். இளம் சந்ததியான இவனுக்கும்  பழம் முத்துப் பாட்டியே ஞானக்குரு. 

‘இந்தா ரண்டரையாகுது….’

சுரேஷ் மனசுள் லேசான கீத சுகம் நீவிற்று. சோர்ந்த உடல் சுரீரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி ‘வார்ச்’ பார்க்க, முகத்தில் குதூகல மையல் பம்மிய ஆனந்த பரவசம்.

‘இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கு’

‘சேவையர் சூட்’ அவன் கையில் அவசரகோலமாகியது. ‘ஹங்கரில்’ கொழுவினான். ‘பாத்றூம் பேஷன் பைப்’ திறந்து சாடையாக முகம் அலம்பி, துவாய் எடுத்துப் பறதியாகத் துடைத்த பின், ‘சிவில் சேட்’, ‘ஜக்கற்’, ‘சூஷ்’ மாட்டினான்.

‘இனி வெளிக்கிடுவம்’

அடுக்குப் பண்ண, ‘பத்ரோன்’ இவன் எதிரே ருத்திரசர்மன் மாதிரி ‘றெஸ்ரோறன்’ சாலைக்கு வெளியே நிற்கின்றான்.

அவன் முகத்தில் மலர்ச்சி ததும்பும் சிரிப்புக் கவியவில்லை. கண்களில் அக்கினி கக்கிற மின்னல். சாந்தமான முகபாவம் தேங்கிய போதும், ‘விறுமசத்தி’ சாடை பத்ரோன் முகம் ‘சப்’பென்று இருக்கிறது.

தன்னுள் சுரேஷ் ‘கறுமுறு’த்தான் :

‘உவன் பத்ரோன் நெடுகலும் உப்பிடித்தான்’

பரவச நிலை குலைந்து நிற்கையில் நெஞ்சு நீவி ஒரு பெருமூச்சு. இவனை மீறிக் குதறிப் போயிற்று.

‘வெளிக்கிட்டாச்சு, மெல்லமா நடையைக் கட்டுவம்’

மனசு கிளர்த்திற்று : ஓர் இடறல்.

‘பொன்ஸர்’ சொல்லுவமா, விடுவமா?’ புருவம் நெருட, கண நேர யோசினை. பத்ரோன் பார்வை ‘இதமாக’த் தோணுவதாயில்லை.

Continue Reading →

கவிதை: பூமித் தாயைக் காப்போம்….!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

கோடி ஆண்டுகளாய் சுழலுகின்ற பூமி
கொட்டிக் கிடக்கின்ற பிணிகளோடு இன்று…

நாம் அவளைத் தோண்டினோம் – வளங்கள் தந்தாள்!
அவளைக் காயப்படுத்தினோம் – தாயாய் நின்றாள்!
நெஞ்சைப் பிளந்தோம் – நீராய் வந்தாள்!
நேசத்தை வார்க்கின்ற வேராய் வந்தாள்!

அவளே நமக்கு கருவறை – கல்லறையும் அவளே!
அவள் மடி இருக்கும் வரை – அநாதை என்பதே இல்லை!
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் இருந்தும்
அவள் நிற்பதோ ஆதரவற்றவளாய்…

மரங்கள் அவளது ஊமைச்சேய்கள்…
நதிகள் அவளது இரத்த ஓட்டங்கள் – அவளது நிலை
கண்டு வானம் கூட தன் வற்றிப்போன
கண்களால் எப்போதாவது மழையாய் அழுகிறது!

Continue Reading →

கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. கொலைக்கருவிகளோடு மணந்துநிற்கும் பூ

காமமதம் பிடித்த
யானைப்பெண்
கொம்புகள் இரண்டோடு
விழிவேல் நோக்கில்
இதயம் பிளந்து ஒழுகும் குருதிவெள்ளத்தின் துளியொன்று  எதிர்பார்ப்போடு

அன்பெனும் காமவெள்ளத்தில்
அடித்து நொறுக்கப்பட்டது நானென்றாலும்
வாழ்ந்திருப்பது காதல்தான்
இன்னோர் ஆன்மாவின் ரத்தம்
குடிக்க தீராத மோகத்தோடு
அவளும் அவள் நிமித்தமும்

Continue Reading →

– பா வானதி வேதா. இலங்காதிலகம் கவிதைகள்!

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

1. சங்கில் சதிராடும் சாகரம்

இங்கிதமாய் இதயம் மேவி
அங்கீகரிக்கும் ஆனந்த வெளிப்பாடு
பொங்கிப் புரளும் துன்பத்தால்
பங்கமுறும் காய வெளிப்பாடு
தங்காது முகிழ்த்தலே கவிதை!
பொங்குதலே கவிதை வீச்சு!
எங்கும் விசிறும் விதை
சங்கில் சதிராடும் சாகரம்.

2. கடல் வண்ணம்

பார்! கடல் சிறகெடுத்து
ஊர்கோலம் போகிறது. நீராவியாகி
நீர் வானம் ஏகுகிறது.

Continue Reading →

கவிதை: கழுவேற்ற வேண்டும் !

பொள்ளாச்சி என்றவுடன் வந்துநிற்பார் மகாலிங்கம்
வள்ளலாய் அவரிருந்து வாரியே வழங்கிநின்றார்
தெள்ளுதமிழ் நூல்படைப்பார் சிறந்தபக்தி நூல்படைப்பார்
நல்லபடி வாழ்வதற்கு அள்ளியே அவர்கொடுத்தார்

மகாலிங்கம் எனும்பெரியார் வாழ்ந்ததனால் பொள்ளாச்சி
மக்களிடம் பேரூராய் புகழ்பெற்று விளங்கியதே 
இனிமைநிறை இளநீரை கொடுத்துநின்ற காரணத்தால் 
எல்லோரின்  மனத்தினிலும் நின்றதுவே பொள்ளாச்சி

பொள்ளாச்சி எனும்பெயரை இப்போது  உச்சரிக்க
பொறுக்காத வெறுப்புத்தான் மேலோங்கி வருகிறது
நல்லவர்கள் வாழ்ந்தவிடம் நலனழிந்து நிற்பதனால்
நாடெல்லாம் பொள்ளாச்சி பேச்சுத்தான் எழுகிறது

செல்வாக்கு மிக்கவரும் செல்வமுடன் இருப்பாரும்
நல்வழியை விட்டுவிட்டு தம்வழியில் செல்லுகிறார்
பொல்லாத செயலையவர் பொறுப்பென்றே மனதிருத்தி
தொல்லையினை கொடுப்பதையே சொர்க்கமாய் எண்ணுகிறார்

வாழவெண்ணும் மங்கையரை மயக்கமொழி பேசியவர்
வாழ்விழக்கச் செய்துநிற்கும் வலைவிரித்தே நிற்கின்றார்
ஏழ்மைநிலை தனையவரும் சாதகமாய் ஆக்கிநின்று
இறுமாப்பு கொண்டபடி இன்பம் கொண்டாடுகிறார்

Continue Reading →