ஆய்வு: புராதனம் முதல் பொதுவுடைமை வரை (சமூக விஞ்ஞானக் குறிப்புகள்)

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இக்கட்டுரை சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகளின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். மார்க்சிய சமூகவிஞ்ஞானம் கண்டறிந்த சமூக முடிவுகள் மனிதகுல வரலாற்றில் முப்பெரும் பிரிவுகளாக அறியப்படுகின்றது.

1.    வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
2.    வர்க்கச் சமூகங்கள்
3.    எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற பொதுவுடைமை சமூகம்

1.வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
மனித மூதாதையர்கள் வாழ்ந்த வர்க்கங்கள் தோன்றாத சமூகம். அதாவது, தனிச்சொத்துடைமை தோன்றாத சமூகம். இதனை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்பர். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவது, உழைப்பவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியன கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.

Continue Reading →

வாழ்வை எழுதுதல் – அங்கம் 03: கண்களுக்கு இமைகள் தெரிவதில்லை ! நெஞ்சுக்குள்ளே சுமந்த பாரதியும் முதுகிலே சுமந்த சித்தரும் !!

முருகபூபதிமகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.

அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார்.

பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் மாங்கொட்டைச்சாமி என அழைக்கப்பட்ட குள்ளச்சாமி புதுச்சேரியில் அறிமுகமாகிறார். நாளரை அடி உயரமுள்ள அவருடைய ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.

வீதியோரத்தில் படுத்துறங்குவார். மண்ணில் புரள்வார். நாய்களுடனும் அவருக்கு சண்டை வரும். கள்ளும் அருந்துவார். கஞ்சா புகைப்பார். பிச்சையும் எடுப்பார். இருந்தும் அவர் துணி வெளுக்கும் தொழிலாளி. ஒரு சமயம் பாரதியிடத்தில் ” நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேல் சுமக்கிறேன்” என்றார்.

மற்றும் ஒருநாள் பாரதி, அந்தக்குள்ளச்சாமியிடம், ” ஞானநெறியில் செல்லவிரும்புபவன் எந்தத்தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும்…? ” என்று கேட்கிறார்.

அதற்கு அந்தச்சாமியார், ” முதலில் நாக்கை வெளுக்கவேண்டும், பொய், கோள், கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி என்பன கூடாது. உண்மையைத்தவிர வேறொன்றும் இந்த நாக்கு பேசலாகாது. அச்சத்தை அகற்றவேண்டும். அதற்கு மனதினுள் இருக்கும் இருளைப்போக்கவேண்டும்” எனச்சொல்லியிருக்கிறார். அதன் பிறகு,

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்…..
அச்சமில்லை… அச்சமில்லை….
மனதிலுறுதி வேண்டும்…   முதலான சாகாவரம் பெற்ற வரிகள் பாரதியிடத்தில் பிறக்கின்றன.

Continue Reading →

மனக்குறள்:28 , 29 & 30

மனக்குறள் 9 & 10

வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி

வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின்
கைகளிலே வென்றான் ஹரி !

ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ்
ஆச்சுதே மீண்டும் அரண் !

இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின்
நற்தேர்தல் சொல்லும் நலம் !

சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின்
கனடாவென் றானார் கரம் !

எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும்
நல்லோர்க் கெனவாகும் நாடு !

முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி
அள்ளுதுயர் கண்டார் அரி !

கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா
இனத்தோடும் எண்ணம் எடுத்து !

போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில்
நேர்கண்ட மாந்தன் நெறி !

ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம்
தந்துமண் கண்டான் தனம் !

மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக
எண்ணிய மாமனிதன் என்க !

Continue Reading →