துக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’

எழுத்தாளர் தேவகாந்தன்காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017 டிசம்பரில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல்  வெளிவந்த காலப்  பகுதியிலேயே நூல் கையில் கிடைத்திருந்தும் அதை வாசிக்கத் தொடங்குவதற்கு நானெடுத்த  கால நீட்சியின் கழிவிரக்கத்தோடேயே  அதை அண்மையில் வாசித்து முடித்தேன்.

இந்திய சரித்திரத்தில்   மாபெரும் நிகழ்வுகளைக்கொண்டது  மொகலாய அரசர்களின் ஆட்சிக் காலம். அதில் பதினேழாம் நூற்றாண்டு மிகவும் தனித்துவமானது. மிக ஆழமாய் இன்றெனினும் அக் காலப் பகுதியின் சரித்திரம் வாசகனின் அறிதலில் தவறியிருக்க வாய்ப்பில்லை.  வெகுஜன வாசிப்பில்  பெரிதும் பேசப்பட்ட அனார்க்கலி – சலீம் காதல் அக்பர் கால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டது.  தீவிர வாசகர்களின் கவனத்தையும் அக்பர் காலம் வேறு காரணங்களில் வெகுவாக ஈர்த்திருந்தது. அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜகான் ஈறாக ஐந்து பேரரசர்களின் ஆட்சிபற்றிய விதந்துரைப்பில்லாத மொகலாய சரித்திரம் அதுகாலவரை எழுதப்பட்டிருக்கவில்லை; கதைகளும் தோன்றியிருக்கவில்லை. அத்தகு காலக் களத்தில் கதை விரித்த நாவல் ‘பெருவலி’.

இரண்டு பாகங்களாய் 167 பக்கங்களில் அமைந்த  இந் நாவலின் முதலாம் பாகம் ஷாஜகானின் ஆட்சியை மய்யப்படுத்தியது. அன்றைய அரசியல் நிலபரம் விளக்கமாகும்படி அக்பர் முதற்கொண்டு தொடர்ந்த பேரரசர்களின் ஆட்சியும், வாழ்வும்பற்றி அளவான விவரிப்பை நாவல் கொண்டிருப்பினும்,  அது ஷாஜகான் – மும்தாஜின் முதிர் காதலுக்கு குறிப்பாய் அழுத்தம் தந்திருக்கும்.

தக்காணத்து அரசதிகாரியாயிருந்த   ஷாஜகான் (அப்போது குர்ரம்) பதவியிலிருந்து நீக்கப்பட்டு அங்கேயே நிஜாம்சாஹியென்ற இடத்தில் தங்கவைக்கப்படுகிறார். அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தல்களுடன் கதை அங்கிருந்துதான் ஹிஜ்ரா பானிபட்டின் பார்வையிலிருந்து  ஆரம்பிக்கிறது. கதைசொல்லியும் அவ்வப்போது அவனை இடைவெட்டி கதையை நகர்த்திச் செல்வார். எவரது பார்வையிலிருந்து கதை விரிகிறதென்ற மயக்கம் வாசகனுக்குத் தோன்றாதபடி கதையை நகர்த்தும் படைப்பாளியின் சாதுர்யம் சிறப்பு. நாவலில் ஒரு மீள்பார்வை நிகழ்கிறபோதுதான் இந்த கதைசொல்லிகளின் மாற்றம்கூட வாசகனுக்குப் புலனாகிறது.

Continue Reading →

ஊடகவியலாளர் எஸ்.திருச்செல்வம்!

ஊடகவியலாளர் எஸ்.திருச்செல்வம்!- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -பத்திரிகையாளர்கள் ஐம்பது ஆண்டுகால தொடர் சாதனையைச் சாதிப்பது என்பது அபூர்வமான ஒரு விஷயம் அல்ல. ஆனால் திருச்செல்வம் என்ற ஒருவரின் ஐம்பது ஆண்டு கால பத்திரிகைச் சாதனை என்பது அபூர்வமானதுதான். அசாதாரணமான சாதனைதான். அரசபடைகளும், அந்நிய படைகளும், விடுதலைக் குழுக்களும் கொடூரமாக மோதிக்கொண்ட ஒரு கால கட்டத்தில் கோரமான ஒரு யுத்த சூழலில் தினமும் கணமும் சாவு நிழல் போலத் தன்னைச் சூழவரும் நிலையில் ஒரு பத்திரிகையாளனாக வாழ்வதென்பது சாதனைதான்.

ஈழநாடு, தினகரன் ஆகிய பத்திரிகையில் பத்திரிகையாளராக தன் தொழிலை ஆரம்பித்த திருச்செல்வம் அவர்கள், இந்திய அமைதிப்படைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த காலப்பகுதியில் ஈழமுரசு, முரசொலி ஆகிய ஆகிய பத்திரிகைகளின் ஸ்தாபன ஆசிரியராகவும்,  முரசொலியின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிந்த காலங்கள் ஈழத்துப் பத்திரிகை வரலாற்றில் நின்று நிதானித்துச் செல்லவேண்டிய காலப்பகுதிகளாகும்.

1986ஆம் ஆண்டில் முரசொலி அதன் இரண்டாவது ஆண்டை எட்டியபோது பதினாராயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன என்பது ஈழத்தின் பிரதேச சஞ்சிகை ஒன்றின் சாதனையாகும்.

உலகின்  பத்திரிகையாளர்களுக்கு ஆபத்துக்களில் மலிந்த அபாயகரமான நாடுகளில் ஒன்றாக இலங்கை பிரபலம் பெற்றிருந்த நேரம் அது. சிங்களப் பத்திரிகையாளர்களும் அரசாங்கத்தின் அராஜகங்களுக்கு இரையாகினார்கள் என்றாலும் தமிழ் பத்திரிகையாளர்கள் பெருந் தொகையில் தம் உயிரைப் பலியிட நேர்ந்தது.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியா அமைதி காக்கும் படையினர் முரசொலிப்;பத்திரிகை அலுவலகத்தையும் ஈழமுரசு பத்திரிகை அலுவலகத்தையும் குண்டு வைத்துத் தகர்த்த நிகழ்வு,  உலகின் பத்திரிகை வரலாற்றின் கறை படிந்த பகுதியாகும்.

Continue Reading →

சிறுகதை: ‘அன்னக் குட்டி’

ஶ்ரீராம் விக்னேஷ்எனக்கு  நல்லா  நினைவிருக்கு….., இருவத்தஞ்சு  வரியமாகுது….   தைப்பொங்கல் கழிஞ்சு  மற்றநாள்  மாட்டுப்பொங்கல்  அண்டைக்குத்தான்  எங்கடை  அன்னக்குட்டியும்  பிறந்தது.

“அன்னக்குட்டி…….”

ஓமோம்….   நான்  அப்படித்தான்  கூப்பிடுவேன்.

அன்னக்குட்டியிலையிருந்து  நான் பத்து  வயது  மூப்பு.  என்னோடை  கூடப்பிறந்த  பொம்பிளைபிள்ளையள்  ஒருத்தரும்  இல்லையே எண்டதாலையும் , அது  என்ரை  அம்மம்மா  யாழ்ப்பாணத்திலையிருந்து ஆசையாய்  வாங்கி  அனுப்பிவிட்ட  மாட்டின்ரை  முதல்  பசுக்கண்டு  எண்டதாலையும்,  அன்னலச்சுமி  எண்ட  அவ பேரை  வைச்சோம். என்னைப் பொறுத்தமட்டிலை,  அன்னக்குட்டி  எங்கடை குடும்பத்திலை  ஒருத்தி. என்ரை  தங்கச்சி…..!

“அன்னக்குட்டி …..  அண்ணை  பள்ளிக்குடம்  போட்டு  வாறன்…. நீ  அம்மாட்டை  பால்குடிச்சிட்டு  நல்லபிள்ளையா  பேசாமல்  இருக்கவேணும்  தெரியுமோ….. துள்ளிப்பாஞ்சு  விளையாடுறோமே  எண்டு  நினைச்சுக்கொண்டு  கிணத்தடிப்பக்கம்  போவுடாதை…. சரியோ…. கிணத்துக்கை  ஒரு  கிழவன்  இருக்குது…. உன்னைப் பிடிச்சுப்போடும்….”

பள்ளிக்குடம்  போகத்  துவங்கிறத்துக்கு  முதலெல்லாம், என்ரை அம்மாவும்  இப்பிடித்தான் என்னட்டையும் அடிக்கடி சொல்லிச் சொல்லி வெருட்டிறவ….

நானும்  அதுமாதிரிச்  சொல்லிக்கில்லி  வெருட்டி வைக்காட்டா, உது  சும்மா  கிடக்காது  கண்டியளோ….

பள்ளிக்கூடத்தில  இருக்கையுக்கையும்  அன்னக்குட்டியின்ரை  நினைவுதான்…..

வீட்டுக்கு  வந்தாலும், நேரா கொட்டிலுக்குப்  போய், பத்து  நிமிசமாவது  அன்னக்குட்டியோடை  கதைச்சுப்போட்டுப்  போனாத்தான்  எனக்குப்  பத்தியப்படும்….

Continue Reading →