சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை!

சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனம்  ‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’ கவிதைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகளைத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் மாலன்.

Continue Reading →

கண்ணீர்த்தீவின் எதிர்காலம்?

இலங்கைத்தீவுபுதிய ஜனாதிபதியாக நந்தசேன கோத்தபாயா ராஜபக்‌ஷ இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து நடைபெறும் செயல்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய பல்வகை வினாக்களை எழுப்புகின்றன. நாட்டின் எதிர்காலம் பற்றிய முதலாவது அச்சம் நாடு எவ்வகையான ஆட்சியமைப்பை நோக்கிச் செல்கின்றது என்பதையிட்டுத்தான். 2015இல் நடைபெற்ற ஜனாதிபதி ஆட்சியின்போது எதிர்பாராதவிதமாக மகிந்த ராஜபக்‌ஷா தேர்தலில் தோல்வியுற்றபின்னர் தன் தம்பியான கோத்தபாயா ராஜபக்சவுடன் இணைந்து நாட்டின் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு ஆட்சியில் நீடிக்கச் செய்த சதி வெற்றியளிக்கவில்லை. முப்படைத்தளபதிகளும், காவல்துறைத் தலைவரும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் அச்சமுற்ற மகிந்த ராஜபக்‌ச அவசர அவசரமாக, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடமுன்னரே, ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து அவருடன் பாதுகாப்பாக வெளியேறியதாக ஒரு செய்தி இலங்கை அரசியலில் அடிபடுகின்றது. அதில் பாடம் படித்த மகிந்தவும், கோதபாயாவும் எதிர்காலத்தில் அவ்விதமானதொரு நிலை தோன்றக்கூடாது என்பதில் உறுதியான நோக்கில் இருப்பதுபோல் தெரிகின்றது.

தற்போதுள்ள அரசியல் சூழலில் இன்னும் நீண்ட காலம் இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக் கட்டில் இருக்கப்போகின்றனர். அவ்விதமிருந்து இவர்கள்மீது அதிருப்தியுற்று மக்கள் முன்புபோல் தேர்தலில் தோல்வியுற வைத்தாலும் கோத்தபாயா ஆட்சியிலிருந்து இறங்கப்போவதில்லை போல்தான் தோன்றுகின்றது. அடிப்படையில் அவர் அரசியல் தலைவரல்லர்.இராணுவத்தளபதி. அதனால்தான் பதவிக்கு வந்தவுடனேயே இராணுவத்தினரின் கைகளில் பாதுகாப்பைக் கொடுத்திருக்கின்றார். இதனால் ஏற்படும் முக்கிய நன்மைகள்: காவல்துறையினரின் முக்கியத்துவம் குறைகின்றது. காவல்துறையின் புலனாய்வுப்பிரிவின் படையினர் மீது புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை. ஏற்கனவே அவ்விதம் விசாரணைகளை முன்னெடுத்தவர் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading →

அனைவரையும் நினைவு கூர்வோம்!

இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்னும் நிலையிலிருந்து வேறொரு கோணத்தில் பயணிக்கின்றது. 2009இல் ஆயுதப் போராட்டம் பேரழிவுடன், பாரிய மனித உரிமை மீறல்களுடண் முடிவுக்கு வந்தது. ஆயுதப் போராட்டக் காலத்தில் இலங்கையில் பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டன. இலங்கைப்படையினருக்கும் , போராளிகளுக்குமிடையிலான மோதல்களில் போராளிகள், பொதுமக்கள், படையினர் எனப் பலரும் அழிந்தனர். சிறைகளில் அடைக்கப்பட்டனர். பல்வேறு வதைகளுக்கு உள்ளாகினர். இலங்கை அரசு பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தியதால் இனங்களுக்கிடையிலான கலவரங்கள், மோதல்கள் அழிவுகளைத் தந்தன. தற்போது அந்நிலையினைத் தாண்டி இன்னுமொரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

இக்காலகட்டத்தில் கடந்த கால வரலாறானது பக்கச்சார்பற்றுப் பதியப்படுவதுடன், நினைவு கூரப்படவும் வேண்டும். ஏற்பட்ட அழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்க வேண்டும். தமிழ் அரசியல் அமைப்புகள் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு இருந்தாலும், இவ்விடயத்தில் ஒன்று பட்டுச் செயற்படலாம். எதிர்காலத்தில் இவ்விதமாகப் பல்வேறு விடயங்களில் ஒன்றுபட்டு இயங்குவதற்கு இதுவோர் ஆரம்பமாக இருக்க உதவும். வரலாறானது பக்கச்சார்பற்று அணுகப்பட வேண்டுமென்பது எதனை வெளிப்படுத்துகின்றது? அனைத்து அமைப்புகளும் தமக்கிடையில் நிலவிய முரண்பாடுகள் காரணமாகப் பல்வேறு சார்பு நிலைகளை எடுத்தன. பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன. இயக்கங்களின் வதை முகாம்களில் பலர் வதைக்கப்பட்டனர். அதே சமயம் இடம் பெற்ற யுத்தத்தினால் மாந்தர்கள் பலரும் பேரழிவுகளுக்குள்ளாகினர்.

Continue Reading →

ஆய்வு: நீலகிரி – தோடர் இன மக்களின் வாய்மொழி வழக்காறுகள்

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நீலகிரி மாவட்டம் ஒரு பன்மயக் கலாச்சார மையம். உலகத் தொல்குடிகளுள் குறிப்பிடத்தகுந்தவர்களின் வாழ்விடம் இது. இவர்களுள் தோடர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இதுவரை நடைபெற்றுள்ள நீலகிரிசார்ந்த பழங்குடிகள் ஆய்வுகளுள் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இனக்குழுச் சமூகமாக விளங்குகின்றது தோடர்கள் எனும் ஆயர்ச்சமூகம். சங்ககாலம் தொட்டு உற்பத்திப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கத்தினர் ஆயர்கள். முல்லை நிலத்தினை தம் வாழ்வியல் களமாகக் கொண்டு வாழ்ந்த ஆயர்கள் ‘இருத்தல்’ எனும் தம் நிலத்திற்குரிய உரிபொருள்சார் ஒழுக்கத்தினைத் தம் வாழ்வோடு உட்செறித்தவர்கள். ஆயன், ஆய்ச்சியர், இடையன், இடைச்சியர், கோவலர் என்ற பெயர்களை உடைய முல்லைநில மக்கள் தம் பெயரமைப்பினைக் கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். அஃறிணை உயிரிகளின் முக்கியவத்துவத்தினை உணர்ந்து, அதன்மீது தன் அன்பினையும், பண்பினையும் கட்டமைத்து, வாழ்வியல் மற்றும் பொருளாதார நிறைவினை அடைந்தவர்கள் ஆயர்கள். நீலகிரியில் வாழ்கின்ற தோடர்களும் மிகச்சிறந்த ஆயர் சமூகம் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

நில அமைப்பிற்கேற்பவும், தம் தொழில் மற்றும் வாழ்முறைச் சார்ந்து தத்தம் வாழிடத்தினைத் தகவமைத்துக் கொண்ட நீலகிரி மாவட்ட மக்களுள் மலையின் உச்சியில் தோடர்கள் வாழ்கின்றனர். உலகிலேயே 5500 அடிகள் உயர மலைப்பகுதியில் சைவ உணவை உண்டுவாழும் ஆயர்குடி தொதவர்கள் மட்டுமே (பக்தவச்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள், ப – 141). தோடர்கள் நீலகிரியில் வாழ்கின்ற மக்களால் ‘தொதவர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் பெயர்க்காரணம் குறித்து நோக்கும்போது மூன்று வகையான விளக்கங்கள் நமக்கு நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன. இதில் முதன்மையானதாக ‘பண்டையில் மன்னர்களால் தூதுவராக இங்கு அனுப்பப் பட்டவர்கள் நாங்கள். எனவே தூதுவா என்பது தொதவா என்று மருவி இன்று வழங்கப்பட்டு வருகின்றது’ என்கிறார் கோடநாடு மந்துவினைச் சார்ந்த  தோடர் கொட்டாட குட்டன்.

Continue Reading →