கவிதை: திருமண இன்னிசை வாழ்த்து – எட்மண்ட் ஸ்பென்ஸர்

- எட்மண்ட் ஸ்பென்ஸர் ( Prothalamion – Edmund Spenser ) | தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி -

- ஆர். தாரணி -

16 – ம் நூற்றாண்டின்,  இங்கிலாந்து ராணி  முதலாம் எலிசபெத்  அவையின் கீர்த்திமிகு நடு நாயகமாய் விளங்கிய ஆங்கிலக்கவி எட்மண்ட் ஸ்பென்ஸர், பதினான்கு வரிகளில் இயற்றும் சானெட் (Sonnet)  என்னும் பாட்டு வகையில் இயற்றிய காதல் பாடல்கள் (Amoretti) உலகப்புகழ் பெற்றவை. அது போன்றே, உயர்குலத்தை சார்ந்த லேடி எலிசபெத் மற்றும் லேடி காதரின் என்னும் இரு அழகிய இளம்பெண்களின் திருமண நிகழ்வுக்காக அவர் இயற்றிய இந்த  வாழ்த்துப்பா  மணமக்களை இரு அழகிய அன்னங்களாக்கி, திருமண நிகழ்வை வரவேற்கும் இனிய பாடலாக மட்டும் அல்லாது கண்ணுக்கினிய வர்ணங்களை கற்பனையில்  குழைத்து, வர்ணத்தூரிகை கொண்டு வரைந்த சித்திரக்காட்சிகள் போல பலவித நிறங்களை இயற்கையோடு இணைத்து வழங்கியுள்ள  பாணி இன்றளவும் யாரும் எட்டிப்பிடிக்க இயலா இனிமையாக மிளிர்கிறது என்றால் மிகையாகாது.

கவிதை: திருமண இன்னிசை வாழ்த்து – எட்மண்ட் ஸ்பென்ஸர் ( Prothalamion – Edmund Spenser ) | தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி

சலனமற்று “சிலிர்ப்பூட்டும் நாளொன்றின்
தென்றலின் சில்லிப்பினூடே வரும்
ஜெபெரஸ் களியாட்ட வேளையிது.

தகதக சூரியனின் கதகத ஒளிக்கற்றைகளை
இயற்கை தேவதை சோம்பலாக்க
அவளோடு இயைந்து உலவியபடியே
துயரார்ந்த சிந்தனையில் ஆழ்த்திருந்தேன்.

காலங்காலமாய் அரசவையில்
காலம் கனியா வெறுமையில்
காத்திருந்து பயனற்று சலித்துப்போன
என் மன நிறைவின்மையின் நடுவே
வெறுமை சூழ் நிழல் சிறகடிக்கிறது

Continue Reading →