ஆய்வு: புதுக்கவிதைகளில் நில மாசுபாடு

நிஆய்வுக் கட்டுரைகள்!லமென்பது மண், நீர், காற்று மண்ணில் உள்ள தாதுப்பொருட்கள் தட்வெப்பம் முதலிய இயற்கை வளங்கள் எல்லாம் நிறைந்த இயற்கைச் செல்வம். இவ்வியற்கைச் செல்வங்கள் மனிதனுக்கு உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றைத் தருகின்றன. சுற்றுச்சூழலில் நிலம் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாக உள்ளது. பூமியின் மேற்பரப்பானது வேளாண்மைப்பயிற்சி. கனிம வளங்களை வெளிக்கொண்டு வரச் சுரங்கம் தோண்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் வெளியேறுதல், நகரத் கழிவுகளைக் கண் மூடித்தனமாக அகற்றுதல் முதலிய அனைத்துக் காரணிகளாலும் மாசுபடுகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடுகளினாலும், நிலத்தில் நீர் தேங்கிவிடுவதாலும் உவர்ப்புத் தன்மையினாலும், அளவுக்கதிகமாக ஆடு, மாடுகள் மேய்வதாலும், பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்காத காரணத்தினாலும் மண் வள பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கரித்துகள், புகை, தூசி, கதிரியக்க, வீழ்பொருள் போன்றவை காற்றின் மூலம் நிலத்தில் படிகின்றன. இவை மழை நீரால் அடித்துச்  செல்லப்படுவதும் உண். இதனால் நிலம் மாசடைகின்றது. இதனை

“நிலத்தின் மாசு மற்றும் மாசாக்கிகளின்
மூலங்கள் பற்றிய ஒரு பொதுக் கண்ணோட்டம்”
(சுற்றுச் சூழலியல், ப. 32)

நிலம்:

1. திடக்கழிவு, சாக்கடை – வீடுகள்
2. திடக்கழிவு    – உள்ளுர் ஆட்சி
3. தொழிலகக் கழிவு நீர் – தொழிலகங்கள்
4. தீங்குயிரிக் கொல்லிகள,;       
வேதிய உரங்கள்- வேளாண்மை
5. உலேகாகக் கழிவுப் பொருட்கள்
தூசி, எண்ணெய் – போக்குவரத்து
6.கதிரியக்கப் பொருட்கள் பயனற்ற வெப்பம்-    அணுக்கதிர்  நிலையங்கள், அணுக்குண்டு சோதனை

என்று சியாமளா தங்கமணி சுற்றுச் சூழலியல் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு காரணிகளால் நிலம் மாசு அடையும் படிநிலைகளை கீழேக் காண்போம்.

Continue Reading →

“சமூகரீதியான போராட்டங்களில் மீட்சிக்கான கருவியாகவே இலக்கியத்தை தெரிவு செய்தேன்” -அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மெல்பன் சந்திப்பில் சல்மா

எழுத்தாளர் சல்மா ஆஸ்திரேலியாவில்“படைப்பு  இலக்கியமா -? ,   அரசியலா – ? இதில் எனது  இறுதித்தெரிவு எது ?  எனக்கேட்டால்,   படைப்பு  இலக்கியம்தான்  எனச்சொல்வேன். எனது   படைப்புக்கூடாக  சமூகத்தை  பார்க்கும்போது  தோன்றும் நெருக்கடிகளிலிருந்து  என்னைப் பாதுகாத்துக்கொள்ள  அரசியல்  ஒரு கவசமாகியது.   எனினும்,  எனது  சமூகம்சார்ந்த  பணியில் படைப்பு இலக்கியமே   இறுதித்தேர்வாக  அமையும் ”  என்று  தமிழகத்திலிருந்து வருகை   தந்திருந்த  எழுத்தாளரும்  சமூகச்செயற்பாட்டாளருமான சல்மா,    கடந்த  ஞாயிறன்று  மெல்பனில்  Mulgrave  Neighborhood House   மண்டபத்தில்   நடைபெற்ற இலக்கியச்சந்திப்பு    நிகழ்ச்சியில்  குறிப்பிட்டார்.  அவுஸ்திரேலியா    குவின்ஸ்லாந்து மாநிலத்தில்  நடைபெற்ற   Byron bay  எழுத்தாளர் விழாவில் பங்குபற்ற  வருதைந்திருந்த  சல்மா, சிட்னியில்   இரண்டு  தமிழ்  அமைப்புகள்  ஒழுங்குசெய்த   சந்திப்பு கலந்துரையாடலில்   பங்கேற்றபின்னர்  மெல்பனில்  நடந்த நிகழ்ச்சியிலும்   உரையாற்றினார்..

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் துணைத்தலைவர்   லெ.முருகபூபதி  தலைமையில்   நடைபெற்ற இச்சந்திப்பில்   மெல்பனைச்சேர்ந்த  பல  எழுத்தாளர்களும்  இலக்கிய ஆர்வலர்களும்   கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்  கலந்துகொண்டவர்கள்   சல்மாவின்  வேண்டுகோளின் பிரகாரம்   தம்மை  முதலில்  அறிமுகப்படுத்திக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து   சல்மா   பற்றிய  சிறிய  அறிமுகத்தை முருகபூபதி   வழங்கினார். சல்மா   இலக்கியப் பிரதியாளராகவும்  சமூகச்செயற்பாட்டாளராகவும் ஒரே    சமயத்தில்  இயங்கிவருபவர்.   நாவல்,  சிறுகதை,  கவிதை, பயண   இலக்கியம்  முதலான  துறைகளில்  எழுதியிருக்கும்  சல்மா தமிழ்நாடு   திருச்சியில்  பொன்னாம்பட்டி  ஊராட்சி மன்றத்தலைவியாகவும்    சமூக  நலத்துறை  வாரியத் தலைவியாகவும் இயங்கியிருப்பவர்.   ஒரு  தடவை   சட்டமன்றத்தேர்தலிலும் போட்டியிட்டவர்.    செனல்  4   தயாரிப்பில்  சல்மாவின்  வாழ்வும் பணியும்    ஆவணப்படமாகியுள்ளது.  பல  உலகப்பட  விழாக்களில் விருதுகளையும்   வென்றுள்ளது.   சல்மாவின்  படைப்புகள்  ஆங்கிலம், மலையாளம்,   மராத்தி,   ஜெர்மன்,   மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

Continue Reading →