(92) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த ஜியார்ஜின் பிரசன்னத்தை. மறந்து தான் போனேன். எங்களுடன் அவரது பிரசன்னத்தை நான் மறந்த போதிலும் அவரது பிரசன்னத்தை மாத்திரம் கவனித்தவர்கள் உண்டு. நாங்களும் அவருடன் இருப்பது அந்த ஜீவன்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது?, ஜியார்ஜி மாத்திரமே அவர்களுக்கு தெரிவது எப்படி? என்பது எனக்கும் சரி மற்ற நண்பர்களுக்கும் புரிந்ததில்லை.  அது மாலை நேரம். ஜெர்ஸகுடா ஜங்ஷனிலிருந்து சம்பல்பூருக்கு ஒரு ஷட்டில் போய்வரும் என்று சொல்லியிருக்கிறேன். அந்த ஷட்டில் சம்பல்பூர் ரோட் என்ற ஸ்டேஷன் வந்ததும் இறங்கிவிட வேண்டும். ஸ்டேஷன் வாசலில் கொஞ்ச தூரம் நடந்தால் ஹிராகுட்டுக்கோ, புர்லாவுக்கோ போகும் பஸ் காத்திருக்கும். அது மாலை நேரம் என்பது எனக்கு மிக நன்றாக நினைவில் இருக்கிறது. மாலை நேரம் என்றால் கலுங்கா ராஜ்காங்க்பூர் போய்த் திரும்பிவரும் சமயத்தில் தானாக இருக்கும். கல்கத்தாவிலிருந்து திரும்பிய சமயம் என்றால் அது காலை நேரமாக இருக்கும். ஆக இந்த ஜியார்ஜ் ஹீரோவாக வாழ்ந்த சம்பவத்தை ராஜ்காங்பூர் போய்வந்த கதையின் முடிவில் சொல்லியிருக்க வேண்டும். மறந்து விட்டேன். நினைவு வந்ததும் இப்போதாவது சொல்கிறேனே.

Continue Reading →