பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன! நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிக்குப் பாராட்டு.!

பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன! நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிக்குப் பாராட்டு.!பாரிஸ் மாநகரில் எதிர்வரும் 15 -ம் திகதி (15 – 07 – 2012 ஞாயிற்றுக் கிழமை பாரிஸ் மார்க்ஸ் டோர்முவா தேவாலயக் கலையரங்கத்தில் (50 Place de Torcy – 75018 Paris) ”இலக்கிய மாலை” நிகழ்வு சிறப்புற நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புகழ்பெற்ற தமிழகப் படைப்பாளிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம், பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன. டாக்டர் வி. ரி. இளங்கோவனின் ‘தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா”, ‘தினக்குரல்” பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்”, நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்”ää இந்திய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற எழுத்தாளர் இந்திரனின் ‘தோட்டத்து மேசையில் பறவைகள்”, இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதியின் ‘சங்கம்” நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ””Le Réveil” ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

Continue Reading →

நூல் வெளியீடு: அகாலம்-புஷ்பராணி (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்)

அகாலம்-புஷ்பராணி (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்)

அகாலம்-புஷ்பராணி (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்) 
காலம்-30-06-2012 (சனி)
மாலை 5 மணி

Continue Reading →