“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே”
என்னும் கூற்றுக்கேற்ப, அதன் பொருளை உணர்ந்து கொண்ட நிகழ்வு என் வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தமிழின் தொன்மையினை அதன் கால நிலையில், அந்தந்த காலத்தில் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் புவியின் தன்மையை உணர்ந்துகொண்டும் சூரியனை நோக்கிய பூமியின் நீள்வட்டப் பாதையில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சுழலும் நடு நிலைக் கோட்டுக்குச் சற்று அருகில் கடலை வேலியாக் கொண்டு வள்ளுவர்களும்
` மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடைய அறன்(குறள் 742)
என்னும் குறளுக்கு ஏற்றாற்போல் ஐவகைத் திணைகளைக் கொண்டும் சூரியனின் வட, தென் செலவை மையமாகக் கொண்டும் ஆண்டுக்கு ஆறு பெரும் பொழுதுகள், நாளுக்கு ஆறு சிறுபொழுதுகளைக் கொண்ட இந்த நிலத்தில் அதன் கால நிலையில் இங்குப் பேசப்பட்ட பல்வேறு நாட்டார் வழக்கினைக் கொண்ட தமிழ் மொழி, அதை உலகமெங்கும் முதன் முதலாக கடலில் சென்று திரும்பி தன் நிலத்திற்குத் திரும்பி உலகக் கடல் வணிகத்தை உருவாக்கிய திரை மீளர்கள் என்ற தமிழர்களின் வரலாற்றை (டாக்டர் கால்டுவெல் திரமிளர் என்பார்) உலகெங்கும் பேணி வரும் என்போன்றவர்களுக்கு தமிழ் நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஓர் ஐயம் 1700 ஆண்டு தமிழ் வரலாற்றில் பிற மொழிகளில் அவற்றைத் தெளிவாகக் காணமுடிகிறது.