பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்!

பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்!ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்! இந்
நானிலம் காத்திடும்
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்!

நானறிந்த வரையில் தைப்பொங்கலை ஈழத்தமிழர்கள் யாவரும் தமிழர்தம் திருவிழாவாகத்தான் கொண்டாடி வருகின்றார்கள். அவ்விதமே தொடர்ந்தும் கொண்டாடுவோம். தமிழர்தம் திருவிழாக்களில் இந்தத்தைத்திருநாள் எனக்கு மிகவும் படித்த திருவிழா என்பேன். இவ்வுலகின் உயிர்களுக்குக் காரணமான இரவியினை நோக்கி, மானுடர்தம் வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவினை அளிக்கும் உழவரை எண்ணி,  உலகு இயந்திரமயமாகுவதற்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை உழவருக்கும், அனைவருக்கும் பல்வகைகளில் உறுதுணையாகவிருந்துவரும்  மாடுகளைப்போற்றித் தமிழர் அனைவரும் (உழவருட்பட) வருடா வருடம் தம் நன்றியினைத்தெரிவிப்பதற்காகக்கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

பொங்கல் என்றதும் என் பால்ய காலத்து நினைவுகள் படம் விரிக்கின்றன. அப்பொழுது நாம் வவுனியாவில் குடியிருந்தோம். பொங்கல் அன்று முற்றத்தில் புதுப்பானையில் அதிகாலையிலேயே எழுந்து , நீராடி, அம்மா பொங்குவதும், பொங்கும் சமயங்களில் சிறுவர்களாகிய நாம் வெடிகொளுத்தி மகிழ்வதும் இன்னும் நெஞ்சினில் படம் விரிக்கின்றன. எழுபதுகளில் ஈழத்தமிழர் வாழ்வில் ஏற்பட்ட அரசியல் ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டதைத்தொடர்ந்து இவ்விதமான திருவிழாக்களில் வெடி கொளுத்துவதும் இல்லாமலாகிப்போனது. என் பால்ய காலத்து வாழ்வில் இவ்விதமான திருவிழாக்களைக்கொண்டாடி மகிழ்ந்த காலமென்றால் அது நாம் வவுனியாவில் இருந்த காலம்தான். இவ்விதமான பண்டிகைக்காலங்களில் அக்காலகட்ட நினைவுகளை மீளவும் அசைபோடுவதும் வழக்கமாகிப்போனது.

Continue Reading →