இலண்டன்: இரு நூல்களின் அறிமுகமும் ஆதிரை நாவலின் – அரசியலும் அழகியலும் பற்றிய உரையாடலும்

இலண்டன்: இரு நூல்களின் அறிமுகமும் ஆதிரை நாவலின் – அரசியலும் அழகியலும் பற்றிய உரையாடலும்

13 பெப்ரவரி 16 (சனிக்கிழமை) மாலை 4.30 தொடக்கம் 8.30 வரை
இடம்- Trinity Centre , East Avenue, Eastham, London, E12 6SG (Near the Eastham Station)

நிகழ்வு-01
நூல்களின் அறிமுகம்
* தமிழகத்தின் ஈழ அகதிகள் – தொ,.பத்தினாதன்
* இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – கருணாகரன்

உரை – எஸ்.வாசன் , கோகுலரூபன் | வழிப்படுத்தல் – ராகவன்

நிகழ்வு-02
ஆதிரை நாவலின் அரசியலும் அழகியலும்
உரை- மாதவி சிவலீலன், ஹரி இராசலெட்சுமி | ஏற்புரை- – சயந்தன் ( நாவலாசிரியர்)
வழிப்படுத்தல் – எம். பௌசர்

Continue Reading →

பெண்களின் குரலாக ஒலித்த பெண்ணியவாதி அருண். விஜயராணி !

அருண். விஜயராணிஇலங்கையில்   இலக்கியம்  பேசி  எழுதி  வாழ்ந்த  ஒருவரை அந்நியதேசத்தில்  கொண்டு  சென்றுவிட்டால்,  அது  கண்ணைக்கட்டி காட்டில்  விட்டதற்கு  சமம்  என்று  சொல்வார்கள்.  இலங்கையில் அவ்வாறு   இதழ்களிலும்    வானொலியிலும்  தனது  பெயரை ஆழமாகப்பதித்திருந்த  அருண். விஜயராணி  கணவருடன்   மத்திய கிழக்கு,    இங்கிலாந்து  என்று  பயணித்து  இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு   வந்தபொழுது    இங்கும்  கண்ணைக்கட்டிய வாழ்க்கைதானோ…?  என  யோசித்திருப்பார்.

ஆனால்,  அவர்  இங்கு  வந்த  காலத்தில்  இலங்கையிலிருந்து  வந்த சிலர்  தமது  பொதிகளுடன்  இலக்கியத்தையும்  சுமந்து வந்திருந்தனர்.   அதனால்  விஜயராணிக்கு  அவுஸ்திரேலியா நால்வகை  பருவகாலங்களைக்கொண்டிருந்தாலும்  கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில்   வசந்த காலம்தான்.

இலங்கையில்,   மத்திய  கிழக்கில்,  இங்கிலாந்தில்  அவர் வாழ்ந்தபோது  செய்ய இயலாமல்போன  ஒரு  ஆக்கபூர்வமான செயலை  அவர்  இங்கு செய்தமைக்கு  இங்கிருந்த  அவருக்கு இங்கிதமான  இலக்கியச்சூழல்தான்  காரணம்.  இங்குதான்  அவருடைய   முதல்  கன்னிமுயற்சி  கன்னிகாதானங்கள்  நூல் வெளியானது.

1989  ஆம்  ஆண்டு  அவர்  இந்த  கங்காரு  நாட்டுக்குள்  வந்தது  முதல் 2015   ஆம்  ஆண்டு  இறுதியில்  இங்கிருந்து  விடைபெற்றது வரையில், அவர்  சுவாசித்தது  கலை,  இலக்கியக்காற்றைத்தான்.

Continue Reading →

மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு! விஜயதாரகை வெளியீடு!

அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான,  கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015  ஆம் திகதி மறைந்த   திருமதி…

Continue Reading →

முகநூல் பதிவுகள்: காய்தல் உவத்தல்!

- நந்தினி சேவியர் -விமர்சனம் என்றால் என்ன என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன். நான் ஒரு வாசகன். எனக்கு என்கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தவித சங்கோசமும் இருந்ததில்லை..  எனக்கு வேண்டியவர், என்னோடு ஒன்றாகப் படித்தவர்.. எனது கொள்கையை ஏற்று கொண்டவர்…என்பதற்காக ஒரு படைப்பாளியை ஏற்றி போற்றவோ….விரோதமானவார் உடன்பாடற்றவர் என்பதற்காக அவரது நல்ல படைப்புகளை நிராகரிக்கவோ நான் ஒருப்படேன். விமர்சனம் ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது என்பதிலும் நான்காட்டமான கருத்துள்ளவன்..

கே.டானியல்…. ஒரு மா.ஓ வாதி. அவர் சாதி அமைப்புக்கு எதிரானவர் அதற்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். ஆனால் தலித்திய சிந்தனையாளர் அல்ல. சாதிச்சங்கங்கள் கூடாது என்கிற சிந்தனையாளர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கச் செயற்பாட்டாளர். இதனை சிலர் மறைக்கப் பார்ப்பது உண்மையில் கண்டிக்கப்படவேண்டியது.

1975 ஆக இருக்காலம் ..அவரது “போராளிகள் காத்திருக்கின்றனர்” நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்திருந்தது. அதற்கான வெளியீட்டு நிகழ்வு. யாழ்/ றிம்மர் மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. தலைமை பேரா. சி தில்லைநாதன் . பேரா.கைலாசபதி சில்லையூர், பாசையூர் தேவதாசன், மற்றும் சிலர் பெயர் நினைவில் இல்லை அவர்களோடு நானும் ஒரு பேச்சாளன்.நிகழ்வுக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக கே டானியலோடு அவரது மோட்டர் சைக்கிளில் நானும் பல இடங்களுக்குச் சென்றேன். குரும்பசிட்டியில் கனகசெந்திநாதன் வீட்டுக்குச் சென்றது நினைவிருக்கிறது… “நாகம்மா இஞ்சை பாரப்பா உவன் டானியல் வந்திருக்கிறான் உவன் பொடியன் நந்தினியும் வந்திருக்கிறான் எதேனும் தின்னக்கொண்டுவா” என்று எம்மை உபசரித்ததும்..அவர் மனைவி வெட்டித்தந்த மாம்பழத்தை சுவைத்ததும் நினைவில் இருக்கிறது. உரும்பிராய், புன்னாலைகட்டுவன்.என்று பல இடங்களுக்கும் சென்று திரும்பினோம்.

வெளியீட்டு நிகழ்வு…  மண்டபம் நிறைந்த கூட்டம்

Continue Reading →

சிறுகதை: மஞ்சள் பட்டு!

பரதன் நவரத்தினம்1

திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் .

நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் .

இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல சம்பளம் ,இரண்டு கார்கள் ,மூத்தமகனுக்கு ஏழு வயது,இளைய மகளுக்கு நாலு வயது . இனி இதைவிட பெரியதொரு வீடு தேவை என்று தீர்மானித்து அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது .இம்முறை இன்னொருவரின் வீட்டை வாங்காமல் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றை வாங்குவது என்று தீர்மானித்து எந்த இடத்தில் வாங்குவது ,எந்த வீடு கட்டும் நிறுவனத்திடம் கட்டக்கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் இருவரும் இறங்கிவிட்டார்கள் .

Continue Reading →

சிறுகதை : புனிதமலர்

சிறுகதை : புனிதமலர்பரதன் நவரத்தினம்1.

“தம்பி அவசரம் ஒருக்கா இந்த வார விடுமுறை வீட்டிற்கு வா ” கடிதத்தை வாசித்த பின் அதை மேசை மீது போட்ட மணிவண்ணன் அம்மா ஏன் அவசரமாக வரசொல்லி எழுதியிருகின்றார் என்ற அந்த வரி மட்டும் மனதை குடைந்துகொண்டிருந்தது .

என்னவாக இருக்கும் ?

“பெண் பார்த்திருகின்றேன் வந்து பார் என்பாரோ ,இவன் வரகுணன் படிக்கின்றான் இல்லை, உன்னை பார்க்கவேண்டும் போலிருந்தது”

அம்மா அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை அப்படி எழுதினாலும் சுகம் கேட்பதும் இப்படியான விடயங்களும் தான் அதில் இருக்கும் .

இரண்டு வருடங்களுக்கு முதலும் இப்படி ஒரு கடிதம் வந்தது, அடித்து பிடித்து மணிவண்ணன் வீட்டிற்கு ஓடினால்

“உன்ரை தம்பி இவன் வரகுணன் இனி ஒன்பதாம் வகுப்பு. அவனை கலைப்பிரிவில் விட்டு விட்டார்கள் வெளியில் விடயம் தெரிய வரமுதல் ஒருக்கா போய் பாடசாலை அதிபரை சந்தித்து அவனை விஞ்ஞானபிரிவிற்கு மாத்திபோட்டுவா. ” என்கின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் தனது முகநூல் பதிவொன்றில் விமர்சனம் பற்றிக்குறிப்பிடும்பொழுது குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தைக்கவர்ந்தது. அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “டானியல் யார் ..அவரது கொள்கை என்ன என்பது உங்களுக்குத் தெரியும் வீரகேசரி நிறுவனம் யாருடையது என்றும் உங்களுக்குத்தெரியும்….. அந்த நிறுவனம் டானியலின் நாவலை வெளியிடுகிற தென்றால் ஒன்று வீரகேசரி டானியல் பக்கம் மாறி இருக்கவேண்டும் அல்லது டானியல் வீரகேசரியின் பக்கம் மாறி இருக்கவேண்டும்.. இதில் யார் யார் பக்கம் மாறியுள்ளார்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்றேன். கூட்டம் நிசப்தமாக இருந்தது.”

இருவருமே ஒருவர் ஒருவர் பக்கம் மாறியிருக்க வேண்டுமென்று எந்தவிதக் கட்டாயமுமில்லை. டானியலுக்குத் தன் படைப்பு பல வாசகர்களிடம் செல்ல வேண்டும். வீரகேசரி நிறுவனத்துக்கு எந்தவொரு படைப்பும் இலாபம் ஈட்டி வருமானத்தைத்தர வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பாவித்துக்கொள்கின்றார்கள். ஆனால் டானியல் வீரகேசரி நிறுவனத்துக்காகத் தன் படைப்பின் உள்ளடக்கத்தை அல்லது வரிகளை மாற்றிச் சமரசம் செய்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எவ்வளவோ நல்ல மார்க்சிய நூல்களை மேற்கு நாடுகளின். இலாபம் ஈட்டிச் சம்பாதிப்பதையே அடிப்படையாகக்கொண்ட பதிப்பகங்கள் பல வெளியிட்டுள்ளன. மார்க்சின் மூலதனம், மார்க்சின் வரலாறு போன்றவற்றையெல்லாம் , கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எல்லாவற்றையும் அவை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் எல்லாம் மார்க்சியத்தத்துவத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்டன என்று கூற முடியுமா?

Continue Reading →

இலங்கை அரசியல்: இலங்கையின் மிகவும் மோசமான தலைவர்கள் இருவர்!

'தம்மிஷ்ட்டர்' ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.மகிந்த ராஜபக்சஇலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களில் மிகவும் கீழ்த்தரமான அல்லது மோசமான தலைவர்களாக நான் கருதும் இருவர்:

1. ஜே.ஆர்.ஜெயவர்த்தனே
2. மகிந்த ராஜபக்ச

ஏன் ஜே,ஆர்?

1. ஜே.ஆர். ஐம்பதுகளின் இறுதியில் கண்டிக்குப்பாத யாத்திரை சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக்கிழிக்கக் காரணமாகவிருந்தவர்.

2. 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும், நடைபெற்ற இனக்கலவரத்தின் போது ‘போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்’ என்று முழங்கிக் கலவரத்தைப்பற்றியெரிய வைத்தவர்.

3. ‘தர்மிஷ்ட்டர்’ என்று தன்னை அழைத்துக்கொள்வதை விரும்பும் இவர் தம்மிஷ்ட்டராகி, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகத்தன்னைப்பிரகடனப்படுத்தி, தன் ஆட்சிக்காலத்தை அதிகரித்தவர்.

4. சிறிலங்காவின் முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர். தன் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தன் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் பலரின் ஆதரவுடன் ( குறிப்பாக சிறில் மத்தியூ வெளிப்படையாகவே தமிழர்களுக்கெதிராக இனவாதத்தை நிகழ்த்தி வந்தார்) தமிழர்களுக்கெதிராக மிகப்பெரிய இனக்கலவரத்தை 1983இல் ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கெதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டம் சர்வதேசப்பரிமாணங்கள் பெற்று வெடிக்கக்காரணமாகவிருந்தவர்.

Continue Reading →