ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

“அருகிவரும் தமிழரின் பாரம்பரியக்கலைகள்”

நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை:
“வில்லுப்பாட்டு”     பொன்.அருந்தவநாதன் B.A(Hons) M.Phil

சிறப்பு பேச்சாளர்கள் உரை:
“வசந்தன்கூத்து” – பேராசிரியர்.இ.பாலசுந்தரம்
“பறைமேளக்கலை” – ச.இரமணீகரன்  B.A(Hons) M.A
“வடமோடி,தென்மோடிக்கூத்து” – கலாநிதி.க.மதிபாஸ்கரன்
“இசைநாடகங்கள்” – திருமதி.பூங்கொடி அருந்தவநாதன்  B.A(Hons) Dip.in.Edu

Continue Reading →

“தமிழ் மரபுத்திங்கள்” – விளக்கமும், கலந்துரையாடலும். வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

"தமிழ் மரபுத்திங்கள்" - விளக்கமும், கலந்துரையாடலும். வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

Date: Sunday, January 10, 2016
Time: 8:30 – 9:30 ET
Location: By Conference Call

Telephone Number: (641) 715-3670
Passcode: 873905

அனைவருக்கும் வணக்கம். வரும் ஜனவரி 10-ஆம் தேதி இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப்பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும்.

சொற்பொழிவு:- “தமிழ் மரபுத்திங்கள்” – விளக்கமும், கலந்துரையாடலும்.
வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

Continue Reading →

‘காவியத்துக்கு ஒரு மஹாகவி!’ – வ.ந.கிரிதரன் –

– கவிஞர் மஹாகவியின் பிறந்த தினம் ஜனவரி 9. அதனையொட்டிய பதிவிது.-

கண்மணியாள் காதை -- மஹாகவி -கவிஞர் மஹாகவி -
‘காவியத்துக்கு ஒரு மஹாகவி’ என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் ‘கண்மணியாள் காதை’ காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் ‘சடங்கு’ என்று ‘விவேகி’யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் ‘கண்மணியாள் காதை’ . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் ‘கண்மணியாள் காதை’ தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி ‘ஈழநாடு’ பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த ‘தேனி’யின் விமர்சனம்  ‘காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி’ என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி ‘கண்மணியாள் காதை’யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் ‘கண்மணி’, ‘செல்லையன்’ ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான ‘காரிருள்’ காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:

“யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!” எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு –
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

Continue Reading →