நூல் மதிப்புரை: முனைவர் துரை குணசேகரனின் ‘தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு!’

நூல் மதிப்புரை: முனைவர் துரை குணசேகரனின் 'தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு!'“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே”

என்னும் கூற்றுக்கேற்ப, அதன் பொருளை உணர்ந்து கொண்ட நிகழ்வு என் வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தமிழின் தொன்மையினை அதன் கால நிலையில், அந்தந்த காலத்தில் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் புவியின் தன்மையை உணர்ந்துகொண்டும் சூரியனை நோக்கிய பூமியின் நீள்வட்டப் பாதையில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சுழலும் நடு நிலைக் கோட்டுக்குச் சற்று அருகில் கடலை வேலியாக் கொண்டு வள்ளுவர்களும்

`        மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடைய அறன்(குறள் 742)

என்னும் குறளுக்கு ஏற்றாற்போல் ஐவகைத் திணைகளைக் கொண்டும் சூரியனின் வட, தென் செலவை மையமாகக் கொண்டும் ஆண்டுக்கு ஆறு பெரும் பொழுதுகள், நாளுக்கு ஆறு சிறுபொழுதுகளைக் கொண்ட இந்த நிலத்தில் அதன் கால நிலையில் இங்குப் பேசப்பட்ட பல்வேறு நாட்டார் வழக்கினைக் கொண்ட தமிழ் மொழி, அதை உலகமெங்கும் முதன் முதலாக கடலில் சென்று திரும்பி தன் நிலத்திற்குத் திரும்பி உலகக் கடல் வணிகத்தை உருவாக்கிய திரை மீளர்கள் என்ற தமிழர்களின் வரலாற்றை (டாக்டர் கால்டுவெல் திரமிளர் என்பார்) உலகெங்கும் பேணி வரும் என்போன்றவர்களுக்கு தமிழ் நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஓர் ஐயம் 1700 ஆண்டு தமிழ் வரலாற்றில் பிற மொழிகளில் அவற்றைத் தெளிவாகக் காணமுடிகிறது.

Continue Reading →

பத்தி 3: இணையவெளியில் படித்தவை

விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)

இந்த வாரம் நாம் சொல்வனம் 20.12.2015 இதழில் வெளியாகி இருக்கும் தெலுங்குப் பெண் எழுத்தாளர் வோல்காவின் மீட்சி என்னும் சிறுகதையை வாசிப்போம். இந்த சிறுகதையின் தலைப்பிலான தொகுதிக்காக அவருக்கு 2015 சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. புராணங்கள் அல்லது இதிகாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு கதையை, கதாபாத்திரங்களை நவீனக் கதையில் மையப்படுத்தி எழுதும் முறை நமது பண்பாடு பற்றிய ஒரு புதிய கோணத்திலான பார்வையை நமக்கு அளிப்பது.

புதுமைப்பித்தனின் சாப விமோசனம் தமிழில் மிகவும் விவாதிக்கப்பட்ட சிறுகதை. அதை வாசிக்காதவர்கள் இந்த இணைப்பின் வழி வாசிக்கலாம்— சாபவிமோசனம் இணைப்பு.

ராமனும் சீதையும் மணமுடிக்கும் முன்பே வனவாசம் புகும் முன்பே அகலிகைக்கு சாபவிமோசனம் கிடைத்து விடுகிறது. கௌதமரிடம் மன மாற்றம் இருக்கிறது. மனமறிந்து குற்றம் புரியாத அகலிகை குற்றமற்றவள் – சினத்தால் சாபமிட்ட தானே குற்றவாளி என்னுமளவு அவருள் தெளிவு பிறக்கிறது. பிர ரிஷி பத்தினிகளின் இளப்பப் பார்வையும் ஏளனமும் அகலிகையை மனமுடையச் செய்கின்றன. வனவாசம் முடிந்து வரும் சீதையைச் சந்திக்கிறாள். அவளை அக்கினிப்பிரவேசத்தின் மூலம் ஊருக்குத் தன் கற்பை நிரூபிக்கச் சொன்னார் ராமன் என்று தெரிந்ததும் மீண்டும் கல்லாகி விடுகிறாள். மற்றொரு சந்ததி சதானந்தனைத் தவிர வேண்டும் என்று அவளை அணுகும் கௌதமர் கைக்கு அவளது கற்சிலையே கிடைக்கிறது. இதுவே புதுமைப்பித்தனின் சிறுகதைச் சுருக்கம்.

ராமாயணத்தில் (பக்தியுடன்) வாசிப்பவர்களால் அனேகமாக கவனிக்கப் படாமற் போன ஒரு கதாபாத்திரம் ஊர்மிளை (லட்சுமணனின் மனைவி). மைதிலி சரண் குப்த என்னும் செவ்விலக்கிய கால ஹிந்திக் கவிஞர் ‘ஊர்மிளா கா விரஹ்’ என்னும் காவியம் அது வெளியான செவ்விலக்கிய காலத்தில் பக்திப் பரவசமாகாமல் ராமாயணத்தை அணுகிய முன்னோட்டமான முயற்சி என்று நாம் கருதலாம். இந்த நூல் அடிப்படையில் ‘ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் ஆய்வு நூலை நான் எழுதத் தூண்டு கோலாக அமைந்தது. ராமாயணத்தில் சீதை நடத்தப்பட்ட விதம் பெரிதும் விவாதத்துக்கு உள்ளாகிறது. அந்த நூலில் நான் எல்லா கதாபாத்திரங்களின் முரணான நிலைப்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தேன்.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு…

‘பதிவுகள்’ இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை ‘ஆய்வு’ என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர்…

Continue Reading →