இறுதிக்கட்டத்தில் ‘குடிவரவாளன்’!

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

அப்பாடா! ஒரு வழியாக எனது ‘குடிவரவாளன்’ நாவலை இயலுமானவரையில் பிழை திருத்தி ஓவியா பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். பிழை திருத்துவது போல் மிகவும் சிரமமான காரியம் வேறொன்றுமில்லை என்றே தெரிகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பிழை தப்பிப்பிழைத்து விடும் அதிசயத்தை என்னவென்பது. இந்நூலைத் தமிழகத்தில் வெளியிடும் ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகப்புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழ் அகதியொருவன் எவ்விதம் சட்டவிரோதக்குடிவரவாளனாக நியூயார்க் மாநகரில் சுமார் ஒரு வருடம் வரையில் இருப்பினை எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கின்றான் என்பதை விபரிக்கும் நாவல் இது.

நாவலின் ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் 83 இனக்கலவர நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் அத்தியாயங்களாக இருந்தபோதிலும், நாவல் முழுவதும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ,மண்ணையே கதைக்களமாகக்கொண்டு, அங்குள்ள பல்வகை மாந்தர்களைப்பாத்திரங்களாகவும் கொண்டு நடைபோடுகிறது. அந்த வகையில் முக்கியமானதோர் ஆவணமாகவும் இந்த நாவல் நிச்சயம் விளங்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏற்கனவே எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு, என் மகள் தமயந்தியால் சரி, பிழை பார்க்கப்பட்டு வெளியிடுவதற்குத் தயார் நிலையிலுள்ளது. அதனை மின்னூல் வடிவில் என் வலைப்பதிவான http://vngiritharan23.wordpress.com தளத்தில் வாசிக்கலாம். காலம், நேரம் கூடி வரின் அம்மொழிபெயர்ப்பும் நூலுருப்பெறும்.

விரைவில் ‘குடிவரவாளன்’ தமிழகத்தில் வெளிவரும். நூல் வெளிவந்ததும் நூல் பற்றிய மேலதிகத்தகவல்களை அறியத்தருவேன். ஓவியா பதிப்பகத்துக்கும் அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி!

Continue Reading →

நினைவுகளின் தடத்தில் – (3, 4 & 5)

- வெங்கட் சாமிநாதன் -– அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்’ இதழில் மீள்பிரசுரமாகும். – பதிவுகள் –


நினைவுகளின் தடத்தில் – (3)

நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும் மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லியில் புகுந்து சோளக் கொண்டை திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கொண்டை திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல் -3

உண்மை- என ஒன்று இருப்பதாகவும் அதனைப் பாதுகாப்பதாயும் மெய்யியல் விளங்குகிறது எனச் சொல்லிக்கொண்டு அக்காலத்தில் கிரேக்கர்கள் சிலர் திரிந்தனர். மெய்யியலாளர் என்போர் உண்மையின் காவல் நாய்கள் என்றும்,…

Continue Reading →