லண்டனில் ஈழத்;தமிழ் மாணவர்கள் குறித்துக் கலந்துரையாடல்!

லண்டனில் ஈழத்;தமிழ் மாணவர்கள் குறித்துக் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் நெருக்கடியான நிலைமைகள் இருந்த போதிலும் ஒரு மாணவன் அல்லது மாணவி எத்தகைய கல்வி நெறியையும், எத்தகைய தொழில்கல்வியையும் கலந்து முன்னேறுவதற்கான சகல வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்தின் வறிய நிலைமையிலுள்ள பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வருவதே விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். அத்தகைய ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களின் கல்விக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ முன்வருவது அவசியமாகும். யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை விஞ்ஞானக் கல்விக்கான ஆய்வுகூடங்களின்மை, ஆசிரியர்கள் நியமனத்திலும் அவர்களைப் பாடசாலைக்கு நியமித்தலிலும் காணப்படும் பாரபட்சமான தன்மைகள், வடக்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலைமை மிகவும் கவலை தருவதாகவே உள்ளது. மலையகக் கல்வித் துறையிலும் விஞ்ஞானக்கல்விக்கான வளங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன’ என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை லண்டன் உயர்வாசற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில், கடந்த மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை பற்றி சிறப்புரை ஆற்றுகையில் தெரிவித்தார்.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!உளமொத்த காதலர்கள் களவு வாழ்வில் இருந்து திருமண வாழ்வில் இணைதல் வேண்டித் தலைவனும் தலைவியும் சுற்றத்தார் யாரும் அறியாவண்ணம் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லுதல் உடன்போக்கு என்பர். இவ்வுடன்போக்கின் போது, தலைவனும் தலைவியும் தலைவியின் வீட்டார் சார்ந்த சூழல், இயற்கை சார்ந்த சூழல் என இருவகை சூழல்களின் தாக்குதலுக்கு உட்படவேண்டியுள்ளது. இத்தாக்குதலில் தலைவியின் வீட்டார் நிகழ்த்திய வன்முறைப் பதிவுகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

உடன்போக்கு

அலர், இற்செறிப்பு, நொதுமலர் வரைவு, வரைவு கொடாமை போன்ற இடையூறுகள் ஏற்படும் பொழுது, தோழியின் உதவியுடன் தலைவியின் உறவினர் யாரும் அறியாவண்ணம் இல்லறவாழ்வை மேற்கொள்ளும் பொருட்டுத் தலைவியைத் தலைவன் தன்னுடன் அழைத்துச் செல்வது உடன்போக்கு எனப்படும். அதாவது, களவுவாழ்வில் ஈடுபட்டிருந்த தலைவனும் தலைவியும் கற்பு வாழ்வை (திருமணவாழ்வு) மேற்கொள்ளுதல். இவ்வுடன்போக்கு எல்லாக் காலத்தும் நிகழும். இதற்கு, “ஒருவழித் தணத்தற்குப் பருவங் கூறார்” (அகப்பொருள் விளக்கம், நூ.40)  என்று அகப்பொருள் விளக்கம் சான்று பகர்கின்றது.

சங்க இலக்கியத்தில் உடன்போக்குக் குறித்த பாடல்களாக, நற்றிணையில் 21 பாடல்களும், குறுந்தொகையில் 19 பாடல்களும், ஐங்குறுநூற்றில் 40 பாடல்களும், அகநானூற்றில் 36 பாடல்களும், கலித்தொகையில்  ஒரு பாடலும்  என மொத்தம் 117 பாடல்கள் உள்ளன.

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் செவிலித்தாய், நற்றாய் மற்றும் உறவினர்கள் (தந்தை, தமையன்) சென்றதாக மட்டுமே பதிவுகள் காணப்படுகின்றன. ‘தோழி’ தேடிச் சென்றதாகப் பதிவுகள் இல்லை.

Continue Reading →