அகமுகம்: யாவற்றையும் கேள்விக்குட்படுத்துவோம்! நவீன கவிதை சொல்லாக்கப் பிற்புலமும் அதன் வளர்ச்சியும்!

அகமுகம்: எழுத்தாளரும், விமர்சகரும், இதழாசிரியரும் , கவிஞருமான சி.ரமேஷின் வலைப்பதிவு. [அகமுகம்: எழுத்தாளரும், விமர்சகரும், இதழாசிரியரும் , கவிஞருமான சி.ரமேஷின் வலைப்பதிவு. ஆரம்பநிலையிலிருந்தாலும், இவ்வலைப்பதிவில் காணப்படும் படைப்புகள் ஆழமானவை; வரவேற்கத்தக்கவை. ரமேஷ் அவர்கள் தனது வலைப்பதிவினைத் தொடர்ந்தும் வளர்த்தெடுக்க வாழ்த்துகிறோம்; அத்துடன் ‘பதிவுகள்’ வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றோம். – பதிவுகள்-]

அறிமுகக் குறிப்புக்கள்

நவீனம் என்னும் சொல் புதியது, புதுமை, மறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்டமைக்கப்பட்டு தமிழில் வழங்கி வரும் சொல்லாகும். இவற்றிடையே சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பினும் “புதுமை” என்ற அம்சமே பொதுவானதாய் இருப்பது கவனிக்கத்தக்கது. நவீனம் என்னும் சொல்லை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” என வரையறுக்கும். எனவே நவீனம் என்றால் வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டு புதுமையைச் சார்ந்து நிற்றல் அல்லது புதுமையை நாடிச் செல்லல் எனப்பிறிதொரு வகையில் பொருள் கொள்ளலாம். நவீன கவிதையுருவாக்கத்தில் நவீனத்துவத்தின் பண்புகள் இன்றியமையாதவையாகும். நவீனத்துவம் என்பது சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு வளர்ச்சி நிலையைச் சுட்டுகின்றது. கிறிஸ்தவ இறையியலுக்கூடாக அடையாளம் காணப்பட்ட நவீனத்துவம் ஆரம்பத்தில் ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரின்ஸில் ஏர்னஸ்ட்ரெனான், முதலானோராலும் இங்கிலாந்தில் பெடரிக்ஹேன் ஹ்யூகல், இத்தாலியில் அன்டானியோ போலஸ்டோ ரோமலோ போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் இயக்கத்தை நிறுவிய பிரிட்டிஸ் மதப் பேச்சாளரான ஜான்நியூமான் மூலம் இலக்கிய உலகில் நுழைந்தது.

Continue Reading →

பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன! நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிக்குப் பாராட்டு.!

பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன! நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிக்குப் பாராட்டு.!பாரிஸ் மாநகரில் எதிர்வரும் 15 -ம் திகதி (15 – 07 – 2012 ஞாயிற்றுக் கிழமை பாரிஸ் மார்க்ஸ் டோர்முவா தேவாலயக் கலையரங்கத்தில் (50 Place de Torcy – 75018 Paris) ”இலக்கிய மாலை” நிகழ்வு சிறப்புற நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புகழ்பெற்ற தமிழகப் படைப்பாளிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம், பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன. டாக்டர் வி. ரி. இளங்கோவனின் ‘தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா”, ‘தினக்குரல்” பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்”, நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்”ää இந்திய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற எழுத்தாளர் இந்திரனின் ‘தோட்டத்து மேசையில் பறவைகள்”, இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதியின் ‘சங்கம்” நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ””Le Réveil” ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

Continue Reading →

நூல் வெளியீடு: அகாலம்-புஷ்பராணி (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்)

அகாலம்-புஷ்பராணி (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்)

அகாலம்-புஷ்பராணி (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்) 
காலம்-30-06-2012 (சனி)
மாலை 5 மணி

Continue Reading →

சிறுகதை: ‘சூரிய கிரஹணத்தெரு’

 கமலாதேவி அரவிந்தன் -ராமக்காவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

“பிரியாணி சோறு இம்புட்டு ருசியாக்கூட இருக்குமா? ஊரிலேன்னா பேருக்கு ஒருகறித்துண்டும், ஒரு துண்டு எலுமிச்சிக்காயும் கடிச்சுக்கிட்டு சாப்புட்ட அனுபவம்தான். ஆனா இங்கேனா எவ்ளோ சோறு,! எம்மாம் பெரிய கோழித்துண்டு, அட, இதுதான் லெக்பீஸா? நிறைய கொழம்பு, இன்னும் வெள்ளிரிக்காயும், அன்னாசியும் போட்ட, இனிப்பும் புளிப்புமான மேங்கறி, அப்புறம் தயிரில ஊறவச்ச என்னமோ ஒரு அயிட்டம், யப்பா, இன்னா ருசி, இன்னா ருசி, நாக்கெல்லாம் தேனா சொக்கிப்போச்சு போ!”

ராமக்காவைப் போலவே தான், ஊரிலிருந்து வந்திருந்த மத்த பொண்ணுங்களுக்கும் கூட, சாப்புட்டு முடிச்ச உடனேயே முகத்தில அப்படியொருபிரகாசம். 

Continue Reading →

உமர் கய்யாமின் ருபாய்யத்

ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது  ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் ஆரம்ப வருடங்களில் எப்போதோ. அப்போதே உடன் பின் தொடர்ந்தது ச.து.சு. யோகியின் மொழிபெயர்ப்பும். எனக்கு நினைவில் இருப்பது என்னவோ தேவியின் ஒரு பாடலின்  வரிகள் மாத்திரமே. “வெயிலுக்கேற்ற நிழலுண்டு, கம்பன் கவியுண்டு” என்று நீளும் அது. பாரசீக வாசனையற்ற தமிழ்க் கவிதையாக. ஆனாலும் மிக இனிமையான கவிதைகள் அவை. தேவியின் ஆளுமையே அவர் கவிதையிலும், இனிமை, மென்மை, சாந்தம். வி. ஆர். எம் செட்டியார் என்ற பெயர் கூட எனக்கு ருபாய்யத் மொழிபெயர்ப்பு என்று பேசும்போது நினைவுக்கு வருகிறது. இந்த நினைப்பு பிரமையாகக் கூட இருக்கலாம். ஏனெனில், வி.ஆர். எம். செட்டியார் என்ற ஒரு கவிஞர் இருந்தார் என்ற பிரஸ்தாபம் கூட இப்போது இல்லை. - வெங்கட் சாமிநாதன் -ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது  ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் ஆரம்ப வருடங்களில் எப்போதோ. அப்போதே உடன் பின் தொடர்ந்தது ச.து.சு. யோகியின் மொழிபெயர்ப்பும். எனக்கு நினைவில் இருப்பது என்னவோ தேவியின் ஒரு பாடலின்  வரிகள் மாத்திரமே. “வெயிலுக்கேற்ற நிழலுண்டு, கம்பன் கவியுண்டு” என்று நீளும் அது. பாரசீக வாசனையற்ற தமிழ்க் கவிதையாக. ஆனாலும் மிக இனிமையான கவிதைகள் அவை. தேவியின் ஆளுமையே அவர் கவிதையிலும், இனிமை, மென்மை, சாந்தம். வி. ஆர். எம் செட்டியார் என்ற பெயர் கூட எனக்கு ருபாய்யத் மொழிபெயர்ப்பு என்று பேசும்போது நினைவுக்கு வருகிறது. இந்த நினைப்பு பிரமையாகக் கூட இருக்கலாம். ஏனெனில், வி.ஆர். எம். செட்டியார் என்ற ஒரு கவிஞர் இருந்தார் என்ற பிரஸ்தாபம் கூட இப்போது இல்லை. இப்போது க்ரியா ராமகிருஷ்ணன் முனைப்பில் இன்னொரு மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. முன் வந்துள்ள மொழிபெயர்ப்புகளெல்லாம் ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழி பெயர்ப்பின் வழி வந்தவை. அதில் ஒன்றும் தவறு சொல்வதற்கில்லை. மிகப் பிரபலமாகத் தெரியவந்த நமக்குத் தெரிய வந்த ஒரே மொழிபெயர்ப்பு அது. ஆனால் கிடைக்கும் நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பீட்டர் அவெரி –ஜான் ஹென்ரி ஸ்டப்ஸின் மொழிபெயர்ப்பை ஆதாரமாகக் கொண்டது ஆசை, தங்க ஜெயராமனின் துணையோடு மொழி பெயர்த்துள்ளது இது. இன்னொரு முக்கியமான விஷயம் நமக்கு ஃபிட்ஜெரால்டு மூலமும் இன்னும் பல தமிழ் மொழிபெயர்ப்புகள் மூலமும் கிடைத்த ருபாய்யத் பாடல்கள் முழுமையானவை அல்ல. அவெரி-ஸ்டப்ஸின் மொழிபெயர்ப்பில் இருக்கும் 235 பாடல்களில் இப்போது 215 ஆசையின் மொழிபெயர்ப்பில் கிடைத்துள்ளன. ஃபிட்ஜெரால்ட் நமக்குத் தந்ததை விட இரண்டு மடங்குக்கும் மேல். ஆனால் ஐம்பதுகளில் இது படிக்கக் கிடைத்த போது பெரும் மயக்கத்தைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். தேவி அதை மிக நன்றாகவே தமிழ்ப் பாடல்களாக்கி யிருந்தார். எட்வின் அர்னால்டின் லைட் ஆஃப் ஏஷியா வையும் தான். ஆசிய ஜோதி என்று.

Continue Reading →

சிறுகதை: நெய் பிஸ்கட்

ஜெயந்தி சங்கர் -“பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ. எழுபதைக் கடந்த ஒரு மூதாட்டியின் வாயிலிருந்து இப்படியான சொல் வருவதென்றால்? என்ன சொன்னார் என்றே புரியாதபடி முதலில் மிகுந்த மென்குரலில் முனகினார். இரண்டாவது தடவை சற்றே குரலை உயர்த்திச் சொன்ன போது தான் எனக்கு சொற்களே புரிந்தன. கைபேசியில் மின்னிய இலக்கத்திலிருந்து தான் கூப்பிட்டது ஃபாதிமா என்றே தெரிந்தது. நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்த போதிலும் பல்லாண்டுகளாகத் தனியே இருந்தார்கள் அவரும் அலியும். அதை நினைத்து மறுகுவதே அவர்கள் அனுபவிக்கும் ஆகக் கொடிய துயரம். இரண்டு மணிநேரமாகச் சூழலை மறந்து மூழ்கியிருந்த முக்கியக் கோப்பிலிருந்து என் கவனம் முற்றிலும் விலகியிருந்தது.

Continue Reading →

திருக்குமரனின் ‘விழுங்கப்பட்ட விதைகள்’ மீதான எனது பார்வை!

திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!முல்லை அமுதன்உலகை  அசைத்துப் பார்க்கிற  படைப்புக்கள்  நமக்கு  அவசியம்  தேவையாக இருக்கின்றது. மறுக்க முடியாத  படி தொடர்ச்சியான  அவலங்களை  காலம்  நமக்கு  தந்து கொண்டிருகின்றது. முடிவில்லாத  சோகத்திலும்  ஓரளவேனும்  ஒத்தடம்  கொடுப்பது  போல ஈழத்து படைப்புக்கள் அமைந்துவிடுகின்றன. மஹாகவி  போன்றோரால்  தொடக்கி  வைக்கப்பட்ட  மண்,மக்கள் சார்ந்து  சிந்திக்க  வைக்கிற  கவிதைகளை  வாசிக்க  வைத்திருபதற்காக  காலத்திற்கு  நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இடப்பெயர்ச்சி, யுத்த அவலம்,இனசம்ஹாரங்கள் என தொடர்கின்ற  நமது  ரண களப் பயணத்தில் திருக்குமாரன்  வரை  தம்  படைப்புக்களூடே மறைக்கப்பட்ட, மறைக்கப்படமுடியாத  தடங்களை சொல்லிவைக்கிறார்கள். புதுவையின் உச்சஸ்தாயிலமைந்த  கவிதையிலிருந்து மாறுபட்டதாக கருணாகரன், சித்தாந்தன், துவாரகன், தீபச்செல்வன், அமரதாஸ், முல்லைக்கோணேஸ், ஆதிலட்சுமி, கப்டன். வானதி, மேஜர்.பாரதி, நிலாந்தன், போஸ், அகிலன், யோ.கர்ணன் எனப் பலர்  போர் அவலங்களை  சொல்லி  வந்திருக்கிறார்கள். வித்தியாசமான வடிவமைப்பில் ஆழமாக மனதில் படியும்  வண்ணம்  எழுதுபவர்கள் வரிசையில்  திருக்குமாரனும்  இடம்பெறுகிறார்.

Continue Reading →

Statement by the Prime Minister of Canada on National Aboriginal Day

Prime Minister Stephen HarperAboriginal peoples have made immense contributions to our nationJune 21, 2012, Ottawa, Ontario-  Prime Minister Stephen Harper today issued the following statement to mark National Aboriginal Day: “Today we celebrate the rich and diverse culture of our country’s Aboriginal peoples and reflect upon the important role they have played and continue to play in shaping modern-day Canada. “Aboriginal peoples have made immense contributions to our nation. First Nations fought as allies in the War of 1812 and in every major conflict since, and their cultures and traditions continue to be an integral part of Canadian identity. The enduring relationship between the Government of Canada and First Nations is one based on mutual respect, friendship and support, and we are committed to working towards deepening this bond.  “Our Government has made strengthening this relationship a priority. For instance, in 2008 we issued an historic apology to former students of Indian Residential Schools, and in 2010, we endorsed the United Nations Declaration on the Rights of Indigenous peoples. In January of this year, we also participated alongside First Nations in the historic Crown-First Nations Gathering to set the context for renewed collaboration.

Continue Reading →

Aboriginal Affairs and Northern Development Canada: National Aboriginal Day History

On June 21st, Canadians from all walks of life are invited to participate in the many National Aboriginal Day events that will be taking place from coast to coast to coast. On June 21st, Canadians from all walks of life are invited to participate in the many National Aboriginal Day events that will be taking place from coast to coast to coast. June 21st kick starts the 11 days of Celebrate Canada! which includes National Aboriginal Day (June 21), Saint-Jean-Baptiste Day (June 24), Canadian Multiculturalism Day (June 27) and concludes with Canada Day (July 1)! On June 13, 1996, the Governor General of Canada proclaimed June 21st to be National Aboriginal Day, offering Aboriginal peoples an excellent opportunity to share their rich, diverse cultures with family members, neighbours, friends and visitors. First Nations, Métis and Inuit people will gather to celebrate and share with spectacular dance, song and theatrical performances both contemporary and traditional that will bring you to your feet! National Aboriginal Day is a fun-filled day for the whole family to enjoy together. National Aboriginal Day is an opportunity to learn more about Aboriginal people and their contributions to Canada. Share in the Celebration

Continue Reading →

கீதா கணேஸின் ‘எத்தனங்கள்’ சிறுகதைத் தொகுப்பிற்கான இரசனைக்குறிப்பு..

எழுத்துத் துறையில் ஆரம்ப நிலையில் இருக்கும் கீதா கணேஸ் தமிழ் இலக்கியப்பரப்பில் தன் கதைகள் மூலம் ஆழமான தடத்தை பதித்திருக்கிறார். அவரது கதைத்தொகுப்பை வாசித்து முடிந்ததும் என்மனதில் எழுந்த இக்கருத்து மிகையானதல்ல.யாழ்ப்பாணத்திற்கு தெற்கே உள்ள வேலணையில் சிற்பனை எனும் ஊரில் பிறந்த கீதா கணேஸ் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறார் யாழ் பல்கலைக்கழகப்பட்டதாரியான இவரது எத்தனங்கள் என்ற சிறு கதைதொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது ஈழத்து இலக்கியப்பரப்பில் ஒரு வறட்சியான போக்குநிலை அவதானிக்கப்படுகின்ற சூழலில் கீதாகணேஸின் கதைகள் வெளிவந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. போர்ச்சூழல் ஓய்ந்து விட்ட நிலையிலும் தமிழ் சமூகத்தில் காணப்படுகின்ற போலித்தனங்கள் மூட நம்பிக்கைகள் வக்கிரங்களுக்கெதிராக போராட வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் உள்ளதை இவரது கதைகள் சுட்டி நிற்கின்றன. தான் வாழ்ந்த சமூகத்தில் காணப்படுகின்ற சமூக போலித்னங்களுக்கெதிராக பகுத்தறிவு குரலாக ஒலிக்கின்ற இவரது கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செய்தியை எமக்குசொல்கின்றன. இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்த கதைகள் பற்றி இங்கு குறிப்பிட விழைகிறேன்.

Continue Reading →